Thursday, August 13, 2009

அரங்கன் சன்னிதியில் தமிழுக்காய் கண்ணீர்மல்கி

அரங்கனின் ஆலயத்தில்
இத்திங்கள் 12ம் நாள்
நான் கேட்ட
கேள்விகள் வரங்கள்
எக்காலம் ஆழ்வார்
நாவில் தவண்ட
தமிழுக்கு விடை
சொல்லும்?




"குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கி"
அரங்கன் நீர்
இருந்து என்ன
பயன்?

ஐயனே,
காத்தற் கடவுளே,
விபூடணிடம் நீர்
கொடுத்த வாக்கைத்
தொலைத்ததேன்?

மாண்டு போன
இனம் கதறியபோது
மந்திர ஒலியில்
மயங்கி இருந்தமை
நீதியா கண்ணா?

இலங்கையைக் காப்பேன்
என்றது தமிழுக்கு
கொடுத்த வாக்கில்லையா?



திருமாலே,
அரங்கா,
நாராயணா,
எழுப்பிய கோபுரம்
கண்களை மறைத்ததோ?

பாண்டவரைக் காத்த
அழகு நாராயணா,

வாடுகிற தமிழுக்கு
அநாதையாய் நிற்கும்
தமிழுக்கு கண்ணனாய்
வருவாய்!
தேரோட்டியாய் வருவாய்!

அரங்கா,
பல்லாண்டு பல்லாண்டு
பாடுகிறேன்
தேனிலும் இனிய
தமிழைக் காப்பாய்!


0 comments: