Saturday, September 4, 2010

சென்னை மாநகரின் வானும்(படமும்)ஒரு பாடமும்

சென்னை மாநகரின் வானை வானிலிருந்து பார்த்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று எண்ணினேன். விமானநிலையத்தில் இருக்கையை உறுதிப்படுத்துபவரிடம் சாளரம் அருகே இருக்கை வேண்டுமெனக் கேட்டேன். சாளரத்துக்கு அருகாமையில் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டமையினால் எனது அலைபேசியின் உதவியுடன் சென்னை மாநகரின் வானைப் படம் பிடித்துக் கொண்டேன்.












பயணிகளின் அலைபேசிகள் சமிஞ்ஞை பயன்பாட்டில் இருந்தால் விமானிகள் கட்டுப்பாட்டு அறையுடன் பேணுகின்ற தொலைத்தொடர்ப்பு அலைவரிசைகளில் இடைஞ்சல்களை ஏற்படுத்தும் என்பதால் சமிஞ்ஞைப் பயன்பாட்டிலிருந்து அலைபேசியைத் துண்டித்திருந்தேன்.

இப்படித்தான், ஒருமுறை சத்திரசிகிச்சை அறையினுள் சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சமிஞ்ஞை அலைகளால் இயங்கும் கருவியொன்று எவரோ ஒருவர் அலைபேசி பயன்படுத்தியதன் காரணமாக நின்றுவிட்டது. எவ்வளவு முயன்றும் அலைபேசியை பாவிப்பவரைக் கண்டுகொள்ள முடியாமல் போனதால், சமிஞ்ஞை அலைகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இடைஞ்சல் காரணமாக சத்திரசிகிச்சைக் கருவியை மீண்டும் இயக்கமுடியவில்லை. சத்திரசிகிச்சையும் பரிதாபகரமாக தோல்வியில் முடிந்து நோயாளரின் உயிரைக் காவுகொண்டது.

எனவே; சென்னை மாநகரின் வான் காட்சியைக் கண்டு இன்புற்ற உறவுகளே, மருத்துவமனைகளுக்குள் நுழையும்போது உங்கள் அலைபேசியை(கைபேசியை) சமிஞ்ஞை தொடர்பிலிருந்து துண்டித்துவிடுங்கள். நோயாளர்களின் உயிருக்கு தீங்குவிளைவித்துவிடாதீர்.
அதுபோல் விமானத்திலும் சமிஞ்ஞை தொடர்பிலிருந்து அலைபேசிகளைத் துண்டிப்பது உங்களின் உயிரையும் உங்களுடன் பயணிக்கும் சகபயணிகளின் உயிரையும் பாதுகாக்கும் என்பதில் நினைவில் கொள்க.

சென்னை மாநகரின் வானும்(படமும்) ஒரு பாடமும் என்ற தலைப்பு மெத்தச் சரிதானே?