Thursday, August 13, 2009

காண்டம் புதிரும் புனிதமும் கொண்டதா?

காண்டம்! முழுக் காண்டமும் கேட்டேன்.சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனானாலும் காண்டம் சொன்ன விதம், சொல்ல முன்னர் தொடுத்த கேள்விகள் நம்பிக்கையை பெரிதும் ஏற்படுத்தவில்லை.அவநம்பிக்கையையும் சேர்த்தே ஏற்படுத்திற்று. ஆனாலும்?

நம்பிக்கைக்கு அவ
நம்பிக்கை ஒன்றுக்கு
ஒன்றென்ற விகிதம்!

நம்பிக்கையா அவ
நம்பிக்கையா
மேலோங்கும் என்பது
காலம் உணர்த்தும்!

சென்ற பிறவி
கூடல் மாநகர்
மதுரை திருமண்ணில்
பிராமணன்!

செய்த பாவம்
பிராமண தொண்டை
மறந்தமை!

பெற்ற பேறு
ஈற்றில் பெற்ற
புத்தி!
ஆதலால் மறுபிறவி
மீண்டும் அரிய
மனிதப் பேறு!

தூய்மையற்ற பிராமணரே,

உருத்திராக்கத்துடன் தங்கம்
ஜொலிக்க ஆபரணம்
பூண்டு
முப்புரிநூலில் சாவிகளையும்
சாமான்களையும் முடிஞ்சு
சனத் ஜெயசூரிய
வந்ததும் செய்யும்
பூசையை கைவிட்டு
விழுந்தோடிச் சென்று
இராசி நட்சத்திரம்
கேட்கும் பாழப்போன
பழக்கம்

பணத்தைக் கொட்ட
மாலைகளை சூட்டும்
புழக்கம்

சிவாச்சாரியார் பட்டம்
பெற்று சிவாகமம்
மீறும் சொகுசு

ஏனோ தானோ
என்னும் மந்திர
உச்சாடனம்
கருவறைக்குள் நின்று
"ஏன்டா வாடா
எடுடா" என்று கத்தும்
கதறல்கள்

பணம் இருந்தால்
சிறப்புத் தரிசனம்

சாதி
தீண்டாமை
இத்தனையும் வளர்க்கும்
ஆச்சாரியம்

ஐயகோ,
நீவிர் எடுக்கும்
அடுத்தபிறவி கொடூரமே!
மோட்சம் என்பது
இல்லையே!

0 comments: