என் தமிழக உறவுகளே,
நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கவும் தவறைல்லை அம்முறை.
இலங்கைக்கு வந்தவர்.........இலங்கைத்தமிழரின் துன்பத்தை நேரில் கண்டவர்...............ஆனால் ஒருவார்த்தை தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசினார் இல்லை. ஏன்?
இலங்கையில் அவரது திருமதியாரின் ராடன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் அரங்கேறவேண்டும்.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள பின்புலத்தையுடையது.எனவே அவரின் இலங்கை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம்தான்.
இன்று இவர் நடிகர் சங்கத்தலைவர். கர்நாடகத்திற்கு எதிராக பெரிய அளவில் அமைதிப்போராட்டத்தை நடத்தியவர். உடனே எல்லோரும் இவர் தமிழ் உணர்வாளர் என்று முத்திரை குத்திவிட்டனர்.அதை பயன்படுத்தி நடிகர் ரஜனி கர்நாடகத்தில் மன்னிப்பு கேட்டதற்கு கண்டன அறிக்கைவேறு இவரிடமிருந்து.
அரசியல் கட்சிவேறு தொடங்கி உண்மையாகவே நடிக்கும் நடிகர் இவர்.
கர்நாடகத்தில் தமிழன் அடிக்கப்பட்டான் என்று கொதித்தெழுந்தவருக்கு ஈழத்தில் தமிழன் கொல்லப்படுவது கண்ணாலே கண்டும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக!
ஒருவன் இல்லை இருவர் இல்லை............ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர் யுத்தத்தால். பல இலட்சம் பேர் உயிர்காக்க நாடு விட்டு நாடு சென்று அகதியாய் வாழ்கின்றனர்.
உலக செய்தியாய் வந்துவிட்ட ஈழச்செய்தியை ஈழம் சென்றும் தெரியாத இவர் எப்படி தமிழ்பற்றுப்பற்றி பேசும் உரிமைபெற்றார்? கன்னட ரஜனியிடம் தமிழ்பற்றை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் உரிமையை இந்த தமிழ் வேடதாரி எங்கனம் பெற்றார்?
கன்னடத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய துணிந்தவர் ஈழத்தமிழருக்காய் போராட்டம் செய்ய வேண்டி நாம் நிற்கவில்லை தமிழன் எனும் அடைமொழியைக் காட்டி அவரிடம்.
இலங்கை கடலோரத்தில் இறக்கும் தமிழக மீனவருக்காய் ஒரு ஆர்ப்பாட்டம்? இலங்கை அரசை இவருக்கு பகைக்கதுணிவு வராது. ஏனெனில் இலங்கையில் இவரின் மறைமுக வர்த்தகத்திற்கு ஆபத்துவந்துவிடக்கூடாதல்லவா! கர்நாடகத்தில் ரஜனி சொத்து வைத்துள்ளதாக கொக்கரித்த இவரிடம் கொக்கரித்தது நியாயமா என்று கேட்கும் உரிமை சாதரண ஒவ்வொருவருக்கும் உண்டே!
வேண்டுமென்றால் தமிழக உறவுகளே ஒரு விண்ணப்பம் உங்களிடம். இலங்கை அரசால் கொல்லப்பட்ட மீனவருக்கு ஆதரவாய் ஒரு உண்ணாவிரதபோராட்டத்தை நடத்தக்கோருங்கள்.
நடத்தினால் "தமிழக"உணர்வு உண்டு. இல்லாவிட்டால் வெறும் திரையரங்கு தாக்கியதால் ஏற்பட்டவிளைவுதான் தமிழ் திரையுலகின் போராட்டம் என்க.
நடிகர் சரத்குமார் தமிழராய் நடிக்கும் நல்ல நடிகர் என்க.அவ்வளவே. ( இவர்களுக்கு தமிழ்பற்றை காட்ட ரஜனி எனும் தனிமனிதன். அவ்வளவே இவர்கள் பற்று என்று உணர்க.)
நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன். அவரிடம் கையொப்பம் வாங்கவும் தவறைல்லை அம்முறை.
இலங்கைக்கு வந்தவர்.........இலங்கைத்தமிழரின் துன்பத்தை நேரில் கண்டவர்...............ஆனால் ஒருவார்த்தை தமிழகத்தில் ஈழத்தமிழர் பற்றி பேசினார் இல்லை. ஏன்?
இலங்கையில் அவரது திருமதியாரின் ராடன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் அரங்கேறவேண்டும்.சக்தி தொலைக்காட்சி இலங்கையின் சிங்கள பின்புலத்தையுடையது.எனவே அவரின் இலங்கை வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம்தான்.
இன்று இவர் நடிகர் சங்கத்தலைவர். கர்நாடகத்திற்கு எதிராக பெரிய அளவில் அமைதிப்போராட்டத்தை நடத்தியவர். உடனே எல்லோரும் இவர் தமிழ் உணர்வாளர் என்று முத்திரை குத்திவிட்டனர்.அதை பயன்படுத்தி நடிகர் ரஜனி கர்நாடகத்தில் மன்னிப்பு கேட்டதற்கு கண்டன அறிக்கைவேறு இவரிடமிருந்து.
அரசியல் கட்சிவேறு தொடங்கி உண்மையாகவே நடிக்கும் நடிகர் இவர்.
கர்நாடகத்தில் தமிழன் அடிக்கப்பட்டான் என்று கொதித்தெழுந்தவருக்கு ஈழத்தில் தமிழன் கொல்லப்படுவது கண்ணாலே கண்டும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடர்களாக!
ஒருவன் இல்லை இருவர் இல்லை............ஒரு இலட்சம் பேர் இறந்துவிட்டனர் யுத்தத்தால். பல இலட்சம் பேர் உயிர்காக்க நாடு விட்டு நாடு சென்று அகதியாய் வாழ்கின்றனர்.
உலக செய்தியாய் வந்துவிட்ட ஈழச்செய்தியை ஈழம் சென்றும் தெரியாத இவர் எப்படி தமிழ்பற்றுப்பற்றி பேசும் உரிமைபெற்றார்? கன்னட ரஜனியிடம் தமிழ்பற்றை அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கும் உரிமையை இந்த தமிழ் வேடதாரி எங்கனம் பெற்றார்?
கன்னடத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய துணிந்தவர் ஈழத்தமிழருக்காய் போராட்டம் செய்ய வேண்டி நாம் நிற்கவில்லை தமிழன் எனும் அடைமொழியைக் காட்டி அவரிடம்.
இலங்கை கடலோரத்தில் இறக்கும் தமிழக மீனவருக்காய் ஒரு ஆர்ப்பாட்டம்? இலங்கை அரசை இவருக்கு பகைக்கதுணிவு வராது. ஏனெனில் இலங்கையில் இவரின் மறைமுக வர்த்தகத்திற்கு ஆபத்துவந்துவிடக்கூடாதல்லவா! கர்நாடகத்தில் ரஜனி சொத்து வைத்துள்ளதாக கொக்கரித்த இவரிடம் கொக்கரித்தது நியாயமா என்று கேட்கும் உரிமை சாதரண ஒவ்வொருவருக்கும் உண்டே!
வேண்டுமென்றால் தமிழக உறவுகளே ஒரு விண்ணப்பம் உங்களிடம். இலங்கை அரசால் கொல்லப்பட்ட மீனவருக்கு ஆதரவாய் ஒரு உண்ணாவிரதபோராட்டத்தை நடத்தக்கோருங்கள்.
நடத்தினால் "தமிழக"உணர்வு உண்டு. இல்லாவிட்டால் வெறும் திரையரங்கு தாக்கியதால் ஏற்பட்டவிளைவுதான் தமிழ் திரையுலகின் போராட்டம் என்க.
நடிகர் சரத்குமார் தமிழராய் நடிக்கும் நல்ல நடிகர் என்க.அவ்வளவே. ( இவர்களுக்கு தமிழ்பற்றை காட்ட ரஜனி எனும் தனிமனிதன். அவ்வளவே இவர்கள் பற்று என்று உணர்க.)