Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ?

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்.குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். "யஸ்வந்" என்று பெருமையோடு கூறினார் அத்தாயார்!அப்பன் தமிழனில்லையோ என்றுநினைத்துக்கொண்டேன்!

ஒருகாலத்தில்
நல்லதம்பி,வெற்றிவேல்,முருகன் என்றுபெயர்வைத்து பெருமைகொண்ட தமிழ்ச்சாதி,இன்று யஸ்வந் என்று பெயர்வைக்கும் இழிநிலை!அவ்வளவுதான்!
ஒருசில பெற்றோர் அப்பாவின் முதல் எழுத்தும் அம்மாவின் கடைசியெழுத்தும் என்று பொழிப்புரை வழங்குவர்! அப்பாவின் பெயர்
 "ச" எழுத்தில் தொடங்குவதாகவும் அம்மாவின் பெயர் "னி" என்ற எழுத்தில் முடிவதாகவும் இருப்பின் சனி என்று பிள்ளைக்கு பெயர் வைப்பார்களா?

 அடச்சீ! தன் பண்பாட்டின் பெருமைகளை சீர்குலைக்கும் இனம் ஒரு
இனமா? தமிழர் குலத்துக்கு ஏன் தான் இப்படியொரு இழிநிலை?


Monday, November 12, 2012

தீபாவளியும் கருப்புச்சட்டை அரசியலும் பெண்ணியமும் சின்னத்திரையும்!

கருப்புக் கண்ணன் ஆரியனாக இருக்க வாய்ப்பேயில்லை....

சிவபெருமானின் இடப்பாகத்தை உமையம்மை பெற்ற திருநாளே தீபாவளித்திருநாள்!!! இவ்வண்ணமே பண்டுதொட்டு தமிழர் கொண்டாடினர்!

நாடகத்திற்காய் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மூழ்கியிருந்தால் எப்படி பெண்களுக்கு சமவுரிமையும் சுதந்திரமும் கிடைக்கும்?

கட்டுரையை முழுமையாகப் படிப்பதற்கு:-
http://sivathamiloan.blogspot.com/2012/11/blog-post.html