Thursday, April 9, 2009

பாரதிதாசனின் இராவணன்

பாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு அப்பாடலைப் பதிவிடுகிறேன். இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்தர் ஏற்றிபோற்றிய சைவக்கொழுந்து இராவண மாமன்னன்.திராவிட ஆரிய யுத்தம் தமிழ்வீரனாகிய இராவணனை சீதையைத் திருடிய பாதகனாய் சித்தரித்துள்ளது என்பதே என் கருத்து.என்ன நீங்கள் சொல்கிறீர்கள்?


தென்றிசையைப் பார்க்கின்றேன்;
என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை
வைத்தோன்! குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!குள்ளநரிச்
செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை!
என்தமிழர் பெருமான்இராவணன்காண்!
அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று
தன்னைவையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்நெஞ்சகனை, நல்யாழின்
நரம்புதனைத் தடவிநிறையஇசைச்
செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும்
சூழ்ச்சிவிரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கும்சஞ்சரிக்கும்
நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்!வீழ்ச்சியுறு
தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை
தன்னைத்தொகையாக எதிர்நிறுத்தித்
தூள்தூ ளாக்கும்காழ்ச்சிந்தை, மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!கடல்போலச்
செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!
ராவ ணன்தன்கீர்த்திசொல்லி
அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


பாரதிதாசன் இருந்திருந்தால் இப்போது யாரைப்பற்றி பாடல் பாடியிருப்பார் என சிந்திக்கையில் நெஞ்செல்லாம் புல்லரிக்கிறது. பாரதிதாசன்; பாட்டொன்று........கலைஞரின் தமிழ்ப்பிழையையும் சரியென கவிபடிக்கும் புலமையொன்று என வாழும் தமிழ்வேடதாரி கவிப்பேரரசுவா என்ன?

0 comments: