Wednesday, May 12, 2010

பெரியாரை அசிங்கப்படுத்திய விடுதலை பத்திரிக்கை

பெரியார் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசியதில் எந்தவிதமான உடன்பாடும் எனக்கில்லை. சாதி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கிய பெரியாரின் மேல் மரியாதை என்றும் உண்டு. பெரியார் சொன்னதெல்லாம் சரியானது என்ற கருத்து இருக்குமென்றால் "எங்களை அறியாமலே பெரியாரைக் கடவுளாய் ஏற்று பெரியார் மதம்" என்று மதநம்பிக்கைக்கு உரியவராகிவிடுகிறோம் !பெரியாரும் மனிதரே என்று கருதி, அவரிடம் பிழையான கருத்துகள் இருந்தன என்பதை பெருந்தன்மையுடன் ஏற்று, அவர் காட்டியவற்றில் நல்லவற்றை எடுத்து நல்லவழியில் நடப்பர் மேன்மக்கள்!

சரி விசயத்துக்கு வருவோம்;
பெரியாரின் புகழ்பரப்பும் பெரியாரின் கட்சியால் நடத்தப்படும் விடுதலை பத்திரிக்கையில் மயிலாடன் என்பவரின் எழுத்தில் "தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து.....(12-5-2010) " என்று கருணையில்லா நிதியின் புகழ்பாடப்பட்டிருப்பது பெரியாருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் விடயமல்லவா?

விடுதலை பத்திரிக்கை கருணையில்லா நிதியை பெரியாரின் சீடர் என்று புகழ்கின்றது.

இலங்கையில் தமிழன்னை இரத்தம் சிந்தி வாடி வதங்கி அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தபோது, "காலைக்கும் மதியத்துக்கும்" இடையில் உண்ணாவிரதம் இருந்து பொய்யுரைத்து இன அழிவை வேடிக்கை பார்த்து அதற்கு ஒத்தாசையும் வழங்கிய கருணையில்லா நிதியும் அவரது வால் வீரமணியரும் தமிழர் தலைவர்கள் என்றோ.........பெரியாரின் சீடர்கள் என்றோ சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்!!!!!!

விடுதலை தமிழரை விழிப்படையச் செய்யவில்லை! தமிழரைக் குருட்டாக்கி வீரமணியரையும் கருணையில்லா நிதியையும் புகழச் செய்கின்றது!!!! இப்படித்தான் சுயநலத்திற்காய் நாத்தீகத்தையும் பரப்புகிறார்கள் எஎன்பதை தமிழர்கள் உணரட்டும்!