Monday, April 26, 2010

பார்வதி அம்மையாரை அவமானப்படுத்திய வீரமணியரும் தமிழ் ஓவியாவும்

பார்வதி தாய் கருணையில்லா நிதியின் உதவியைப் பெற்று தமிழகம் வரவேண்டுமா? தமிழ் ஒவியாவின் கேவலம்!


தமிழ் ஒவியா அவர்களே,

"தாயார் பார்வதி அம்மையாரை கலைஞர் உதவியுடன் வாழ வைப்போம்" என்பது உங்கள் (வீரமணியரின்)கருத்தென அறிந்து தமிழரின் நிலையென்னி சிரிப்பாய் சிரிக்க வேண்டியதாயிற்று!

அவர் வைகோ, நெடுமாறனின் உதவியுடன் வாழக்கூடாது என்றா கலைஞர் திருப்பி அனுப்பிவைத்தார்? யாருக்கும் சொல்லாதது வேறுவிடயம்! தமிழக காவல்த்துறைக்கு தெரிந்தது, காவற்துறை அமைச்சருக்கும் தமிழக முதல்வருக்கும் தெரியாது என்றால் யாரின் காதில் யார் பூச்சுற்றுவது?

கலைஞருக்கு வைகோ, நெடுமாறன் நல்ல பெயர் எடுப்பது பிடிக்கவில்லை. அவர்களுக்கு திருமாவளவன் போல் இலங்கைபோகும் "பாதுகாப்பு" இருக்கவில்லை. எனவே; இலங்கை வந்து உல்டா விட்ட திருமாவளவனை சேர்ப்பதில் உடன்பாடில்லை. முடிவில், கலைஞருக்கு ஜெயலலிதாவின் கடிதம் உதவியது. திருமாவளவனுக்கு "யாருக்கும் சொல்லவில்லையே?" என்ற கேள்வி உதவியது! பழ.நெடுமாறனுக்கும் வைக்கோவுக்கும் ஏமாற்றம்! பாவம்........வயதுபோன பாட்டிக்கு உபத்திரவம்!!!!!!!


இப்ப மட்டும் பெரியார் இருந்திருந்தால், கலைஞரையும் ஜெயலலிதாவின் முந்தானைக்குள் இருந்துவிட்டு, கலைஞரின் சால்வைக்குள் ஒழிந்து கொண்ட வீரமணியரையும் துரத்தித்துரத்தி அடித்திருப்பார் அவரது பொல்லைக் கொண்டு!!!!

தமிழக காவற்துறைக்கு தெரிந்தது தமிழக முதல்வருக்கு தெரியாவிட்டால், அடா அப்படியொரு முதல்வர் தமிழ்நாட்டுக்கு இருக்கத்தான் வேண்டுமா? வெட்கம்! வெட்கம்!வெட்கம்!

உங்கட தலைவர் (அதுதான் வீரமணி) தமிழர் தலைவர் என்றால் எவருக்கும் சோரம் போகாமல் வாழ்ந்து இராஜ இராஜ சோழனை அறியாத உலகத்தாருக்கு, இப்படித்தான் சோழன் வாழ்ந்தான் என்றும், இதுதான் சோழ சாம்ராச்சியத்தின் மாண்பு என்றும், அறிவித்த ஈழத்துச் சோழனை என்னென்று சொல்லுவீர்?

பெரியாரும் சாதியை ஒழிக்கிறேன் என்று சமயத்தை ஒழிக்கப்போய் திராவிட ஆதீக்கமுடைய சைவத்தையும் தென்கலை வைணவத்தையும் புறக்கணித்து இன்று வட ஆதீக்கமுடைய சுமார்த்தத்தை இந்து என்ற பெயரில் தமிழகத்தில் காலூன்ற வழிசமைத்த பிழையான வழிநடத்தல், பிறப்புச் சான்றிதழில் சாதியைப் பதியும் இழிவான நிலையை உருவாக்கி, காலத்தால் மறைக்க முடியாது சாதியை உருவாக்கிவிட்டமை ஆகிய பல பிழைகள் விட்டார்! அதை நீவிர் ஏற்கமாட்டீர்!

வேதநெறியருக்கு வேதம்போல் ,கிருத்தவருக்கு பைபிள்போல், இஸ்லாமியருக்கு குரான்போல், உங்களுக்கு பெரியார்! அவர்கள் அவரவர் மதத்து நூல்களில் இருக்கும் பிழைகளை ஏற்கார்! நீவிரும் ஏற்கீர்! கிருத்தவருக்கு யேசுநாதர்போல் இஸ்லாமியருக்கு நபிபோல், வேதநெறியருக்கு பல்வேறு மகான்கள்போல், உங்களுக்குப் பெரியார்! எனவே பெரியார் மதம் என்று உங்களை அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தானே?

பெரியாரை விமர்சனங்களுக்கு அப்பால் திராவிடத்துக்காய் உழைத்த போராளி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனவே, தமிழர் தலைவர் என்று வீரமணியையும், கலைஞரையும் அழைத்து அந்தப் போராளியைக் கேவலப்படுத்தாதீர்!

சமய பாடம் ( ஒவ்வொருவரும் அவரவர் சமயத்தை கற்ற முடியும் பௌத்த சமய நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையில்) புகட்டாமல் விட்டதால் இன்று தென்னாட்டில் தமிழ்மொழியில் 14 ஆதார நூல்களைக் கொண்டு எழுந்த சைவ சித்தாந்த சைவநெறியையும், வைணவ தென்கலையையும் தமிழர் அறியாதுபோகவே, குமுதம் பக்தி, ஆனந்தவிகடனின் சக்தி, ஆன்மீகம், திரிசக்தி என்று சுமார்த்த வைதீக கொள்கையை இந்துமதமாகப் போதிக்கும் சமய ஊடகங்கள் விருட்சமாகி அவற்றின் கொள்கைகளை தமிழகத்தில் ஊடுருவ வழிசமைத்துவிட்டத்தை இன்றல்ல என்றுமே நீவிர் ஒப்புக்கொள்ளமாட்டீர்!!!!

தமிழில் உருவாகிய திருமுறைகளையோ, திருப்பாசுரங்களையோ அறியாத "சமஸ்கிருத மந்திரங்களை மட்டுமே அறிந்து கொண்ட" சமுதாயத்தை தமிழகத்தில் தோற்றுவித்தது தங்களது பிழையான வழிநடத்தல்களே என்பதையும் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்!!!!

ஆனால் ஒன்று, மதசார்பின்மை என்பது ஒரு மதத்தை எதிர்ப்பது அல்ல! எல்லா மதங்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது!!!!

ஐயா, வீபூதி பூசி சைவவிழாக்களில் கலந்துகொள்ளமாட்டீர்! ஆனால், தொப்பி அணிந்து இஸ்லாமிய விழாக்களில் கலந்துகொள்வார் உங்களுடைய தமிழர் தலைவர்கள்!!!! வரலாற்று ஆசிரியர்கள், கத்தோலிக்க உயர்பீடங்கள் தோமஸ் இந்தியாவுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாது இருக்கும்போது; தமிழகத்தில் அவர் வந்தார், திருவள்ளுவரை சந்தித்தார் என்று கதையடிக்கும் கூட்டத்து விழாவில் கலந்து சிறப்புரையாற்றி வாக்குக்காய் வரலாற்றை மாற்றியெழுதும் கேவலமுடைய கருணையில்லா நிதி மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்!!!! சிரிப்பொலி தாங்கமுடியவில்லை :-D

ஈழத்து சோழன் இப்படி, சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பதில்லை!!! ஒரு மதத்துக்கு எதிர் இன்னொரு மதத்துக்கு பூமாலை என்று வாழ்ந்ததில்லை! அவர் மதசார்பின்மையின் உண்மையான வடிவம்!

தமிழருக்கு உண்மையாய் வாழ்ந்தவரின் தாயார் உங்கள் கேவலங்கெட்ட கருணாநிதியிடம் மருத்துவ மடிப்பிச்சை கேட்கவேண்டிய கேவலத்தை உருவாக்காதீர்! அதைக் கண்டு இரசிக்காதீர்!!!

உடனே, ஜெயலலிதா ஆதரவாளன் என்று எங்கையும் என் கருத்தை திரிவுபடுத்தாதீர்! காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் இருக்கும் கள்ளத்தனமான உண்ணாவிரதத்தை அரங்கேற்றி ஊரைப் பேக்காட்டும் உங்கள் கலைஞருக்கும் அவருக்கு வால் பிடிக்கும் தமிழர் தலைவர் :- ) வீரமணியருக்கும் ஜெயலலிதாவுக்கு தமிழ் உணர்வில்லை என்று சொல்லத் தகுதியில்லை! ஜெயலலிதாவிடன் தமிழ் உணர்வை எதிர்பார்ப்பது தவறு!!! தமிழச்சி அல்லாதவளிடம் தமிழ் உணர்வு இருக்குமா என்ன?

ஆனால் தமிழ்.....தமிழ் என்று ஊரைப் பேக்காட்டும் ("ஏமாற்றும்" என்பதற்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில் இப்படி சொல்லுவர்.........:-) ) உங்கள் மாண்புமிகு கலைஞரும் அவரது வால்பிடியான வீரமணியரும் கேவலம்........அசிங்கம்.........அவமானம்.......போன்ற தமிழின் வடிவங்கள்!!!!

கலைஞருக்கு தனது வேலையைச் செய்ய ஜெயலலிதா ஒரு சாட்டு!!! இதை அனைத்து தமிழரும் அறிவர்! உங்களின் தமிழர் தலைவர் வீரமணியர் அறியாவிடின், அவர் தமிழர் தலைவர் என்ற பட்டத்தை கனவிலும் நினைக்கமுடியாத கேவலமே!!!!

Tuesday, April 6, 2010

வாக்குச்சீட்டு என்னும் அத்திவாரத்தால் வலுவான வீட்டை எழுப்புகவே!

உய்யும் வழி ஏதுமின்றி
தாயகத்தில் நாம்வாடினும்- ஒரு
வீடேனும் ஆறுதலுக்கு
வேண்டுமல்லவா?
வீட்டின் இருப்பு
எமக்கு உறுதியை
தருமல்லவா?
வாழிய எங்கள்
வீடு!
வளர்க்க எங்கள்
வீடு!
தடம் புரளாது
தரணியில் தமிழுக்காய்
வீடு நடைபோட
வேண்டும்!
தமிழின் சால்பை
என்றுமே பேண
வேண்டும்!

வாக்கெனும் அத்திவாரத்தால்
வலுவான வீட்டை
எழுப்புகவே!
தமிழே,
எழுப்புகவே!

நித்தியானந்தரும் பாதிரிகளும் ஐரோப்பா-தமிழக ஊடகங்களும்!!!

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தமிழை சிதைக்கவே (தமிங்கிலத்தை வளர்த்து) உருவாகி உழைக்கின்ற சண் போன்ற தமிழக தொலைக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை சிவகாசிக்காரன் என்னும் வலைப்பதிவு எழுத்தாளர், பாதிரிகள்-நித்தியானந்தர் விடயத்தை வைத்து அருமையாக ஒப்பிட்டுள்ளார் .

நித்தியானந்தர் விடயத்தில் அவருடைய முன்னைய பதிவொன்றில் சமூகத்தை அருமையான கேள்விகள் கொண்டும் ஆராய்ந்துள்ளார். வலையுலகில் அதிகம் பயணிப்பதில்லை. போதியநேரம் இருப்பதில்லை. பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இவரது இவ்விரு பதிவுகளையும் வாசித்தபோது, இவரது இப்பதிவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் "நித்தியானந்தர்" விடயத்தை பலர் ஒரு கோணத்தில் பார்க்க, இவரோ இன்னொரு கோணத்தில் பார்த்திருக்கின்றார். சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

சிவகாசிக்காரன் வலைப்பூ எழுத்தாளரின் குறித்த பதிவுகளைப் படிக்க, கீழ் உள்ள அவரது பதிவுத் தலைப்புகள் மேல் சொடுக்குக!
பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?