Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது. முகாம்களுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவையின் சமூகசேவை பகுதி குழுவினர் முகாம்களின் தேவைக்கேற்ப உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து பேரவை மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கான உடனடி தேவையை நிறைவேற்ற மூன்று குழுக்கள் பேரவையின் மூன்று தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களுக்கு பேரவையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மூவரும் பொறுப்பாளராக உள்ளனர். கல்குடா தொகுதியை சேர்ந்த பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் அத்தொகுதிக்குப் பொறுப்பாளராகவும் மட்டக்களப்பு தொகுதியைச் சேர்ந்த பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் அத்தொகுதி பொறுப்பாளராகவும் பட்டிருப்பு தொகுதியைச் சேர்ந்த ந.புவனசுந்தரம் அத்தொகுதி பொறுப்பாளராகவும் ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் தர்மபுரம் முகாம் செட்டிபாளைய பாடசாலை முகாம் களுதாவளை மகா வித்தியாலய முகாம் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய முகாம் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய முகாம் மாங்காடு சரஸ்வதி வித்தியாலய முகாம் போன்றவற்றுக்கு சிறுவர்களுக்கான உதவிகள் வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பேரவையின் பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் தெரிவித்தார்.

நன்றி:- தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?22uIBZ203VjQ64e2OGpDcb3N92gdd3i294bc3XpGce406Qjd02eBLIa2


குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!

குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!

வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.

அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர்


கனடாவில் உள்ளவர்கள் உதவக்கூடிய வழி

செல்வச்செழிப்பும் இயற்கைவளமும் கொண்ட கிழக்கிலங்கையில் போர்ப்பறையால் உயிர் உடமைகள் என்பன சின்னாபின்னமாகி ஓய்ந்து பின்அதிலிருந்து எழும்பும் முன்னே எஞ்சியிருந்ததும் ஆழிப்பேரலையில் மீண்டும் அமிழ்ந்துபோக குறையுயிராக தலையை நிமிர்த்த மீண்டும் ஒரு வரலாறுகாணாத பெருவெள்ளம் மீதியிருந்த உடமைகளையும் காவுகொண்டுவிட்டது.
தொடர்ந்து பெய்யும் மழையினாலும் ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்த குளங்கள் கிராமம் கிராமமாக அடித்துச்செல்கின்றது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, மூதூர், திருமலை பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி எம் உறவுகள் மீண்டும் மீண்டும் உணவின்றி, உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது.

ஒரு வேளையாயினும் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்காகவும் கல்வியின்றி கவலையில் வாழும் இளம்சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாமனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவிக்கரம் நீட்டவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இங்கு தனித்தன்மையுடன் பல நல்ல நோக்கங்களைக்கொண்டு செயல்படும் அனைத்து சமூக அமைப்புக்களும் ஒன்றாக கைகோர்த்து இந்த பாரிய அவலநிலையிலிருந்து நம் உறவுகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளை வழங்கிட முன்வர வேண்டும் என்று உருக்கமாய் வேண்டுகின்றோம்.

இந் நிதி சேகரிப்பினை கிழக்கிலங்கையைச் சேர்ந்த பின்வரும் உறுப்பினர்களைக்கொண்ட குழுவானது அங்குள்ள நேர்மையுள்ள நீதியான அமைப்புக்களுடன் இணைந்து எமது நேரடிக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களைச் செய்யவுள்ளோம்.

நாம் வீடுவீடாக நிதி வசூலிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பிரதான இடங்களில் எமது குழுவினருடன் தொண்டர்கள் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கான பற்றுச்சீட்டு உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த வரலாற்றுக் கூட்டு முயற்சிக்கு அனைத்து ஊடகங்களும் தங்கள் நல்லாதரவை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றியுடன் உங்கள் உறவுகளுக்காகன அன்பளிப்பை மனநிறைவுடன் எதிர்பார்க்கும் நம்மவர்கள்.

Disaster Emergency Assistant Relief – Canada

அஜந்தா 905 4601667,
தங்கா 647 2615723,
பாபு 416 9982284,
ஸ்ரனி 416 7550381
மகேந்திரன் 416 9901303


நன்றி- தமிழ்வின்
இங்குபதிவு செய்யப்பட்டுள்ள இருசெய்திகளும் தமிழ்வின் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.


Thursday, January 13, 2011

பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!
இங்கு வலி பிறந்துள்ளதே!!!
கடற்கன்னிகளின் தமிழால்
நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்
கிழக்கு ஈழவளநாடு
வெள்ளத்துள் மிதக்க-பொங்குவது
அழகா?
அகதிகளாய் அங்கு
மாந்தர் அலைய -இன்னிசையில்
நாம் மெய்மறப்பின்
எங்கள் உடலில்
ஓடுவது தமிழ்க்குருதியோ?

அலைபேசி தொலைபேசி
கைபேசி என்று
உலகம் சுருங்கிவிட்ட
இக்காலத்தில் மீனவன்
செத்தால் தந்தி -ஆயினும்
மந்திரிபதவி பற்றியதென்றால்
விமானத்தில் டெல்லி!
இப்படியிருக்கும் கொலைஞருக்கு
எப்படித் தெரியும்
கிழக்கு ஈழவளநாட்டில்
வெள்ளத்துள் மூழ்கியுள்ள தமிழரின் நிலை!!!

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லமனமுள்ளோர்
சொல்லுங்கள்!!!

வாழ்க வளமுடன்!





குறிப்பு:அங்குள்ள தமிழ்மக்களுக்கு உதவவிரும்புகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை யை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தமிழ்வின் இணையத்தளத்தில் பிரசுரமாகிய இதுபற்றிய தகவல்:
////வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இம்மக்களுக்கு இயன்றளவு நிதி, பொருள் உதவியை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.

இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்./////


கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு

http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjP20N922e4ILBcb3pG02

கிழக்கின் உறவுகளுக்கு, புலம்பெயர் உறவுகளின் உள்ளக் கதவுகள் திறக்கட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGa2


கிழக்கில் 90வீதமான பகுதி வெள்ளத்தில்.. வடக்கில் பொங்கல் விழாவை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார்
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3Qjb20N922e4ILBcb3pGQ2

அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI24ei29202jQMdd3QjR20N922e4ILBcb3pGQ2

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQCdd3Qj120D922e4ILBcb3pGY2

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு வைத்தியசாலைகள் மூடப்பட்டன

Wednesday, January 5, 2011

கமலின் அந்தரங்க நோயால் அல்லல்படும் ஈழத்தமிழ்

அடுத்தவர் உள்ளத்தை காயப்படுத்தி இன்பம் தேடுவது.......ஆகா; ஆனந்தம் - இதுஒரு நோய்!!!இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் ஆனந்தம் பெறுவர். இந்நோயால் அவதிப்படுபவர்களின் முதன்மையானவர் கமல்!!!!

சரி; விசயத்துக்கு வருவோம்;

என் இனிய ஈழத்தமிழ் உள்ளங்களே,
தெனாலி படத்தில் ஈழத்தமிழை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதித்தார்.வாழ்க என்று வாழ்த்தினோம்!
மன்மதன் அம்பு படத்தில் ஈழத்தமிழனை நடிகையின் செருப்பாக இருக்க கெஞ்சுபவனாகவும் ஈழத்தமிழச்சியை பைத்தியக்காரியைவிட கேவலமானவளாகவும் காட்டினார்.மௌனமாக இருக்கிறோம்!!!!

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொறுமை என்று வியக்கிறதா? ஈழத்தமிழர் மயக்கத்தில் உள்ளனரோ என்று ஐயங்கொள்வதா? அல்லது சூடுசுரணையே இல்லையா........? அறிகிலேன்!!!!

ரஜினியின் சிவாஜி படத்தில் முறையற்றபணமுகவர்களாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் காட்டப்பட்டதும் உரியமுறையில் எதிர்ப்பை இஸ்லாமியர் தெரிவித்தனர். ஆனால் ஈழத்தமிழர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று கமல் வீரவசனம் பேசுகின்றதை நாம் கைதட்டி வயிறுகுலுங்க சிரிக்கின்றோம்!!!! சிரிப்பூட்ட ஈழத்தமிழ் என்ன கேவலமான ஒன்றா?

கவிஞர் அறிவுமதி ஒரு மடல் எழுதி கமலைக் காட்டமாக சாடியுள்ளமைகண்டு பெருமைகொண்டேன்!!!
வைரமுத்துவுக்கு "கவிப்பேரரசு" என்று எவன் பட்டம்கொடுத்தது என்று வெந்துகொண்டேன்!
ஈழத்தமிழரில் ஒரு அறிவுமதி இல்லையே என்று அழுகிறேன்!!!!

தேவர்மகனாக சாதியம் வளர்த்து கலவரம் ஏற்படுத்தி உயிர்களை உண்ணுவது!
சைவ-வைணவ பழக்கவழக்கங்களை நகச்சுவையாக்கி சைவ-வைணவ மக்களை நோகடிப்பது!
ஈழத்தமிழை- ஈழத்தமிழரை இழிவுசெய்து பணம் பெருக்குவது!
கமஹாசனை கமல்ஹாசன் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டு; அடுத்தவனின் எண் சோதிடத்து நம்பிக்கையை நையாண்டி செய்வது!

ஆகா; இதுதான் அகிம்சைக்கு வரைவிலக்கணம் கொடுக்கின்ற கமலின் அருமைகள்!!!

அடப்போங்கோ கமல்; அகிம்சையாய் வாழ்ந்தவர் வரைவிலக்கண வியாக்கியானங்கள் எதுவும் பேசவில்லை!!!!!!! அதனால் மகாத்மாவாகி மக்கள் மனதில் வாழுகின்றார்! நீங்கள் வெறும் திரைநாயகன் தானே!!!! இப்படி பேசிப்பேசியே மறைந்துபோயிடுவீர்கள் என நினைவில் நிறுத்துவீராக!

இதே மன்மதன் அம்பு படத்தில் வைணவ பழக்கவழக்கத்தை கேலிசெய்யும் பாடல் இடம்பெற்று;இந்து முன்னணியின் முயற்சியினால் இறுதியில் குறித்தபாடல் நீக்கப்பட்டே படம் வெளியிடப்பட்டது. கமலின் வீட்டின் முன்னால் கூடிய இந்து முன்னணியினரின் அளவோ சொற்பம். திரைப்படத்தை எடுத்தவரோ துணைமுதலவரின் இரத்தம். ஆனால் கமல் பயந்துபோய் இந்துமுன்னணியினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மர்மத்தை போராட்டத்தை தலைமைதாங்கியவர் விபரித்துள்ளார். “The strength of a chain is determined by its weakest link" என்பதை உணர்ந்து மன்மதன் அம்பு படத்தின் வர்த்தகத்தில் கைவைப்போம் என்று மிரட்டியபிறகே கமல் பணிந்தார் என்று மர்மமுடிச்சை அவிட்டுள்ளனர் இந்து முன்னணியினர்.








அப்படியால் இந்த அறிவு ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு இல்லையா? ஈழத்தமிழர் குளிரில் உழைத்த பணத்தில் ஏப்பம்விடும் கமலை ஈழத்தமிழரிடம் மன்னிப்பு கேட்கவைக்கக்கூடிய வணிக-பணபலத்தை வைத்திருந்தும் மௌனமாக.....ஏமாளிகளாக ஈழத்தமிழர் இருப்பது ஏனோ?