Thursday, April 30, 2009

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்புள்ளம் கொண்டோரே ஓடோடி வாருங்கள். உதவிகள் செய்யுங்கள்.

யுத்தத்தால் வாடுகின்ற மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பம்பலப்பிட்டி கொழும்பு இந்துக் கல்லூரி முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை மன ஆறுதலை ஊட்டுகின்றது. 30ம்திகதி வரையே முதற்கட்ட பொருட்சேகரிப்பு நடைபெறும் என இவ்விளப்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அன்புள்ளம் கொண்ட நெஞ்சங்களே, கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்கலாம்.

Principal Name : Thambipillai Muthukumarasamy
Address : Hindu college, colombo - 04
Telephone Number :+94112586169

சிறுதுளி பெருவெள்ளம்

Thursday, April 9, 2009

பாரதிதாசனின் இராவணன்

பாரதிதாசனின் அருமையான பாடல் ஒன்று இலங்கை வேந்தன் இராவணனைப் போற்றிப்பாடுவது கண்டு மகிழ்வுற்றேன். என் ஆனந்தத்தை உங்களுடன் பகிர்வதற்காய் இங்கு அப்பாடலைப் பதிவிடுகிறேன். இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்தர் ஏற்றிபோற்றிய சைவக்கொழுந்து இராவண மாமன்னன்.திராவிட ஆரிய யுத்தம் தமிழ்வீரனாகிய இராவணனை சீதையைத் திருடிய பாதகனாய் சித்தரித்துள்ளது என்பதே என் கருத்து.என்ன நீங்கள் சொல்கிறீர்கள்?


தென்றிசையைப் பார்க்கின்றேன்;
என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடா!அன்றந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை
வைத்தோன்! குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!குள்ளநரிச்
செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை!
என்தமிழர் பெருமான்இராவணன்காண்!
அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று
தன்னைவையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்நெஞ்சகனை, நல்யாழின்
நரம்புதனைத் தடவிநிறையஇசைச்
செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும்
சூழ்ச்சிவிரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கும்சஞ்சரிக்கும்
நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்!வீழ்ச்சியுறு
தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை
தன்னைத்தொகையாக எதிர்நிறுத்தித்
தூள்தூ ளாக்கும்காழ்ச்சிந்தை, மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!கடல்போலச்
செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்!
ராவ ணன்தன்கீர்த்திசொல்லி
அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!


பாரதிதாசன் இருந்திருந்தால் இப்போது யாரைப்பற்றி பாடல் பாடியிருப்பார் என சிந்திக்கையில் நெஞ்செல்லாம் புல்லரிக்கிறது. பாரதிதாசன்; பாட்டொன்று........கலைஞரின் தமிழ்ப்பிழையையும் சரியென கவிபடிக்கும் புலமையொன்று என வாழும் தமிழ்வேடதாரி கவிப்பேரரசுவா என்ன?

Monday, April 6, 2009

கருணாநிதியை நம்பி ஏமாந்த எம்மை காப்பாற்றும் கடவுளே!!!!!!!!

ஐயனே சிவனே,

வாடுகின்ற பயிரால்
வாடுவர் சைவர்
எம்பெருமானே தாங்கள்
சைவர் தானே?

கருகிப்போகும் நிலையில்
நாம் வாடும்
வேளை கயிலையில்
உமக்கென்ன வேலை?

சிவபூமி உதிரத்தால்
சிவப்பாய் இருப்பது
சிவனே உமக்கு
இழுக்கல்லவா?

பிரம்மாஸ்திரத்திடம் இருந்து
அர்சுனனைக் காத்த
ஆயர்குலக் கண்ணா,
கருக்கும் நச்சு
ஆஸ்தீரத்திடம் இருந்து
காக்காது தமிழரைக்
கைவிட்டது ஏன்
தானோ?
அதர்மம் ஓங்கிறதே............
நீர் எங்கே?

சிலுவை ஏற்ற
பிரானே,
உம்மிலும் எம்முறவுகள்
துயர் ஏற்றுவிட்டனர்!
இனியும் இரங்காதது
நீதியோ தேவனே?

உமறுப் புலவன்
பாடிய தமிழால்
மகிழ்ந்த அல்லாவே
ஈழத் தமிழ்
மறைவது முறையாகுமா?

புத்தரே,
அன்புக்கு திருவுருவம்
அளித்த வள்ளலே,
உமது திருப்பெயரால்
தமிழ் அழியுதையா!!!
இப்போதும் தியானத்தில்
இருப்பது முறையோ?

நாத்தீகம் நவின்ற
கருணை இல்லாக்
கருணாநிதியை கடவுளாய்
நம்பியதுதான் குற்றமோ!
ஏமாந்துவிட்டோம் இறையே
ஏமாத்திவிடாதீர்!!!!