Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே,
தமிழின் விதியென்ன
சொல்வாயா?
ஈழ வளநாட்டில்
வாடும் தமிழுக்கு
விடை சொல்வாயா?

பக்தி மொழி
பாழடைவது அழகாகுமா?
பரமனின் மொழி
பரதேசியாகலாமா?

பிரம்மனே!
கலைமகள் வீணையில்
தவழுவது தமிழில்லையா?
திருமகள் வாசம்
தமிழுக்கு இல்லையா?
மலைமகள் மறம்
தமிழைவிட்டு நீங்கிடுமோ?

விதி எழுதிய
பிரம்மனே,
என்தமிழின் விதி
என்ன?

விதியை மதியால்
வெல்லும் திறம்
தமிழுக்கு உண்டு!!!!!!
மூவேந்தரை பெற்றெடுத்த
மறத் தமிழுக்குண்டு!!!!!!!!

இறை நம்பிக்கையில்
உலகில் உள்ள
கடவுள்கள் யாவும்
வாழுகின்ற மொழியென்ற
ஓர் நம்பிக்கையில்
என் தமிழின்
விதியை உம்மிடம்
கேட்க வந்தேன்!

என் தமிழை
காக்க வரம்
வேண்டுகின்றேன்!

பிரம்மனே,
முடிந்தால் உதவும்!!!!!
ஆரியத்து பூசையில்
மகிழ்ந்தால் கலைவாணியின்
வீணையை தூக்கி
எறிந்துவிடும்!

மணி வாசகரின்
திருப்பள்ளி யெழுச்சிக்கு
பார்ப்பான் இட்ட
தடையால்,
தூங்கிக் கொண்டே
இருக்கின்றார் தமிழ்ப்பெருமான்!!!

"எம்மைக் காப்பேன்"என்ற
திருவரங்கன்,
வைகுண்டத்தில் ஆழ்வார்
தமிழைக் கேட்காததால்
தமிழுணர்வு இழந்து
தமிழன் என
மறந்து ஆரியனாகி
கரே ராமாவாய்ப்
போய்விட்டார்!!!!

தமிழ்க் கடவுள்
நல்லூரான் சமசுகிரதபாசையால்
தமிழை நீசமாகக்
கருதிவிட்டாரோ?
கோட்டையின் வாரிசு
கட்டிய கோயில்
என நன்றிக்கடன்
செய்கிறாரோ??????
சூரன்போர் இனி
நடந்தென்ன? விட்டென்ன?

தமிழ் பெற்றெடுத்த
கடவுள்களே கைவிட்டால்??????

தமிழே,உன் விதியை
நீயே எழுது!!!!!
மதி கொண்டு
புதுவிதி எழுது!!!!!!!!!!!!

Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார்.

எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!!

அரசியலில் கைவந்த நடிகரான கருணாநிதி, தமிழை தனது குடும்பத்தை வளர்க்கப் பயன்படுத்தினார் என்பது வெள்ளிடைமலை.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்பது வள்ளுவன் வாக்கு.

கருணாநிதியின் குடும்பம் சூரியகுடும்பமாக வளர்வதற்கு தமிழ்த்தாய்தான் காரணம். ஆனால், அவள் ஈழத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, இரத்தத்துள் வாடி வதங்க, எக்கவலையும் இல்லாது ஆரியக்கூட்டுக்கு தமிழைக் கூட்டிக்கொடுத்து, இத்தாலிச் சனியாளிடம் தமிழ்த்தாயின் சேலையை விற்றுவிட்டார்.

தமிழ்த்தாய் மன்னிக்குமா? மன்னிக்கலாமா? தமிழகமே, விடை சொல்லு? பின்னூட்டமாகவில்லை. வாக்குச்சீட்டு வாயிலாக!!!!!!!!

நன்றி மறந்த கருணை இல்லா கருணாநிதியை தமிழகமே, வீறுகொண்டு எழுந்து தமிழகத்தை விட்டே விரட்டுவாயாக!!!!!!கன்னடத்திடம் ஒக்கேனக்கல் பிரச்சினையில் தமிழரை இழிச்சவாயனாக்கிய கெட்டிக்காரன். கச்சதீவைத் தாரைவார்த்த நயவஞ்சகன். பாலாறு பிரச்சினையைத் தீர்க்காது தமிழரை ஏமாளிகளாக்கிய ஆரியத்திடம் "மாமா" வேலை செய்த இழியவன். தெலுங்கு நாட்டோடு எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்காது "தமிழரின்" எல்லைகள் பறிபோவது தெரியாது இருக்கும் கைவந்த நடிகன். கருணாநிதியின் குடும்பத்தையே தமிழகத்தைவிட்டு ஒதுக்கிவையுங்கள் என் இனிய உறவுகளே!!!!!!

Thursday, May 7, 2009

தாய்த் திராவிடமே,உங்களின் கைகளுக்கு கிட்டிய எம்மைக் காக்கும் கடைசி ஆயுதம்

என் இனிய திராவிடமே,

வாக்கெனும் வேல்
கொண்டு காங்கிரசை
வீழ்த்து!

ஈழத்தில் தமிழழிய
கூட்டிக் கொடுத்த
திமுகவிற்கு நல்லதொரு
பாடம் புகட்டு!

சூழ்கலி நீங்கத்
தமிழ்மொழி ஓங்க;
உன் வாக்குச் சீட்டைப்
பயன்படுத்து!!

என் ஆருயிர்த்
தமிழகமே,

உன் கையில்
ஈழத் தமிழின்
எதிர்காலம்!
வாக்கும் உன்கையில்த்தான்!
சிந்தித்து செயலாற்று!

கட்சிகள் கடந்து
தலைவர்களைத் தொலைத்து
தமிழ்த்தாய்க்கு வெற்றிகொடு!

என் தாய்த்
தமிழகமே,

வீழ்வது காங்கிரசு
ஆகட்டும்!
சூடுகண்ட பூனையாய்
திமுக திருந்தட்டும்!
வாக்கெனும் வேலால்
நீ வெல்கவே!
வெல்கவே!