Friday, August 14, 2009

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலை
வந்ததென்ற பாவியே
வள்ளுவன் சிலைகேட்டானா?
மானம் கேட்டானா?

பண்டப் பரிமாற்றமாய்
சிலைதிறப்பு
மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்
எந்தப் பரிமாற்றமாகும்?
வாடும் காவேரி
வருத்தவில்லையா?

குளிரூட்டிய தனமிகு
"தான" வீட்டில்
சக்கரவண்டியில் சொகுசு
மெத்தையில் நேரத்துக்கு
சாப்பாடென வாழும்
உனக்கு
எங்கள் நாட்டில்
சுமுகநிலை எங்கனம்
வந்ததறிந்தாய்?

கோமாளி கூட்டமென்று
கூத்தாடி சொன்னபோது
மானங்கெட்டு அமைதியாய்
இருந்த இழியவன்
நீ!

சீ உன்னை
நம்பி அலையும்
தமிழ் தலைகள்
வெட்கமில்லா அடிமை
சாசனங்கள்!

3 comments:

sathiyamaay... ithu nethi adi....

நல்லாக் கேட்டிங்க. இப்படிக்கூடவா அரசியல் பிழைக்கணும்?