Wednesday, January 5, 2011

கமலின் அந்தரங்க நோயால் அல்லல்படும் ஈழத்தமிழ்

அடுத்தவர் உள்ளத்தை காயப்படுத்தி இன்பம் தேடுவது.......ஆகா; ஆனந்தம் - இதுஒரு நோய்!!!இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இப்படித்தான் ஆனந்தம் பெறுவர். இந்நோயால் அவதிப்படுபவர்களின் முதன்மையானவர் கமல்!!!!

சரி; விசயத்துக்கு வருவோம்;

என் இனிய ஈழத்தமிழ் உள்ளங்களே,
தெனாலி படத்தில் ஈழத்தமிழை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதித்தார்.வாழ்க என்று வாழ்த்தினோம்!
மன்மதன் அம்பு படத்தில் ஈழத்தமிழனை நடிகையின் செருப்பாக இருக்க கெஞ்சுபவனாகவும் ஈழத்தமிழச்சியை பைத்தியக்காரியைவிட கேவலமானவளாகவும் காட்டினார்.மௌனமாக இருக்கிறோம்!!!!

ஈழத்தமிழருக்கு எவ்வளவு பொறுமை என்று வியக்கிறதா? ஈழத்தமிழர் மயக்கத்தில் உள்ளனரோ என்று ஐயங்கொள்வதா? அல்லது சூடுசுரணையே இல்லையா........? அறிகிலேன்!!!!

ரஜினியின் சிவாஜி படத்தில் முறையற்றபணமுகவர்களாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் காட்டப்பட்டதும் உரியமுறையில் எதிர்ப்பை இஸ்லாமியர் தெரிவித்தனர். ஆனால் ஈழத்தமிழர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று கமல் வீரவசனம் பேசுகின்றதை நாம் கைதட்டி வயிறுகுலுங்க சிரிக்கின்றோம்!!!! சிரிப்பூட்ட ஈழத்தமிழ் என்ன கேவலமான ஒன்றா?

கவிஞர் அறிவுமதி ஒரு மடல் எழுதி கமலைக் காட்டமாக சாடியுள்ளமைகண்டு பெருமைகொண்டேன்!!!
வைரமுத்துவுக்கு "கவிப்பேரரசு" என்று எவன் பட்டம்கொடுத்தது என்று வெந்துகொண்டேன்!
ஈழத்தமிழரில் ஒரு அறிவுமதி இல்லையே என்று அழுகிறேன்!!!!

தேவர்மகனாக சாதியம் வளர்த்து கலவரம் ஏற்படுத்தி உயிர்களை உண்ணுவது!
சைவ-வைணவ பழக்கவழக்கங்களை நகச்சுவையாக்கி சைவ-வைணவ மக்களை நோகடிப்பது!
ஈழத்தமிழை- ஈழத்தமிழரை இழிவுசெய்து பணம் பெருக்குவது!
கமஹாசனை கமல்ஹாசன் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டு; அடுத்தவனின் எண் சோதிடத்து நம்பிக்கையை நையாண்டி செய்வது!

ஆகா; இதுதான் அகிம்சைக்கு வரைவிலக்கணம் கொடுக்கின்ற கமலின் அருமைகள்!!!

அடப்போங்கோ கமல்; அகிம்சையாய் வாழ்ந்தவர் வரைவிலக்கண வியாக்கியானங்கள் எதுவும் பேசவில்லை!!!!!!! அதனால் மகாத்மாவாகி மக்கள் மனதில் வாழுகின்றார்! நீங்கள் வெறும் திரைநாயகன் தானே!!!! இப்படி பேசிப்பேசியே மறைந்துபோயிடுவீர்கள் என நினைவில் நிறுத்துவீராக!

இதே மன்மதன் அம்பு படத்தில் வைணவ பழக்கவழக்கத்தை கேலிசெய்யும் பாடல் இடம்பெற்று;இந்து முன்னணியின் முயற்சியினால் இறுதியில் குறித்தபாடல் நீக்கப்பட்டே படம் வெளியிடப்பட்டது. கமலின் வீட்டின் முன்னால் கூடிய இந்து முன்னணியினரின் அளவோ சொற்பம். திரைப்படத்தை எடுத்தவரோ துணைமுதலவரின் இரத்தம். ஆனால் கமல் பயந்துபோய் இந்துமுன்னணியினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மர்மத்தை போராட்டத்தை தலைமைதாங்கியவர் விபரித்துள்ளார். “The strength of a chain is determined by its weakest link" என்பதை உணர்ந்து மன்மதன் அம்பு படத்தின் வர்த்தகத்தில் கைவைப்போம் என்று மிரட்டியபிறகே கமல் பணிந்தார் என்று மர்மமுடிச்சை அவிட்டுள்ளனர் இந்து முன்னணியினர்.








அப்படியால் இந்த அறிவு ஈழத்தமிழ் அமைப்புகளுக்கு இல்லையா? ஈழத்தமிழர் குளிரில் உழைத்த பணத்தில் ஏப்பம்விடும் கமலை ஈழத்தமிழரிடம் மன்னிப்பு கேட்கவைக்கக்கூடிய வணிக-பணபலத்தை வைத்திருந்தும் மௌனமாக.....ஏமாளிகளாக ஈழத்தமிழர் இருப்பது ஏனோ?

10 comments:

http://www.tamilhindu.com/2010/12/manmadhan-ambu-filmsong-controversy/

i like ur website...and articles...

பணம் சுக வாழ்வு இதுதான் எமக்கு முக்கியம்,என்று வாழும் எம் சமுகத்திற்கு எப்படி சொன்னாலும் புத்தி வராது நண்பரே

மிகவும் நொந்துப் போயிருக்கும் உங்கள் நாட்டு மக்கள் அமைதியாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.ஆனல் ஈழ்த் தமிழர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் .எங்கள் தலவர்களும் கமலை கண்டிக்க முன்வரவில்லையே.

அப்பா தமிழ்நாட்டுத் தமிழன் அப்படி பேசுறதா வச்சா ஒக்கேங்களா?

எந்தவொரு சமூகத்தையும் தனிப்பட்டமுறையில் வெளிப்படுத்தாத வகையில் நகைச்சுவைகளை அமைக்கலாம்தானே!!!! உதாரணத்துக்கு பொதுவான தமிழில் ஒருவர் பேசும்போது அவர் எந்த மாவட்டத்தமிழர் என்று அடையாளம் காணமுடியாது. எனவே எவர் மனதையும் புண்படுத்தாது.

கமலுக்கு ஈழத்தமிழ் நகைச்சுவைத்தமிழ்போல் தெரிகின்றதா? தெனாலியில் நகைச்சுவைக்கு ஈழத்தமிழைப் பாவித்தார். இப்போது; மன்மதன் அம்பில் நகைச்சுவைக்கு மீண்டும் ஒருமுறை பாவித்துள்ளார்!!! இடையில் நளதமயந்தில் வில்லத்தனத்துக்கும் பாவித்துள்ளார். ஏன் இந்த வன்மம்?

ஒழுக்காக தமிழ்பேசினால் அது நகைச்சுவையாக கமலுக்கு படுகின்றது. அதுசரி தன்னைத் தமிழன் என்று குறுக்கவிருப்பமில்லை என்றவர்தானே கமல்.(ஆனால் படத்தில் சிங்கத்தமிழன் என்று உழறியதை மறந்துவிட்டார்.தமிழ்நாட்டில் அவர் இரசிகர்கள் அதை மறக்கவில்லை.அதுபோல் "தமிழன் என்று குறுகியவட்டத்தில் இருக்கவிரும்பவில்லை" என்று அவர் கூறியதையும் கேட்கவில்லை!!! "என்ன கொடுமை சரவணா" என்ற திரைவரிதான் நினைவுக்கு வருகிறது!!!!

கமலுக்கு தமிழ் வியாபாரம். ஈழத்தமிழருக்கு தமிழ் உயிர்!!!! உரிமை!!!! உணர்வோடு கலந்த இறைவடிவம்!!!! அதை கமல் புரிந்துகொள்ளும் காலம் இன்றல்லாவிடினும் நாளை வந்தே தீரும்!!!


/////ஒக்கேங்களா?////
தமிழ் தெரியாதா?

செந்தூரன்>>
நானும் ஒரு ஈழத்தமிழன் தான், அதுகும் பிறந்ததிலிருந்து 22 வருடங்கள் யாழ் மண்ணில் அனுபவிக்கவேண்டியவற்றை அனுபவித்த ஈழத்தமிழன். உங்களுக்கு தமிழ் வளர்க்க இடமே கிடைக்கலயா, இல்லை இப்பிடி ஆபத்தில்லாத ஏதாவது சினிமா சம்மந்தப் பட்டவரை தாக்குவது பாதுகாப்பு எண்டு செய்கிறீர்களா? நான் ஒண்டும் கமலை உத்தமன் எண்டு சொல்லவரவில்லை, அதுக்குகாக உங்கள் தமிழ் பற்றை இங்கே காட்டாதீர்கள், முள்ளிவாய்க்காலில் மாண்டு போனவர்களைத்தான் உங்களால் காப்பாற்ற முடியவில்லை, தப்பி பிழைத்தவர்களாவது என்ன ஆனார்கள் எண்டு அறிந்தீர்களா, சும்மா ஈழத்தப்பற்றி எழுதினா எல்லாரும் புடுங்கீட்டுப் போவன் எண்டு நினைக்காட்தேங்கோ, உங்களுக்கு நாலு விமர்சனம் நல்லதாவரோணூம் எண்டதுக்காக எங்கள வைச்சு புளப்பு நடத்தாதேங்கோ.நல்லா எழுதுறீங்கள் ஏதாவது நல்ல விசயமா எழுதுங்கோ....

செந்தூரன்


////நானும் ஒரு ஈழத்தமிழன் தான், அதுகும் பிறந்ததிலிருந்து 22 வருடங்கள் யாழ் மண்ணில் அனுபவிக்கவேண்டியவற்றை அனுபவித்த ஈழத்தமிழன்.//////

///அதுகும்/// ?

யாழ்ப்பாணத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்தால் 'உண்மையான" தமிழர் என்று ஆகிடுமா? அதுவென்ன யாழ்ப்பாணம் என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு இரண்டு கொம்பா உண்டு? யாழ்ப்பாணத்தை சொல்லி;அதன் பெயரைப் பயன்படுத்தி நீங்கள் தமிழ்ப்பற்றாளர் என்று ஒரு வெடியே கொழுத்திவிட்டீர்!

யாழ்ப்பாணம் என்றால் அதுவும் தமிழ்த்தாயின் ஏனைய மாவட்டங்கள்போல் ஒருமாவட்டமே! எனவே; யாழ்ப்பாணம் என்ற சொல்லைவைத்து உமது தமிழ்ப்பற்றை ஊருக்கு கூவுகின்ற வேலையை எளியேனிடம் காட்டவேண்டாம்!

யாழ்ப்பாணம் என்றாலும் வன்னி என்றாலும் திருகோணமலை என்றாலும் புத்தளம் என்றாலும் மட்டக்களப்பு என்றாலும் மன்னார் என்றாலும் மதுரை என்றாலும் சென்னை என்றாலும் தமிழ்மண் என்று கொஞ்சி மகிழுகின்ற தமிழ்ச்சாதியையே காதலிக்கிறேன்! ஏதேனும் ஒரு மாவட்டத்திமிர் பிடித்தவர்களின் தமிழ்ப்பற்று தமிழ்ச்சாதிக்கு விடிவையும் கொடுக்காது.

தாங்கள் எனது பதிவை இன்று வாசித்தவர் போலுள்ளது! அதனால்த்தான் இவ்வளவு சூடானபதில்!

அதுசரி; தாங்கள் முள்ளிவாய்காலில் நின்று களமாடி காயப்பட்டு தப்பி வந்தவரா? உமது சித்தம் ஏன் கலங்கிப் போய்விட்டதோ தெரியவில்லை! நல்ல மனநல மருத்துவரைப் பாரும்! :-)

aaru kodi perula 5 1/2 kodi peru antha makkal pakkathila irunthu kondu ondrum pudunga mudiyala,ada
tha vudu tamil naaddu karan miinavana
ethanai nuuru pera innum kolran innum
kolvaan nii enna pudungana,nii innum kalainyar maathiri eluthugiren pesuveven pongada niiyum unnoda tamil
tamil naaddil ulla unmaiyana en tamil padralargalai iru karam kuuppi vanangugiren

இந்த ஈன பிறவியை பற்றி கதைப்பதில் பிரஜோசனம் இல்லை. அவன் ஒரு கேவலங்கெட்ட கூத்தாடி பயல் நாய் பயல். காச பொட்டல் வாலை ஆட்டுபவன்