Wednesday, June 3, 2009

அமித்தாப்பச்சனும் கலைஞரும்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகம் வழங்கவிருந்த
கௌரவ கலாநிதி (டாக்டர் பட்டம்) பட்டத்தை ஏற்க வேண்டாம் என என் மனம் கூறியது. அதனாலேயே அதனை நான் அமைதியாக மறுத்து விட்டேன் என்று இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.


எனது நாட்டு மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்
நான் அந்தப் பட்டத்தை ஏற்கும் மன நிலையில் இல்லை.


இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து முழுமையான அறிக்கை வருவதற்கு முன்பே நீங்கள் எடுத்த முடிவா எனக் கேட்டதற்கு, எனக்கு அதற்கான காரணம் தெரியாது. ஆனால் எனது இதயம் சொன்னதை நான் கேட்டேன்’’ என்றார்.
எனது நாட்டு மக்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச தி
ரைப்பட விழாவில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


அட.........ஏன் இப்போது அமித்தாப்பச்சன் புகழ் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா???????????? எல்லாம் எம் உறவுகளுக்கு உணர்வூட்டத்தான்!!!!!!!

இலங்கையில் ஒரு பிடி சோற்றுக்கு வாடிவதங்கையில்................யுத்தத்தால் ஊனப்பட்டு, உள வாட்டம் பெற்று நிற்கின்ற இத்தருணத்தில் .......பார் முழுதும் பரந்துள்ள தமிழர்கள் யாவரும் ஒருமித்து ஓர்குடையில் ஈழத்தமிழ் மக்களுக்காய் குரல்கொடுக்கும் வேளையில்................"எக்கேடு கெட்டால் எமக்கென்ன?" என்று கைவிட்ட திமுகவையும் ஈழத்தமிழ் மக்களின் கனவுகளை நாசஞ்செய்த சூத்திரதாரியான காங்கிரசையும் தெரிவுசெய்த என் உறவுகளை நினைத்தபோது அபித்தாப்பச்சனை இவ்முடிவு எடுக்கத் தூண்டிய இரசிகர்கள்........அடடா எவ்வளவு அருமையானவர்கள்!!!!!! (மன்னிக்க:- இலங்கையில் வாடுகின்ற மக்களின் வாட்டத்தை எண்ணி எண்ணி வாடுகின்ற என் இனிய உறவுகள் "குறித்த ஒப்பீட்டுக்கு" மன்னிக்க வேண்டும்.)




பாவம்..............சீமானும் நெடுமாறனும் பெரியார் திராவிடக் கழகத்தாரும் இன்னும் பலரும் எவ்வளவு கத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாது போய்விட்டதே!!!!! சன்னும் ஜெயாவும் கலைஞரும் கடமையைச் செய்யாவிட்டால் எப்படி பொதுசனம் அறிவர்????????


அவுஸ்ரேலியாவில் இந்தியருக்கு ஏற்படுகின்ற நிறவெறித் தாக்குதலுக்கு முகம்சுழித்து பட்டத்தை வேண்டாம் என்ற அமித்தாப்பச்சனுடன் ஒப்பிடும்போது மரண ஓலத்தில் உறவுகள வாடியபோது.............. வெற்றிக்களிப்பில் டில்லிக்கு சுற்றுலா சென்ற "தமிழினத் தலைவர்" கலைஞர் ?????????? பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் தேர்வுசெய்த குடிகள் மகிழட்டும்! இறந்த அந்தியட்டிக் கிரியைகளைக் கூடச் செய்யமுடியாது புழுகுகின்ற இலங்கைத் தமிழர் துயரில் வாடட்டும்! வாழ்க தமிழினம்! வளர்க தமிழ்!


அமித்தாப்பின் செருப்பை அறிவாலயத்தில் கொண்டுவந்து பூசிக்கச் சொல்லுங்கள் என் இனிய உறவுகளே......சிலசமயம் இனமானம் அறிவாலயத்தில் வந்து குடிகொள்ள வாய்ப்புண்டு.
அதுசரி; ஒக்கேனக்கல் என்ன மாதிரியுள்ளது???? இலங்கைத் தமிழரை தொப்புள் கொடியுறவாக பார்க்கத் தவறியவர்களுக்கு "ஒக்கேனக்கல்" நினைவிருந்தால் சரி!

3 comments:

வடநாட்டான் வாழ்க அவன் மட்டுமெ நம்மைக் காப்பாற்றுவான்

அதுசரி; சரியா சொன்னீர்கள் அனோனிமஸ் அன்பரே,பெரியார் மரணத்துடன் வடநாட்டுப்பாசம் பூத்துவிட்டது இந்த தமிழினத் தலைவர்களுக்கு!!!!!

hey .. just now i saw ur blogs... great yaa..