Saturday, June 20, 2009

எனக்குத் தென்பில்லைத் தாயே


சுவையானது -எங்கள்
செம்மொழித் தமிழ்

அழகானது- எங்கள்
திராவிடத் தமிழ்

திருவருள் கொண்டது
எங்கள் சிவத்தமிழ்

புல்லரிக்க வைப்பது
எங்கள் முத்தமிழ்

நறுமணமானது எங்கள்
ஈழத் தமிழ்

தாயே,

உயிரிலும் இனிய
தமிழ் வாடுகையில்
வாழ்த்துகள் நவிலத்
தென்பில்லைத் தாயே!

தங்கள் பிறந்தநாள்
இனிய தமிழின்
இன்பத்தோடு கூடுகையில்;

எட்டுத் திக்கும்
முரசு கொட்டுகிறேன் -அம்மா
தங்கள் பிறந்தநாளை
வாழ்த்தி!

இவ்வண்ணம் என்னை
வளர்த்த என்
இனிய தாயே,

மங்காத தமிழ்
பொங்க,
தமிழ்ப் பாருக்கு
நல்ல செய்தி
கூட,

இறைவனைத் தொழுங்கள்!
தங்கள் வேண்டுதல்கள்
பலிக்காது போனதில்லை!

0 comments: