Saturday, May 16, 2009

தமிழே,புதுவிதி எழுது!!!!!!!!!!!!

விதி எழுதியபிரம்மனே,
தமிழின் விதியென்ன
சொல்வாயா?
ஈழ வளநாட்டில்
வாடும் தமிழுக்கு
விடை சொல்வாயா?

பக்தி மொழி
பாழடைவது அழகாகுமா?
பரமனின் மொழி
பரதேசியாகலாமா?

பிரம்மனே!
கலைமகள் வீணையில்
தவழுவது தமிழில்லையா?
திருமகள் வாசம்
தமிழுக்கு இல்லையா?
மலைமகள் மறம்
தமிழைவிட்டு நீங்கிடுமோ?

விதி எழுதிய
பிரம்மனே,
என்தமிழின் விதி
என்ன?

விதியை மதியால்
வெல்லும் திறம்
தமிழுக்கு உண்டு!!!!!!
மூவேந்தரை பெற்றெடுத்த
மறத் தமிழுக்குண்டு!!!!!!!!

இறை நம்பிக்கையில்
உலகில் உள்ள
கடவுள்கள் யாவும்
வாழுகின்ற மொழியென்ற
ஓர் நம்பிக்கையில்
என் தமிழின்
விதியை உம்மிடம்
கேட்க வந்தேன்!

என் தமிழை
காக்க வரம்
வேண்டுகின்றேன்!

பிரம்மனே,
முடிந்தால் உதவும்!!!!!
ஆரியத்து பூசையில்
மகிழ்ந்தால் கலைவாணியின்
வீணையை தூக்கி
எறிந்துவிடும்!

மணி வாசகரின்
திருப்பள்ளி யெழுச்சிக்கு
பார்ப்பான் இட்ட
தடையால்,
தூங்கிக் கொண்டே
இருக்கின்றார் தமிழ்ப்பெருமான்!!!

"எம்மைக் காப்பேன்"என்ற
திருவரங்கன்,
வைகுண்டத்தில் ஆழ்வார்
தமிழைக் கேட்காததால்
தமிழுணர்வு இழந்து
தமிழன் என
மறந்து ஆரியனாகி
கரே ராமாவாய்ப்
போய்விட்டார்!!!!

தமிழ்க் கடவுள்
நல்லூரான் சமசுகிரதபாசையால்
தமிழை நீசமாகக்
கருதிவிட்டாரோ?
கோட்டையின் வாரிசு
கட்டிய கோயில்
என நன்றிக்கடன்
செய்கிறாரோ??????
சூரன்போர் இனி
நடந்தென்ன? விட்டென்ன?

தமிழ் பெற்றெடுத்த
கடவுள்களே கைவிட்டால்??????

தமிழே,உன் விதியை
நீயே எழுது!!!!!
மதி கொண்டு
புதுவிதி எழுது!!!!!!!!!!!!

0 comments: