Wednesday, March 9, 2011

கருணாநிதியின் மாண்பு!

திமுகவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் என்று காங்கிரசிடம் மண்டியிட்ட கருணாநிதி கூறியது கேட்டு; மெய் சிலிர்த்துவிட்டது!

கர்நாடக மாநிலத்துக்கு ஒக்கேனக்கலையும் காவேரியையும் விட்டுக்கொடுத்த அருமையுள்ள கட்சியல்லவா திமுக!

கேரளத்துக்கு முல்லைப் பெரியாறை வாரிவழங்கிய மாண்பு கொண்ட கட்சியல்லவா திமுக!

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த கொடையாளியல்லவா திமுக!

மீனவர்களின் உயிர்களை தாரைவார்த்த பெருந்தன்மைக் கட்சியல்லவா திமுக!

ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை எமனுக்கு "கொடை'யாக வழங்கிய உத்தமரல்லவா திமுக!

திமுகவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக்கு ஒரு அளவே இல்லையப்பா!!!!!

இத்தகு பெருமையுடைய திமுக; தொகுதிகளை விட்டுக்கொடுக்காவிட்டால் அதன் கீர்த்தி பாழாகிவிடாது பாருங்கள்.....அதுதான் காங்கிரசு கேட்ட தொகுதிகளை வழங்கி திமுகவின் விட்டுக்கொடுக்கும் கீர்த்தியை பேணியுள்ளார் கருணாநிதி.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்கள் பாருங்கள்.......அதன் பொருள் யாரேனுக்கும் தெரியாதென்றால் திமுகவிடம் கேட்டுத் தெரிந்து கொள்க.

கடவுளே,
கருணாநிதி தன்மனைவி மக்கள் பேத்திகளின் சேலைகளை விட்டுக்கொடுக்காது இருந்தால் சரி!!! வாழ்க திமுக!

6 comments:

கருணாநிதி தன்னுடைய கோமணத்தையும் சேர்த்தல்லவா விட்டுக்கொடுத்துவிட்டார்.

கர்நாடகம்,கேரளம்,கச்சத்தீவு மண் சார்ந்த கொடை.கொடுத்ததை திரும்பவும் வாங்க இயலும்.

உயிர்க் கொடையை எப்படி திரும்ப வாங்குவது:(

கருணாநிதி ஒரு காமெடி பீசாகி ரொம்ப நாளாகுது. இப்ப போய் இத பெருசா பேசிகிட்டு ...

நல்லது நடக்கட்டும்

நல்லது நடக்கட்டும்

///ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை எமனுக்கு "கொடை'யாக வழங்கிய உத்தமரல்லவா திமுக!///"எமனுக்கு" அல்ல!இனவாதப் பேய்களுக்கு என்று வர வேண்டும்!