Thursday, March 17, 2011

தமிழ்த் தியாகி விநாயகர்!


அனுராதபுரத்தில் 14ம் திகதி பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் சிலையை டயர் போட்டு எரித்த கேவலமான செய்தியை அறிந்ததும் மனவருத்தம் ஏற்பட்டது!

திராவிடர் கழகத்தவருக்கு விரோதியாக இருந்த பிள்ளையார் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் விரோதியாகிவிட்டார்! பிள்ளையாரை எதிர்த்து திராவிடம் பேசி; தென்னாட்டு சிந்தாந்தத்தையும் புறக்கணித்து;தமிழர் உரிமைகளையும் துறந்து திமுகவுக்கு சாமரை வீசுவதிலேயே திகவின் காலம் கழிகின்றது!
தமிழ்நாட்டில் திகவினர் அன்று பிள்ளையார் சிலைகளை உடைத்து புரட்சி என்று புண்ணாக்கு செய்தனர்! இலங்கையில் தமிழருக்காக பிள்ளையார் எரியும் நிலைக்கு ஆளாகின்றார்! ஆக; பிள்ளையார் பாவப்பட்ட கடவுளப்பா!

வடநாட்டார் சிந்துவெளித் -தென்னாட்டுச் சிவனையும் சங்க திருமாலையும் வணங்குகின்றார்கள் தானே? அதுவும் முழுமுதற் கடவுள்களாக! பாவம் திராவிடக் கடவுளர் இவர்கள் என்ற உண்மையை அறியவில்லை போலும்!!!! திக அங்கு போய் விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும்!!!!

ஆக; தமிழருக்காக எரிந்த முத்துக்குமார் வரிசையில் இன்று பிள்ளையாரும் இடம்பெற்று பிள்ளையார் தமிழ்த் தியாகியாகிவிட்டார்!!!! இனி கருணாநிதிக்கு சாமரை வீசும் திகவினருக்கு பிள்ளையாரைப் பற்றி பேசுகின்ற உரிமையில்லை என்க!

இப்போது சொல்லுங்கள் தமிழ்த் தியாகி விநாயகர் என்பது சரிதானே? அதுவும் திகவைவிட தமிழருக்கு விசுவாசமாக இருந்துள்ளார் என்பதற்கு அவர்மேல் இனவாதக் காடையர் போட்டுக்கொழுத்திய டயரே தக்க சான்று!

0 comments: