Wednesday, October 8, 2008

சரத்குமார் மெல்லத் திருந்துகிறாரா அன்றி நன்றாய் நடிக்கிறாரா?

அண்மையில் நடிகர் சரத்குமார் இலங்கைத் தமிழர் விடயத்தில் வாய்திறக்காது கர்நாடகத்தில் அடிவாங்கிய தமிழ் சினிமாவுக்காக போராட்டம் அறிவித்தபோது ஏற்பட்ட ஆதங்க கவலையில் அவரைப்பற்றி ஒர் கட்டுரை எழுதியிருந்தேன். மாற்றுக் கருத்து இன்றுவரையில்லை. அவரது கட்சி சார்பாக, அண்மையில் வெளியிட்ட அறிக்கை சற்று ஆறுதலாக இருந்தது. எனினும் கலைஞரிடம் எதையும் எதிர்பார்க்காது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் நடிகர் சங்கம் மூலம் ஓர் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தினால் அது போற்றக் கூடியது. தமிழ் சினிமா கர்நாடகத்தில் அடிவாங்கியபோது வெகுண்டெழுந்தவருக்கு நிச்சயமாக இலங்கைத் தமிழருக்காக வெகுண்டெழ பஞ்சியிருக்காது என்று நம்புகின்றேன்.


எங்கள் பணமும்தானே இன்று பலகோடியில் முதலீடு செய்து திரைப்படங்கள் மலரக் காரணமாகவுள்ளது. எனவே நாங்கள் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம் என்பவற்றிடம் இவற்றை எதிர்பார்பது தவறாகா.

எனக்கு அரசியல் தெரியாது. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் கண்ணீரும் கம்பலையாகவுமே நிம்மதியற்று வாழ்கின்றோம் என்பது மட்டும் நன்றாகத் தெரியும். சத்தியமாகச் சொல்லுகின்றேன் வேறு எதுவும் தெரியாது.


சரத்குமாரின் அறிக்கை

0 comments: