Friday, January 11, 2013

ரிசானா - சவூதிச் சட்டத்தை கேள்விகேட்க வந்தவள்! டெல்லி தந்த மோகத்தை தீர்க்கவந்தவள்!


டெல்லிக் கொடூரத்தின்பின் மரணதண்டனையின் அவசியம் உணரப்படலாயிற்று என்பது உண்மைதான். ஆனால் அது சவூதியின் ஷரியச்சட்டத்தின்படியான மரணதண்டனை அல்ல! இந்த யதார்த்தத்தை பலர் புரிந்திலர். ஆனால் இலங்கை மக்கள் ரிசானா என்னும் புனிதவதியூடாக நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

‘சிறப்பான சிகிச்சை வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். பலன் இல்லை.சிறப்பான தீர்ப்பு வேண்டும்’ என்று பாதிக்க வைத்த கொடியவர்களை சவூதிக்கு அனுப்புங்கள்; பலன் இருக்கும்’’ என்கிறார்கள் நீதி கேட்கும் நியாய உள்ளங்கள். - முஸ்லிம் லீக் எம்.பி., எம்.அப்துல் ரஹ்மான்

அருமை! சவூதிக்கு அனுப்பலாம்! ரிசானா என்னும் இலங்கை இஸ்லாமியச் சிறுமிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையின் யோக்கியத்தை அறிந்திருந்தால் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரான  முஸ்லிம் லீக் எம்.பி., எம்.அப்துல் ரஹ்மான்  இப்படி பிதற்றமாட்டார்.
இந்தியப் பண்பாட்டிலும் மரணதண்டனைகள் தொன்றுதொட்டு இருந்துவந்தே உள்ளன. ஆனால் பழிக்குப்பழி என்னும் இழிவான தரத்தில் அவை அமைந்திருக்கவில்லை. மரணதண்டனைகள் தேவைதான். அவை பழிக்குப்பழி என்னும் பாழான சிந்தனையில் இல்லாமல், நாட்டில் குற்றங்களைக் குறைக்கும்நோக்கில் அமைந்திருக்க வேண்டும்.
ஒருவரின் கை தற்செயலாக வெட்டப்பட்டு விட்டதென்று வைப்போம். இப்போது பழிக்குப்பழி என்னும் சட்டத்தின் முன்னிலையில், பாதிக்கப்பட்டவர் தன்கையை வெட்டியவரின் கையை வெட்டவேண்டுமென்று வேண்டுகின்றார் எனின், அவர் கொடூரமான குரோதசிந்தனை உடையவர் என்றாகிறது. , எந்தவிதமான குரோதசிந்தனையும் இல்லாது நடைபெற்ற தவறுதலுக்கு கொடூரகுரோத சிந்தனையால் தண்டனை வழங்கப்படுமானால், அந்தச்சட்டம் எந்தளவுக்கு வினைத்திறன் உடையதென்பதை அறிவுடையோர் சிந்திப்பாராக.

இந்தியப் பண்பாட்டில் உலாவிய மனுதர்மத்தை அடியோடு எதிர்ப்பவர்கள் நாத்தீகர் மட்டுமல்ல! இந்தியப் பண்பாட்டுச் சமயங்களை ஒழுகும் பெரும்பான்மையோரும் அதனை எதிர்த்தே வந்துள்ளனர். மனுதர்மமே இந்தியப் பண்பாட்டுச் சட்டம் என்று பெரும்பான்மை மக்கள் நம்பியிருந்தால், அம்பேக்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எத்தனிக்கக்கூட வாய்ப்புக் கிடைத்திருக்காது. ஆக; சமயங்களை ஒழுகும் அதேவேளை, அவை கடந்தும் சிந்திக்கும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ரிசானா என்னும் இலங்கைப் பெண் பதினெட்டுவயது தாண்டாத சிறுமி. அவளது குடும்பம் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பம். வறுமையின்  கோரப்பிடியில் தவிக்கும் குடும்பம். இலங்கையிலிருந்து வெளிநாட்டு முகவர்கள் மூலமாக சவூதிக்கு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், வீடுகளுக்கு பணம் அனுப்பி, தமது வீடுகளைப் பொருளாதாரரீதியில் வலுப்படுத்துவதை நன்குணர்ந்த ரிசானா, தனது குடும்பத்தையும் வளப்படுத்த வேண்டுமென்ற சிந்தையோடு வெளிநாட்டுமுகவர் நிறுவனமொன்றை நாடினாள். பதினெட்டு வயது கடந்திராத அவளுக்கு, பதினெட்டு வயது கடந்தவளாகக் கடவுச்சீட்டில் பொய்யான பிறந்ததிகதியை வழங்கி, மோசடிசெய்து அந்தமுகவர் நிலையமும் அவளை சவூதிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஒருவீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டாள். ஆடைகளை தோய்த்துக் கொடுத்தல், வீட்டு வேலைகளைச் செய்தல் இவளுக்கு வழங்கப்பட்ட பணிகளாகும். 2005 மே 04ம் திகதி சவூதிக்குச் சென்றவளுக்கு,2005ஆம் ஆண்டு மே 22ம் திகதியே எதிர்காலம் சூனியமாகும் எதிர்பார்த்திருக்கமாட்டாள்.
சம்பவநாளன்று, அவளிடம் தமது 4 மாதக் குழந்தைக்கு புட்டிப்பாலை வழங்கும் பணியைக் கொடுத்துவிட்டு முதலாளியான கணவனும் மனைவியும் வெளியே சென்றுவிட்டனர். குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும்போது, பால் புறையேறி குழந்தை மூச்சுத்திணறி மயங்கிவிடுகின்றது. இவளோ முன்பின் பால் கொடுத்து பழக்கமில்லாதவள். சிறுமி வேறு. என்ன செய்வதென்று தெரியாது கழுத்தை தடவிப்பார்த்து தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு அவ்வேளை வந்த முதலாளியின் மனைவி, குழந்தையைக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோதுதான் தெரியவந்தது குழந்தை இறந்துவிட்டதென்று.
ஷரியாச் சட்டம் சும்மாவிடுமா? பழிக்குப்பழிதானே........கடந்த புதன்கிழமையன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10க்கு கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டாள்!!! ஏழு ஆண்டுகள் கழித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொடூரம்!!!!

பாலினை ஒழுங்காகப் பருக்கத் தெரியாது தாய்மாரின் கவலையீனத்தால் குழந்தைகள் இறக்கும் செய்தி சர்வசாதரணமாக அனைவரும் அறிந்ததொன்றே! இது இப்படியிருக்கையில், எந்த முன் அனுபவமும் இல்லாத ரிசானா மூச்சுத்திணறும் வகையில் தவறாக பாலைப் பருக்கியிருக்கவும் வாய்ப்புண்டு.
congenital esophageal stenosis,atresia போன்ற உணவுக்கால்வாய்த் தொகுதியில் களத்தில் ஏற்படும் பிறப்புக்குறைபாடுகள் போன்ற மருத்துவப் பிரச்சினைகள்கூட உடனடியாக வெளிக்காட்டப்படாமல் ஒருசில மாதங்களின்பின் வெளிக்காட்டப்படலாம். இவ்வாறான மருத்துவப்பிரச்சினைகள் குழந்தைகள் பால்குடிக்கும்போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் தன்மையுடையவை.

ஆனால் மருத்துவப் பரிசோதனைகள் எதுவுமின்றி,குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவே நீதிமன்றம் கருத்தில் எடுத்து இத்தண்டனையை வழங்கியது. பிணச்சோதனை(postmorterm) நடைபெற்றிருந்தால், மரணத்திற்கான விஞ்ஞானபூர்வமான காரணியைக் கண்டுபிடித்திருக்கலாம். பிணச்சோதனை உண்மையான மரணத்துக்குரிய காரணியை தெளிவுபடுத்தியிருக்கும். ஷரியாச்சட்டம் அதற்கு அனுமதிக்கவில்லை!

எனவே அவளது மரணதண்டைக்குரிய தீர்ப்புக்கு விஞ்ஞானபூர்வ ஆதாரம் தேவைப்படவில்லை. அப்படியானதொரு சட்டம் இன்றைய உலகிற்குத் தேவைதானா?
Question
Is post-mortem permissible in Islam, some times post-mortem leads to valuable information that may help save other lives. Many a time post-mortem is done to discover mysterious and suspicious death. What is the Islamic verdict?
Answer
All things and practices have their advantages and benefits. However, along with their benefits are their harms. On the bases of harm, the shariah has outlawed many practices in spite of their benefits. While conceding the benefits of post-mortems, the shariah does not permit this mutilation of the body because:
A. The human body is sacred and an object of honour and respect. Cutting it, dissecting it and mutilating it are not permissible no matter what beneficial results may stem from such post-mortems. B. The human body does not belong to any person, hence man has no right to use and misuse the human body. He has no right to donate his own body since it is not his property nor is he allowed to sell it or part of it. C. The Holy Prophet (peace be upon him) explicitly forbade making use of the human body. Unanimously, all authorities of the shariah have declared unlawful cutting and dissecting the body of a human being even to save the life of another human being. The shariah has made two exceptions to this law, as follows:
1.      A pregnant women dies and the baby is alive within her. In this case, it is compulsory to cut open the body and remove the baby. However if the body is already dead then it is not lawful to cut the dead  body        [ fatawa alamghiri ]
2.      A person unlawfully takes possession of another's property and swallows it e.g. a precious stone and dice in this case if the owner demands his wealth it will be paid from the estate of the deceased. If the deceased has left sufficient wealth to compensate for the liability, it will not be permissible to operate to him to remove the article. However, if he does not possess sufficient wealth to compensate for the item, which he had swallowed, and the owner demands his wealth, the body will be cut and the item returned to its owner.
These are the only exceptions allowed by the shariah because the rights of others are involved. For no other reasons will post-mortems be permissible. Another important thing to remember is that the shariah has ordained many rules and acts applicable for the deceased.  Bodies used for experiments [and models] by medical students are denied the holy rituals such as ghusl, kafan, burial etc. the teaching of Islam on this regard are all abandoned in cases of mutilation of bodies.
Al Mumin Vol. 1 No. 3 Page
Masjid-e-Quba. 20, Bundria Court, Bradford. BD8 7PD. (01274) 542027
http://www.masjidquba.org/qa/women/postmortem_islam.htm

பிணத்தை அறுத்து சோதனை செய்வதை இரண்டு காரணங்களுக்காக மட்டும் மதச்சட்டம் அனுமதிக்கின்றது. ஒன்று தாய் கருப்பகாலத்தில் இறந்துவிட்டால், கருப்பையில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதற்கு. மற்றையது, இன்னொருவருக்கு உடமையான தங்கம் போன்ற ஏதாவது விலையுயர்மிக்க பொருளை ஒருவர் விழுங்கி, இறந்துவிட்டால் அவரது உடலை அறுத்து உடமையை உரியவரிடம் வழங்குவதன் நிமித்தம்.

ஆக; இறந்தபின் நம்மோடு வராத சடப்பொருளுக்கு முன்னுரிமை வழங்கும் அரபுச்சட்டம், ஒருவரின் நீதித்தன்மையை வெளிக்கொண்டுவருவதற்கு பின்னடிக்கின்றது! இது எவ்வகையில் நியாயம்? இவ்வாறான சட்டமும் மனுநீதியும் மதத்தால் மக்களை ஆளுமென்றால், மனிதம் எப்படி வாழும்?

கழுத்தை வெட்டி கொன்றபின்னும் அவளது சடலத்தை இலங்கைக்கு அனுப்பிவைத்து அவளது பெற்றோரின் துயரை கொஞ்சமேனும் தணிக்க முனைந்திருக்கலாம். ஆனால் அதுவும் அரபுச்சட்டத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. பாவம் பிள்ளையின் உடலை பார்க்கும் யோக்கியதைகூட இல்லாத பெற்றோர்.
The deceased should be buried as soon as possible, usually within 24 hours, and the burial should be as close to the site of death as possible, preferably within 1-2 miles.
http://emedicine.medscape.com/article/1705993-overview#aw2aab6b3

ஒருசில மைலுக்குள்ளேயே புதைக்கப்பட வேண்டுமென்ற அரபுச்சட்டத்தின் கொடூரம் யாருக்கும் புரியாது. ரிசானாவின் தாய்க்குமட்டும்தான் புரியும்!!!

ஷரியாச் சட்டப்படி, பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மரணதண்டனையிலிருந்து தப்பமுடியும். ஆனால், இலங்கை சனாதிபதி தொட்டு, அமெரிக்க சனாதிபதி அடங்கலாக அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் வேண்டியும் மன்றாடியும் பாதிக்கப்பட்டவரின் மனம் இரங்கவில்லைப் பாருங்கள்......நல்லகுடிமக்களை சவூதிச்சட்டங்கள் உருவாக்கியுள்ள! அடச்சீ போங்கள்!

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இன்னொரு குழந்தை பிறந்துமாயிற்று.
குற்றஞ்சாட்டப்பட்ட ரிசானா ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்துமாயிற்று.
ஆனால் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத் தாய்க்கு இரக்கம் என்பதை ஏன் இறைவன் கொடுத்திருக்கவில்லை?
4மாதக் குழந்தைக்கு புட்டிப்பாலைக் கொடுக்கும்படி பணித்துவிட்டு ஊர்சுற்றச் சென்றவர்களுக்கு இரக்கம் இருக்குமா என்ன?

ரிசானா வந்து ஒருமாதங்கூட இல்லை. அரபுமொழிகூடத் தெரியாது. ஏதேனும் கள்ளநோக்கில் கொலைசெய்திருந்தால் என்று பார்த்தாலும், அதற்குரிய வாய்ப்புக்கள் அறவேயில்லை. பெரியபிள்ளை ஒன்று இறந்திருந்தால், ஏதேனும் களவெடுக்கும்போது பார்த்துவிட்டதென்றுகூடக் கூறலாம். ஆனால் எதுவும் அறிந்துகொள்ளும் ஆற்றலற்ற 4மாதக் குழந்தை. புட்டிப்பாலைக் கொடுக்கும்போதே இறந்துள்ளதால், தவறான முறையில் முன் அனுபவம் இல்லாது கொடுத்து மூச்சுத்திணறியதற்கு 100 வீத வாய்ப்பும் உண்டு. ஆனால் இவைபற்றிய சிந்தை பாதிக்கப்பட்ட முதலாளி குடும்பத்துக்கு இல்லை என்றால், ஷரியாச்சட்டத்துக்கு இல்லையென்றால் - அக்கணவன் - மனைவிக்கும் ஷரியாச்சட்டத்துக்கும் பண்பால் வேறுபாடில்லை என்றுதானே சொல்ல வேண்டும்.

அவளது கடவுச்சீட்டு உண்மையான தகவல் கொண்ட ஆவணம் அல்ல என்று இலங்கை அரசு உறுதிசெய்த பின்பும், அவளது கடவுச்சீட்டில் உள்ளபடி வயதைக் கருத்திலெடுத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதென்றால் மனிதாபிமானம் என்பது கொஞ்சம்கூட இல்லாத சட்டத்தை உடையநாடு என்பதை சவூதி உறுதிசெய்துள்ளது! வாழ்க வளமுடன்!

 தன்மீது விழுந்த ஷரியாச்சட்டத்தின் கொடூரமுகத்திற்கு எதிரான எதிர்வினை எதையும் தன்னுடைய இறப்பிற்கு பின்னேனும் தான்சார்ந்த சமூகத்திடம் இருந்து பெறமுடியாத பாவியாக ரிசானா விளங்குகின்றாள்.  ரிசானாவின் மரணத்தை மூதூர் மக்கள் ஏற்கின்றனர் என்று அங்குள்ள மதத்தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிவித்துள்ளனர். அவர்களுக்கு என்ன? ரிசானாவைப் பெற்றதாய்க்கு இறைவன் பதில் சொல்லியே ஆகவேண்டும்!!! ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கின்றது. இலங்கை அரசு கண்டிக்கின்றது. பிரித்தானியா கண்டிக்கின்றது.மனிதவுரிமை அமைப்புக்கள் யாவும் கண்டிக்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர். என்னே மனிதம்!!!

மலலா என்னும் பாக்கிஷ்தான் சிறுமியை இஸ்லாமியச் சட்டத்திற்கு எதிரானவள் என்று தலிபான்கள் சுட்டபோது, முழுப் பாக்கிஷ்தானும் விழித்துக் கொண்டது. ஆனால் ரிசானாவின் மூதூர் மதத்தலைவர்களிடம் சரணடைந்தது!!!

அவள் புண்ணியபூமி என்று கருதிய சவூதி - அவளது கழுத்தை அறுத்து கொன்றது தனது சட்டத்தால்! அவள் தாய்வீடு என்று கருதிய மூதூர் அவளைக் கைகழுவியது அரபுநாட்டுச் சட்டத்தின் புனிதத்தைக் காக்கும் கடமையுணர்வால்!

இதோ இன்னொரு செய்தி:-
//////பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார்.
சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும், சவூதியைச் சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் ஆவார். //////
http://www.puthiyaulakam.com/2013/01/90-year-old-man-marries-a-15-year-old-in-saudi-arabia.html

ரிசானாவின் உயிரைமட்டுமல்ல 15 வயது சவூதிச் சிறுமியின் எதிர்காலத்தையும் சேர்ந்தே இச்சட்டம் நாசமாக்குகின்றது! அறிவுள்ளோர் சிந்திப்பார்களாக!

ரிசானா - நீ
மதங்களைக் கேள்விகேட்க
வந்தவள்!
கேட்டுவிட்டாய்!
விடை சொல்ல
மனிதர் இங்கெவரும்
இல்லையடி!

Thursday, November 22, 2012

தமிழ்க்குழந்தையின் தந்தை தமிழனில்லையோ?

ஒரு ஐந்துவயது குழந்தையையும் அக்குழந்தையின் தாயையும் சந்தித்தேன்.குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டேன். "யஸ்வந்" என்று பெருமையோடு கூறினார் அத்தாயார்!அப்பன் தமிழனில்லையோ என்றுநினைத்துக்கொண்டேன்!

ஒருகாலத்தில்
நல்லதம்பி,வெற்றிவேல்,முருகன் என்றுபெயர்வைத்து பெருமைகொண்ட தமிழ்ச்சாதி,இன்று யஸ்வந் என்று பெயர்வைக்கும் இழிநிலை!அவ்வளவுதான்!
ஒருசில பெற்றோர் அப்பாவின் முதல் எழுத்தும் அம்மாவின் கடைசியெழுத்தும் என்று பொழிப்புரை வழங்குவர்! அப்பாவின் பெயர்
 "ச" எழுத்தில் தொடங்குவதாகவும் அம்மாவின் பெயர் "னி" என்ற எழுத்தில் முடிவதாகவும் இருப்பின் சனி என்று பிள்ளைக்கு பெயர் வைப்பார்களா?

 அடச்சீ! தன் பண்பாட்டின் பெருமைகளை சீர்குலைக்கும் இனம் ஒரு
இனமா? தமிழர் குலத்துக்கு ஏன் தான் இப்படியொரு இழிநிலை?


Wednesday, January 18, 2012

சங்கத்தமிழை இழிவுபடுத்தும் சங்கர்!!!!!

நண்பன் சங்கரின் ஆளுமைக்குரிய படமா இல்லையா என்ற பட்டிமன்றம் இதுவல்ல!!!! அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை!!!! ஆனால் ஆளுமைமிக்க சங்கர்......அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரையுலகைப் பயன்படுத்தும்போது ஏன் தான் கவனக்குறைவாக இருக்கின்றார் என்னும்போது வருத்தமாகத்தான் இருக்கின்றது. கவனக்குறைவா? சமூக அக்கறையீனமா? ஒருமுறைவிட்டால் தவறு....தொடர்ந்து செய்தால்?

சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்று இலக்கியபெயர்களை நகச்சுவைக்கு பயன்படுத்தினார்!!! தமிழ் பொறுமை காத்தது!
குறித்த கதாப்பாத்திரங்களை கருமைநிற பெண்களாக காட்டியிருந்தாலும் அதில் குறையொன்றும் இல்லை.....ஆனால் கருமைநிறத்தை கேலிக்குரியதாக காட்டியிருந்தமையை எண்ணி வெட்கப்படவேண்டி இருந்தது!!!!

நண்பனில் நடிகர் ஜீவாவின் தங்கையாகத் தோன்றுபவரை கருமைநிறம் உடையவராகவும் கேலிக்குரிய தோற்றமுடையவராகவும் காட்டி சங்கர் தனது கீழ்த்தரமான புத்தியை திரையுலகில் பதிவுசெய்தமையை என்னவென்று சொல்வது? இவ்வளவு ஆளுமைமிக்க ஒரு இயக்குனர் இப்படி சமூகப்பொறுப்பு இல்லாதவராக இருப்பது தமிழ்திரையுலக்கு யார்விட்ட சாபத்தின் விளைவோ?
அங்கவை சங்கவை என்னும் இலக்கியப்பெயர்களை கேலிப்பெயர்களாக சித்தரித்தவர்.......பஞ்சவன் பாரிவேந்தன் என்னும் இனிய தமிழ்ப்பெயரை இலியானாவின் இழவுவாயைக் கெட்டு "அசிங்கமான' பெயராகவும் நவீன உலகிற்கு அழகற்ற பெயராகவும் பத்துத்தடவை சொல்லவைத்து நல்லதமிழ் பெயர்களை கேவலப்படுத்துகின்றாரே.....சங்கர் உண்மையிலேயே தமிழகத்தில்த்தான் பிறந்தாரா?

கொசப்சி பசப்புகல் என்று வாயில் நுழையாத ஒருபெயரை விஜயின் உண்மையான பெயர் என்று தெரிந்ததும் இலியானா குதுகலிப்பதுபோல் காட்சியமைத்த சங்கர் உண்மையில் தமிழுலகுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகின்றார்.....? எல்லோரும் ஜேம்ஸ்...ஜோன்ஸ்....பீட்டர்....ஜூட்...இப்படி பெயர் வைப்பதே நவீன உலகிற்கு ஏற்புடையதென்று சொல்ல துடிக்கின்றாரா?

கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்னும் இத்தாலிப் பாதிரியார் "வீரமாமுனிவர்" என்று தனது பெயரை மாற்றினாரே? அப்படிப்பட்ட அருமையை உடைய தமிழுலகுக்கு இவர் சொல்லும் செய்தி..ஐயகோ!!!!!!

"பாரி..பூரி என்று" பாரி என்னும் அருமையான இலக்கியப் பெயரை கிண்டல்செய்து இலியானா தனது இழவுவாயால் சொல்லும்போது தமிழர் கைதட்டி இரசிக்கும் இழிநிலை?
ஏனெனில் விஜய் என்னும் மாவீரனின் தொண்டர்கள்...படத்தில் பிழைபிடிப்பதை எப்படி இரசிப்பர்???

தமிழக அரசு வரிவிலக்குவேறு வழங்கி பெருமைப்படுத்துகின்றது.......கடவுளே...தமிழர் புத்தாண்டையே மாற்றிய கேவல அரசு நாட்டை ஆளுகையில் இதெல்லாம் சாத்தியம்தான்!!!! (கேவலம்=அதிமுக=திமுக=தேதிமுக)

அதுசரி....இந்தப்படத்தில் இப்படியெல்லாம் தமிழ் சிதைக்கப்பட்டிருந்தும் தமிழ் தலைவர்கள்....தமிழறிஞர்கள்......எவருமே எதிர்த்து குரல்கொடுக்கவில்லையே....குறித்த வசனங்களை நீக்கச்சொல்லி நீதிமன்றம் நாடவில்லையே.....என்ன கொடுமை சரவணா!!!! உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம்.....என்று ஆயிரம் தமிழ் அமைப்புகள் இருந்தும் என்ன பயன்????

இந்திய ஜனநாயக கட்சி என்றொரு கட்சியை அவமானப்படுத்தும் படி படத்தில் ஏதோ சொல்லப்பட்டுள்ளது என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றது ஒருகூட்டம்!!! அது என்ன கட்சி? எனக்கு இப்போதுதான் அப்படியொரு கட்சி இருப்பதே தெரியவந்தது!!! ஆனால் தமிழே அவமானப்படுத்தப்பட்டுள்ளது!!!! யாரும் ஒரு அறிக்கைகூட விடவில்லையே??? கொடுமை!!! கொடுமை!!!!கொடுமை!!!! அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்ககூடாது கடவுளே!!!!!

விஜய் இரசிகர்களே,
விஜய் படமென்றாலும் சரி...ரஜினி படமென்றாலும் சரி....தமிழை கலங்கப்படுத்த முனையாதவரைக்கும் அவற்றுக்கு வாழ்வு என்று பறையுங்கள் தமிழை தாயிலும் மேலாய் கருதினால்!!!!!!

Sunday, December 11, 2011

தமிழ் திரைப்பட நடிகர்களும் நம் சனங்களும்!!!!

இந்தக் காணொளியை தற்செயலாக அவதானிக்க வேண்டி வந்தது. காணொளியை பார்த்ததும் ஆச்சரியப்படவில்லை! நம்மவரின் முட்டாள்த்தனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக திரைப்பட நடிகர்களை பாராட்டத் தோன்றியது! நீங்களும் ஒருதடவை பார்த்துவிட்டு மீதிப்பகுதியைப் படிக்க.



திரைப்படக்காரர்களுக்கு பிழைப்புத்தான் முக்கியம் என்பதை நம் சனங்கள் புரிந்து கொள்ளும் காலம் எப்போதோ? கப்டன் என்பார்.....எந்த இராணுவத்துக்கு என்றால் முழிப்பார்! இளைய தளபதி என்பர்.....எந்தப் படைக்கு என்றால் திணறுவர்! தல என்பர்........என்னத்தை சாதித்த தலைவர் என்றால் மௌனிப்பர்!

பிழைப்புக்காக இங்கொன்று அங்கொன்று என்று இடத்துக்கு ஏற்றாற்போல் பேசி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் கூட்டத்தை தலையில் கொண்டாடும் சமூகத்துக்கு விடிவுவர வாய்ப்புண்டோ?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள திரைப்படத்துறை அதனுடைய அரசுக்கு முழு ஆதரவையும் தெரிவித்து இருக்க; தமிழக திரைப்பட நடிகர் பட்டாளம் சமரத்தொனியில் ஆலோசனை கூறும் அருமையில் ஒழிந்திருக்கும் பெருமை என்ன என்பதை நம்மவர் தெளிந்து கொண்டால் நடிகர்களுக்கு பால் ஊற்றி நீராட்டும் இரசிகப்பெருமக்கள் வாடுவர்! அது திண்ணம்!

எங்கே தமது திரைப்படங்களுக்கு கேரளாவில் சிக்கல் வந்துவிடுமோ என்ற பேதிமாத்திரை வயிற்றுள் சென்ற விளைவுதான் "சமரசத் தொனியில்" ஆலோசனை வழங்கும் அரும்பெரும் பண்புக்கு காரணம்!!!!! ஆனால் கேரள திரைப்படத்துறையினர் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கவே இல்லை பார்த்தீர்களா? அதுதான் கேரளா இந்தியாவில் உரிமையுள்ள மாநிலமாக விளங்க காரணம்!!!!!
இந்தியா அரசியலை தீர்மானிக்கும் மாநிலமாக விளங்க காரணம்!!!

எங்கள் சனங்கள் திருந்துவார்களா? சூரியன் மேற்கில் உதிக்குமா?

Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்?

அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம் பெருக்கெடுத்தது! என் நெஞ்சறை நிசப்பதமானது!


இப்படிப்பட்ட அருமையான தமிழ்மகனை மீண்டும் இந்திய தேசத்தின் சனாதிபதியாக்க உடன்படாத கருணையில்லா நிதியை "கலைஞர்" என்று சொன்னால் தமிழ் மன்னிக்குமா? இந்திய தேசத்தின் சனாதிபதி தெரிவு மீண்டும் வந்தவேளை கருணையில்லா நிதியின் தயவில் காங்கிரசு இருந்தது.ஆனால் எங்கே திரு.அப்துல் கலாமின் புகழ் தமிழ்நாட்டில் தன்னைவிட ஓங்கிவிடுமோ என்று பயந்து மீண்டும் அப்துல்கலாமை நியமிக்க எந்தவிதமான முனைப்பையும் காட்டாது "மௌனமாய்" இருந்த கயவனை "கலைஞர்" என்று சொல்லும் நா........தமிழ் வாழும் நாவோ?

தமிழைச் செம்மொழியாக பிரகடனம் செய்த இத்தகு அருமையான தமிழ்மகனுக்கு......இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பெருமகனுக்கு
செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பிதழையே அனுப்பாது அவமதித்த கருணையில்லா கயவனை 'கலைஞர்' என்று துதிபாடும் வாய்களுக்கு மரணத்திலும் வாய்க்கரிசி இல்லாது போக தமிழ்த்தாயே நீ சபித்துவிடு!

ஐயகோ....! இந்தத் தமிழ்மகன் இப்போதும் சனாதிபதியாக தொடர்ந்து இருந்திருக்கும் கௌரவத்தை பெற்றிருந்தால்........மூன்று பேர் மரணத்தின் பிடியில் வாடுவார்களா? அப்படியொரு கொடுமை நடந்திருக்குமா?

உங்கள் நெஞ்சறை என்ன சொல்கின்றது?

பிற்குறிப்பு - அப்துல்கலாமின் காணொளி இருக்கும் இப்பதிவில் கருணையில்லா நிதியின் நிழற்படத்தை இணைப்பதே பாவம்!

Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம்

தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும்

தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம்

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை!

தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்!

உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்!

உலகிலேயே தன்னுடைய மொழி அல்லாத இன்னொருமொழியில் பாடி ஆடி குதுகளிக்கும் என்றால் அது தமிழினம் தான்! கேட்டால் இசைக்கு மொழியில்லை!!!!

மெத்தப்படித்த ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டுபேர் தமதுமொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடினால் அது தமிழினம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதலை சங்கத்தமிழர் கொண்டாடினர். ஆனால் இன்று.....காதலைச் சொல்லக்கூட தமிழை பயன்படுத்த மறுக்கின்றனர் திரையிலும் நடைமுறையிலும்! ஆக; தமிழுக்கு தமிழரிடத்தில் மதிப்பே இல்லை!

இப்போது சொல்லுங்கள் தமிழனுக்கு தமிழ் எதற்கு?

அடப்போங்கோ.....தமிழன் இப்படி உணர்ச்சிபூர்வமாக ஏதேனும் இருந்தால் படித்து ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, ஏதேனும் சமாதனம் சொல்லி தன்வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவான்!

Friday, May 27, 2011

சுவாமி தூக்குவதிலும் சாதியா? கடவுளே!

தமிழகத்தில் சென்னையிலுள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திற்கு சென்றிருந்தபோது, சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை பிராமணர் மட்டுமே மாறிமாறி தூக்கினர். மெதுவாக அங்கிருந்த ஒருவரை சாதரண பக்தர்கள் தூக்கக்கூடாதா என்று கேட்டேன். பிராமணர் சுத்தமானவ்ர்....எனவே தீட்டுப்படாது! ஆனால் ஏனையவர் எப்படி என்று தெரியாதே என்றார். காஞ்சியில் கருவறையில் செய்யாத அசுத்தத்தையா சாதரண பக்தர் செய்துவிடுவர் என்று கேட்க என்னுடைய நாக்கு துடித்தது.ஆனால் அடக்கி அமைதியாகி வீடு திரும்பினேன்!

பிரதோசவிரதம் அன்று இப்படித்தான் சென்றிருந்தபோது உட்பிரகாரத்துக்கு நுழைவதற்கு பணம் அறவிட்டனர்! மசூதியிலும் தேவாலயத்திலும் நடைபெறாதது...எமது கோயில்களில் மட்டுமே நடைபெறுவது......பணம் அறவிடுவது! என்ன கொடுமை சரவணா?

சண்டேசுவரர் பிரகாரம் இருக்குமிடம் தெரிந்தால்த்தானே பிரதோச சுற்றுமுறைபடி கோயிலை வலம்வர முடியும்? எனவே; அங்கு பற்றுச்சீட்டு விற்பவரிடமும் பின்னர் நிர்வாகத்துறையினரிடமும் கடிந்து கொண்டேன்! ஏழைகள் விரதமிருந்தால் அவர்கள் எப்படி இப்போது கோயில் பிரகாரத்தை விரதவிதிப்படி சுற்றமுடியும் என்று நான் கேட்டகேள்விக்கு கடவுள் வந்துதான் விடைசொல்ல வேண்டுமென்று அங்கிருந்த பெண்மணி ஒருவர் என்னோடு சேர்ந்து தன்குறையை கூறி அமைதியானார்.

நாயன்மார்களை சாதரண பக்தர்கள் தூக்க அனுமதிக்கப்பட்டிருந்ததையும் நாயன்மார்களை தூக்கி வலம்வந்தபோது பூசகர் எவரும் நாயன்மார்களுடன் செல்லாமல் இருந்தமையையும் மீண்டும் நாயன்மார் ஆலயத்துக்கு வந்ததபோது ஆலயவாசலில் பூசகர்களுக்காய் நாயன்மாரை காக்கவைத்து இருந்தமையையும் கண்டு மனம் வெந்துபோனேன்! அப்போதுதான் விளங்கியது நாயன்மார் என்றால் பூசகர்களைப் பொறுத்தவரை சாதரணமானவரே என்பது! இதில் என்ன வேடிக்கை என்றால் சிவன் பார்வதியைத் தூக்குவதற்கு முண்டியடித்த பிராமணர் எவரையுமே காணவில்லை நாயன்மாரின் வீதிவலம் நடந்தபோது!

நாயன்மார்களின் பெயரை தமது பெயர்களாகவோ அல்லது தமது பிள்ளைகளின் பெயர்களாகவோ கொண்ட பிராமணரைக் காட்டுவீரா என்று ஒரு திராவிடக்கட்சி நண்பன் என்னிடம் கேட்டிருந்தான்! அந்தக்கேள்வியை ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு வந்தது. அப்போதும் சரி; அவன் கேட்டபோதும் சரி அதற்கு விடைசொல்ல முடியவில்லை! எனக்குத் தெரிந்த பிராமணர் பலரை நினைவு படுத்தினேன். எவரின் பெயரும் நாயன்மாரின் பெயரைக் கொண்டிருக்கவில்லை! ஆனால் நாயன்மாரை தூக்குவதற்கு எந்தவொரு பிராமணரும் முனைப்புக்காட்டாமையை கண்டபோது அறுபத்திமூன்று நாயன்மார்களையும் தமிழகத்து பிராமணர் எவ்வளவு மதிக்கின்றனர் என்று முழுமையாகப் புரிந்தது! சமயகுரவர் நால்வருக்குமே இந்தநிலை என்றால் ஏனையவரைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? திருஞானசம்பந்தர் என்ற பிராமண ஞானக்குழந்தையின் பெயரைக்கூட தமது பிள்ளைகளுக்கு வைக்கவிரும்பாத இவர்களை என்னவென்று சொல்வது? இவர்களுக்கு கைலாயம் கடைசிவரை கிடைக்காது என்பது திண்ணம்! ஆனால் அதை பூலோகத்தில் என்று இவர்கள் உணர்வர்! அன்றுதான் பூலோகத்தில் சைவசமய மறுமலர்ச்சி ஏற்படும்! அதுவரை எல்லாம் பூச்சியமே!

வீட்டிற்கு வந்து இதுபற்றி பெரியப்பாவுடன் கடிந்து கொண்டேன். பலவிடையங்கள் இப்படி சமயக்கருத்துக்களில் முரண்பட்டு வாதிடுவதுண்டு.சமயவிடயங்களில் அவரோடு கலந்துரையாடுவதில் எனக்கு அலாதிப்பிரியம்! அவர் சொன்னார் "கோயிலுக்கு எதற்குப் போனாய்? கடவுளைக் கும்பிடத்தானே? நீ கடவுளைப் பார்.... கடவுளை இவற்றைப் பார்த்துக்கொள்வார்' என்று என்னை அமைதிப்படுத்தினார். நான் மட்டும் கும்பிட்டால் போதுமா? ஏனையவரும் கும்பிட வேண்டாமா? கடவுள் பார்ப்பார் என்று அநீதியை சும்மாவிட்டுவிட முடியுமா? அது எமது இயலாமைக்கு நாம் சொல்லிக்கொள்ளும் சமாதானம் தானே? பாவத்தைக் கண்டும் காணாது இருப்பது பாவத்துக்கு துணைபோகும் செயலல்லவா? இப்படியான வினாக்கள் என்னுள் எழுந்தன! என் உணர்வுகளை ஆமோதித்தன!

பிராமணத்துவ சாதித்துவத்தை காசியில் கொண்டுபோய் கரைக்கும்வரை நாத்தீகவாதம் தமிழகத்தில் செழித்தபடிதான் இருக்கும்! ஆயிரம் ஆயிரம் பெரியார்கள் பிறந்தபடிதான் இருப்பர்! மதமாற்றம் பெருத்தவண்ணமே இருக்கும்! உலகமெல்லாம் பரவியிருந்த சிவவழிபாடு......தெற்காசியா என்று சுருங்கி இன்று இந்தியா என்று ஒடுங்கிவிட்டது! அதுவும் சைவசித்தாந்தம் ஆதீனங்களுக்குள் முடங்கிவருகின்றது! இந்த நிலை எமது சமயத்துக்கு ஏன் வந்தது?

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் திருவிழா காணொளி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க!


பிராமணர் அல்லாதவர்களே சுவாமி தூக்குகின்றனர்! இப்படித்தான் இலங்கை கோயில்கள் எல்லாவற்றிலும்! இதனால்த்தான் எத்தனை துன்பம் வந்தபோதும் போர்த்துக்கேயர் தொட்டு துன்பவரலாற்றையே சைவசமூகம் கண்டபோதும் சைவநெறி இலங்கையில் தமிழர் பகுதிகளில் செழிப்புற்று இருக்கின்றது! இளைஞர் ஊர் கோயில்களோடு ஐக்கியமானவர்களாகவே இருப்பர்! சுவாமி தூக்குவது தொட்டு ஆலயத்தின் பெருப்பாலான பணிகளை பிராமணர் அல்லாதவரே செய்வர். அதாவது பிராமணத்துவ சாதித்துவத்துக்கு உரம் இல்லாமையினாலேயே ஆகும்!

இலங்கை பிராமணருக்கு தமிழுணர்வு திராவிடர் கழகத்தலைவர் வீரமணியைவிட அதிகம் உண்டு! தமிழ்ப்பற்றில் கலைஞருடன் இலங்கை சைவப்பிராமணரை ஒப்பீடு செய்வதே குற்றம்!

தமிழகத்தில் பிராமணத்துவ சாதித்துவத்துக்குள்ள உரத்தை அகற்ற வேண்டும்! சங்கரமடத்து சொந்தங்களை சைவாலயங்களிலிருந்து ஒதுக்கிவைக்க வேண்டும்! ஆதிசைவ சிவாச்சாரியர்களையே சைவாலயங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும்! தமிழ் திருமுறைகளை கற்றவர்களாகவும் ஆகமசாத்திரங்கள் தெரிந்தவர்களாகவும் உள்ளவர்களை பரீட்சைத்தேர்வுகள் மூலம் தெரிவுசெய்து பணிக்கு அமர்த்த வேண்டும். பூணூல் இருக்கும் ஒரேகாரணத்துக்காக சைவாலயப் பூசகராக நியமிக்கும் போக்கை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்! இவையாவும் நடைபெறுமென்றால் திராவிடர் கழகத்துக்கு அரசியல் ஓட்ட விசயமில்லாமல் போய்விடும்!

குறிப்பு:- இலங்கையில் கொழும்பில் சங்கரமடத்து தரகர்கள் ஊடுருவி இலங்கையெங்கும் மெதுவாக பரவி வருகின்றனர்! சங்கரமடத்து துறவிகளின் நிழற்படங்களை அச்சடித்து கையடக்க நாள்காட்டிகளாக வழங்கிவருகின்றனர்! சிவாச்சாரியார் குருகுலப்படிப்புக்கு தற்போது சங்கரமடத்துக்கே பெருமளவில் அனுப்பப்படுகின்றனர்! என்ன கொடுமையடா இது!
சுமார்த்தசமய மடம் சைவசமய சிவாச்சாரியார்களை உருவாக்க இவ்வளவு காசு செலவழிக்கின்றது! எல்லாம் காரணம் இல்லாமலா? மெதுவாக சுமார்த்த பிராமணத்துவத்தை ஊட்டி அனுப்பிவிடத்தான்!எல்லாம் இந்துமதம் என்ற போர்வைக்குள் நடக்கின்றது! சிவசிவ!

தமிழக சைவத்தலைவர்கள்,பிரதிநிதிகள்,ஆதீனத்து முதல்வர்கள் இதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்களா?

படங்கள் மற்றும் காணொளி newjaffna.com இணையத்திலிருந்து பெறப்பட்டவையாகும். நன்றி

Tuesday, March 22, 2011

முறைதவறிய கர்ப்பங்கள் யாழில் சொல்லும் நீதி என்ன?

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் இன்றும் ஒருசில நாடுகளில் இரண்டாம் உலக யுத்தத்தின் வடு ஆண்-பெண் சனத்தொகை விகிதாசாரத்தில் காணப்படுகின்றது. ஏனெனில் இப்போர்க்காலத்தில் இப்பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டன! இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே இன்னுமுள்ளது. எனவே; ஒரு பெண் பல ஆண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும்; விரும்பிய நேரத்தில் விவகாரத்துச் செய்து கொள்வதும்; திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்று வளர்ப்பதும் பொதுவான காட்சிகளாகவுள்ளன. குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவதனூடாக இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கின்றது. இதன்மூலம் ஆண் - பெண் விகிதாசார இடைவெளியை குறைக்க முயலுகின்றது. பேரூந்து ஓட்டுநர் தொடக்கம் மருத்துவத்துறைவரைக்கும் பெண்களின் முகங்களையே எங்கும் காணமுடியும். இதுதான் இந்நாட்டில் யுத்தம் உருவாக்கிவிட்ட வடு! இத்தைய வடு இலங்கையின் வடகிழக்கை பலதாசாப்தங்களுக்கு பாதித்திருக்கும் என்பது வெளிப்படையான தொன்று!

கள்ளக் காதலால் கருகிய உயிர்,பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்த சோகம்,கள்ளக் காதல்களால் பாழ்படும் யாழ்ப்பாணம் என்று பத்திரிக்கைகளும் இணையங்களும் தலையங்கங்கள் தீட்டுகின்றார்களே தவிர; இவை ஏன் வந்தன என்றோ -அன்றி இதன் தீர்வு என்ன என்றோ சிந்திப்பதாக தெரியவில்லை!
சுகாதாரத்துறை திருமணமாகாத கருக்கலைப்புகளும் சட்டவிரோத கருக்கலைப்புகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள இந்தத்தருணத்தில்; இத்தகைய கொடூரமான தலைப்புகளுடன் வெளியாகும் செய்திகள் எமது சமூகத்துக்கு ஏதோவொன்று பற்றாக்குறையாக இருப்பதை உணர்த்துகின்றது. அதுயாதென்று ஆராயமுனைந்தால் "விழிப்புணர்வு ஏற்படுத்தல்" பற்றிய சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே என்று புலனாகும்!

நடந்துமுடிந்துள்ள கொடும்போரில் ஆண்கள் பலர் இழக்கப்பட்டமையால்; திருமணமாகாத பெண்கள் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திருமணமாகாத பெண்களின் அதிகரிப்பே திருமணமாகாத பெண்களின் கருக்கலைப்புகள் அதிகரிக்க ஒரே காரணம்! அதுபோல்; கணவன்மாரை போரில் இழந்து விதவைகளாக உள்ள பெண்களும் இந்த சட்டவிரோத கருக்கலைப்புகளுக்கும் ஏனைய சங்கடமான செய்திகளுக்கும் காரணமாக விளங்குகின்றனர்.

இங்கு; ஒரு விடயத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரில் அரைவாசிக்கு மேற்பட்டோர் குடியுறுமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டில் பெண் பார்த்து திருமணம் செய்கின்றனர். அதேபோல் வெளிநாட்டிலுள்ள ஆண்கள் இலங்கையிலுள்ள பெண்களையே சீதனம் போன்றவற்றையெல்லாம் சிலசமயம் கைவிட்டு; நாடிச்சென்று திருமணம் செய்கின்றனர். இதனால் நடுத்தர பொருளாதார வளமுடையவர்கள் பெரிதும் பாதிப்படையவில்லை என்பதை உணர வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது பொருளாதரமட்டத்தினைச் சேர்ந்த ஆண்களின் எண்ணிக்கை குறைவால்; முதிர் கன்னிகளாக பெருமளவானோர் இருக்க வேண்டிய இக்கட்டானசூழல் உருவாகியுள்ளது.

பல பெண்கள் சில ஆண்கள் என்ற சூழல் எங்கெங்கு உண்டோ அங்கங்கு முறைதவறிய உறவுகள் உருவாகத்தான் செய்யும். ஆண் - பெண் சனத்தொகை விகிதாசாரம் எங்கெங்கு பெருமளவில் வேறுபட்டு பெரிய இடைவெளிகளில் உண்டோ அத்தகைய இடங்களில் முறைதவறிய உறவுகள் ஏற்படுவது இயற்கையின் நியதி என்பதை பலரும் உணர எத்தனிக்கின்றார்களில்லை! தமிழ் பண்பாடு பாழாகிவிட்டதென்று ஓலமிடுவதுடன் இவர்கள் பணி முடிந்துவிடுகின்றது! பாலியல் சுரப்புகளாகிய ஈஸ்ரோஜினுக்கும் புரோஜோஸ்டிரோனுக்கும் தமிழும் தெரியாது! ஆங்கிலமும் தெரியாது! எந்தமொழி பந்தமும் இல்லை! அது இயற்கையின் நியதிப்படி வேலைசெய்துதானே ஆகவேண்டும்! எனவே தமிழ் பண்பாடு மரணிக்கின்றது என்று ஒப்பாரிவைப்பதில் பலன் எதுவுமில்லை.
முதிர்கன்னிகளின் பெருக்கத்துடன் போரில் கணவன்மார்களை இழந்த இளம் விதவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதால் இந்த பாலினச்சுரப்புக்களின் தாக்கம் பெரிதும் சமூகத்தில் வெளிப்படத்தான் செய்யும்.

சிலப்பதிகாரம்-மணிமேகலை காப்பியங்கள் அன்றைய காலத்திலும் தாசி குலம் தமிழ்க்குலத்தில் இருந்துள்ளதென்பதை சுட்டியிருக்க - விபச்சாரத்திலும் கொடுமையான ஒன்றை இந்த முதிர்கன்னிகளும் இளம் விதவைகளும் செய்வதுபோல் ஊடகங்கள் வாந்தி எடுப்பது எந்தவகையில் நீதியாகும்?

ஊடகங்களின் இத்தகைய போக்கு ஏற்கனவே மனவாட்டத்துக்குள் வாடியிருக்கின்ற இப்பெண்களுக்கு போடப்படுகின்ற "முள்வேலி" போன்றுதான் உள்ளது! பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று பேசுபவர்கள் இந்தவிடயத்தில் ஊமைகளாகவே உள்ளமையை என்னென்று சொல்வது?

அப்படியானால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்ன?

இளம் விதவைகளுக்கு பெற்றாரோ அன்றி உற்றாரோ மறுபடி புரிந்துணர்வுடைய ஆணுக்கு அல்லது மனைவியை இழந்துள்ள ஆணுக்கு திருமணம் செய்துகொடுக்க ஊக்குவித்தல் வேண்டும்- இதுசார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்!
இந்திய-பாக்கிஷ்தான் பிரிவினையின்போது பாக்கிஷ்தானிலிருந்து பலபெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது; பாதிக்கப்பட்ட பெண்களை இளைஞர் முன்வந்து திருமணம் செய்ய வேண்டுமென்று காந்தி வேண்டியிருந்தார் என்றும் ஆனால் அவரது வேண்டுதலை யாரும் செவிமடுக்கவில்லை என்றும் படித்தநினைவுண்டு. இது பெண்களின் பிழையா? அல்லது இதற்கு ஆண் சமூகத்தின் "கற்பு" தொடர்ப்பான அடக்குமுறை உணர்வு காரணமா? இப்போது ஊடகங்களில் இதுபற்றி எழுதுபவர்களும் இத்தகைய மனோபாவத்திலிருந்துதான் எழுதுகின்றார்கள். கற்பு என்ற பதத்தை தூக்கிப்பிடித்து தமிழரின் மானம் போவதாக வருந்துகின்றார்கள்!!!!

உண்மையில் 'கற்பு' என்ற சொல்லை வைத்து இவர்கள் தமிழரின் மானம் போகின்றது என்று அழுகின்றார்களோ இல்லையோ, விதவைகளின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைப்பதை தடுக்கின்ற விடயமான ஆண்களின் பார்வையிலுள்ள பெண்களிளுடன் தொடர்பான "கற்பு"க்கு அங்கிகாரம் வழங்குகின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்! இந்த உண்மையை ஊடகங்களில் எழுதும் சமூகசீர்திருத்தவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்!

கற்பு என்பது காதலின் அறவடிவம். பள்ளிக்காதல்,பருவக்காதல்,பல்கலைக்கழக காதல்,திருமணக் காதல் என்று காதல்கள் பலமுறை மலருவதுண்டு.இதுவும் இயற்கை நியதியே! எனவே; கற்பும் அப்படி மறுபடி மலருவதற்கு என்னதடை உண்டு? காதலிக்கும் நபருக்கு நேர்மையுடன் - அறமுடன் இருத்தல் என்பதுதான் கற்புக்கு சொல்லக்கூடிய விளக்கவுரை! அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்கநெறி! அவ்வளவே! எனவே; இதுபற்றிய விழிப்புணர்வை வழங்கி; விதவைகளுக்கு திருமணம் நடைபெற வழிவகுப்பதுதான் அறிவுடமை! பெண்ணியம் பேணும் செயல்! அதைவிடுத்து; இளம் விதவைகளை வாழ்நாள் முழுக்க; விதவைகளாக இருக்கப் பணிப்பது சமூக ஒடுக்குமுறையின் ஒருவடிவம்!

முதிர்கன்னிகளின் பெருக்கத்துக்கு வறுமையும் ஒருகாரணமாக இருப்பதால் - சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையை பரப்புதல் வேண்டும். இதுசார்ந்த எண்ணிலடங்காத திரைப்படங்களுண்டு. அவற்றை தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பலமுறை தொடர்ந்து ஒளிபரப்புவது இதுபற்றிய விழிப்புணர்வுக்கு ஏதுவாக அமையும். தமிழக முச்சக்கர வண்டிகளில் திருமண வயது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை காணக்கூடியதாகவுள்ளது. அதுபோல் மறுமணம் தொடர்பானதும் சீதனம் தொடர்பானதுமான விழிப்புணர்வு வாசகங்களை எங்கெல்லாம் பேணமுடியுமோ அங்கெல்லாம் பேண வழிவகுத்தல் வேண்டும். எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பர். "இதுவும் பலனைத் தருமா? " என்று வினா தொடுப்பதை தவிர்த்து; இவற்றின் மூலமும் பலனைப் பெற வழிசமைப்பதுதான் அறிவுடமை!

இலவச திருமணங்களை சமூக அமைப்புகள் ஒழுங்கு செய்வதுடன் அதற்கு ஊடகங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் வேண்டும். கோபுரங்களை போட்டிக்கு கட்டுவைத் காட்டிலும் சைவ அமைப்புகளும், வெளிநாடுகளில் உள்ள தமிழரின் கோயில் நிர்வாகசபையினரும் இதுபற்றி உரியமுறையில் சிந்தித்தால் சமூகசீர்த்திருத்தத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்திவிடலாம்!

மக்கள் சேவை மகேசன் சேவை என்பதையே நாயன்மார்களும் கடைப்பிடித்தனர். நாவலரும் கடைப்பிடித்தார். ஆனால் சைவ நிறுவனங்கள் இதில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரிய ஒன்றே! பிரித்தானியாவிலிருந்து பல்லாயிரம் பவுண்சு செலவில் பெரிய காண்டாமணி ஒன்று யாழ்ப்பாணத்து கோயிலுக்கு செய்தனுப்புவதற்கு ஏற்பாடாகியுள்ளதென்ற செய்தி பலமாதங்களுக்கு முன்னர் இணையங்களில் வலம்வந்திருந்தது. இலங்கைப் பணத்தில் பல்லாயிரம் கோடி மதிப்புடையது என்று புகழாரம் சூட்டப்பட்டிருந்தது. கடவுளுக்கு மணி செய்து கொடுக்க செலவளிக்கும் பணத்தை பயன்படுத்தி பணப்பற்றாக்குறையால் சீதனம் கொடுக்க முடியாது முதிர்கன்னிகளாகவுள்ளவர்களுக்கு திருமணம் செய்துகொடுக்க பயன்படுத்துவதனூடாகவும் விதவைகளாகவுள்ளவர்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பெருமளவு சீதனம் வழங்குவதனூடாக விதவைகளின் மறுமணங்களை அதிகரிப்பதன் மூலமும் சமூகத்துக்கு பணிசெய்வது மகேசனுக்கு செய்யும் திருப்பணிக்கு இணையானதே! உண்மையான சைவப்பணியாகவும் அமையும்! வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்ற சுவாமி விபுலானந்தரின் வரிகள் என்றுதான் இவர்களுக்கு பொருளுணர்த்துமோ?

பெண்களுக்குரிய வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் வேண்டும். பெண்கள் சாதுவான வேலைகளுக்கே பொருத்தமானவர்கள் என்ற கருத்து ஒழிக்கப்படல் வேண்டும். பேரூந்து சாரதி என்றாலும் சரி; நடந்துனர் என்றாலும் சரி பெண்களையும் பணியில் இணைக்க வழிவகை செய்தல் வேண்டும். அதிலும் முதிர்கன்னிகளுக்கும் விதவைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பைக் கூட்டும்பட்சத்தில்; அவர்களுக்குரிய தனிமை விரக்தி தானாகவே நீங்க ஆரம்பிக்கும்! பெண்களின் தனிமை விரக்தியை பயன்படுத்தி அன்புமழை பொழிந்து பாலியல்பலன் பெறுவோருக்கு பெரியதொரு தடையை இதன்மூலம் உருவாக்கலாம். பூனைக்கு யார் மணிகட்டுவதென்று சிந்தித்து இருக்காது; உரியமுறையில் அரசியல்த்துறையைச் சார்ந்தோரும்;சமூக அமைப்புகளை வழிநடத்துவோரும் இதுபற்றி சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் தொடர்பான அறிவு, ஆணுறைகளின் பாவணை சார்ந்த அறிவு, இலகுவாக- சங்டகமின்றி ஆணுறைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஆகியவற்றை ஏற்படுத்துவது தலையாய பணி! இதில் நாணுவதற்கு ஒன்றுமில்லை! போரினால் உருவான வடுக்களில் ஒன்று ஆண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்! அது பொருளாதரமட்டத்தில் கீழ்நிலையில் உள்ளோரைப் பெருமளவு பாதித்துள்ளது. பாலியற்கல்வி இவர்களிடம் சொற்பமாய்க்கூட இல்லை! எனவே பண்பாடு என்ற ஓப்பாரிகளுக்கு "பொடா-தடா' போட்டு; பாலியற்கல்வியை ஊர் ஊராக சமூக அமைப்புகளுடாக ஏற்படுத்துவதுடன் கருத்தடை மாத்திரைகளையும் ஆணுறைகளையும் இலவசமாகவேனும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தல் வேண்டும். குறைந்தபட்சம் இவற்றின் பாவனை தொடர்பான அறிவை மக்களிடம் ஏற்படுத்தல் உடனடித்தேவையாகவுள்ளது.ஏனெனில்;
ஆணுறையை வழங்கி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அதை பயன்படுத்தும் முறைகளையும்;பயன்படுத்துவதில் உள்ள நுணுக்கங்களையும் விழிப்புணர்வு கூட்டங்களூடாகவும் மருந்தகங்களிலும் மருத்துவமனைகளிலும் சமூக அமைப்புகளூடாகவும் கற்பிக்கவேண்டும்.அதுவே முழுமையான பலனை ஏற்படுத்த வழிவகுக்கும்!

இளம் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கும் மறைமுகமாக முதிர்கன்னிகளின் பெருக்கம் ஏதுவாக அமைகின்றதை ஏற்றே ஆகவேண்டும். முதிர்கன்னிகள் சமூகப்பிறழ்வுக்கு உள்ளாகும்போது அவர்களைப் பார்த்து இளம்பருவ பெண்கள் தவறான பாதைக்கு தூட்டப்படவாய்ப்புண்டு. அதேநேரத்தில் பருவ வயதினரின் அதிகரித்த கருக்கலைப்புகளுக்கு ஆபாசப்படங்களின் பெருக்கமும் பெருங்காரணமே! எனவே; இதை பெற்றோரும் ஆசிரியர்களும் உரியமுறையில் அவதானமாக அணுகி பருவவயதினரை நெறிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

இத்தகைய சமூகநடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்கள் எங்கும் மலருமானால் - பிறந்த சிசுவை குழிதோண்டி புதைக்கும் கொடுமைகள் தமிழர் பிரதேசங்களில் உருவாகாமல் இருக்க வழிவகுக்கும். கற்பு என்றும் பண்பாடு என்றும் ஒப்பாரி வைப்பவர்களால் சுகாதாரமான நல்வாழ்வுடைய சமூகத்துக்கு எந்தவகையிலும் ஆக்கபூர்வமான விளைவுகளில்லை! இப்போது இதுதொடர்பான உடனடித்தேவையாக தமிழர் பிரதேசங்களுக்கு இருப்பது ஆக்கபூர்வமான செயற்பாடுகளே!

வின் அ வைவ்(WIN A WIFE)/ மனைவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவுஸ்ரேலிய வானொலி ஊடகமொன்று முன்னைய சோவியன் ஒன்றியத்தித்தின் பகுதியான உக்ரேன் நாட்டு பெண்களை அவுஸ்ரேலியருக்கு திருமணம் செய்துவைத்தல் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியமையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உக்ரைன் மகளீர் அமைப்பொன்று உக்ரைன் பெண்கள் தாசிகள் அல்ல என்று குறித்த அவுஸ்ரேலிய வானொலிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இடைக்குமேல் ஆடையின்றி அரைநிர்வாண போராட்டம் செய்தமையும் உலகமறிந்ததே! இப்படியான இழிநிலை எமது சமூகத்துக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏற்கனவே இலங்கைக்கு அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக தொழில்நிமித்தம் வந்த வெளிநாட்டார் வடகிழக்கு தமிழ்ப் பெண்களை திருமணம் செய்து தமது நாடுகளுக்கு அழைத்துச் சென்றமையும் நடந்துள்ளது. அதேசமயம் தமது சுகங்களுக்கு தற்காலிகமாய் பயன்படுத்தியமையும் நடந்துள்ளது. எனவே கண் கெட்டபின் சூரிய வணக்கம் செய்து பயனில்லை என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட சமூக அமைப்புகள் முன்வரவேண்டும்! இதுதான் முறைதவறிய கர்ப்பங்கள் யாழ்ப்பாணத்தில் சொல்லும் நீதி!

திவியரஞ்சினியன்

Thursday, March 17, 2011

தமிழ்த் தியாகி விநாயகர்!


அனுராதபுரத்தில் 14ம் திகதி பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் சிலையை டயர் போட்டு எரித்த கேவலமான செய்தியை அறிந்ததும் மனவருத்தம் ஏற்பட்டது!

திராவிடர் கழகத்தவருக்கு விரோதியாக இருந்த பிள்ளையார் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் விரோதியாகிவிட்டார்! பிள்ளையாரை எதிர்த்து திராவிடம் பேசி; தென்னாட்டு சிந்தாந்தத்தையும் புறக்கணித்து;தமிழர் உரிமைகளையும் துறந்து திமுகவுக்கு சாமரை வீசுவதிலேயே திகவின் காலம் கழிகின்றது!
தமிழ்நாட்டில் திகவினர் அன்று பிள்ளையார் சிலைகளை உடைத்து புரட்சி என்று புண்ணாக்கு செய்தனர்! இலங்கையில் தமிழருக்காக பிள்ளையார் எரியும் நிலைக்கு ஆளாகின்றார்! ஆக; பிள்ளையார் பாவப்பட்ட கடவுளப்பா!

வடநாட்டார் சிந்துவெளித் -தென்னாட்டுச் சிவனையும் சங்க திருமாலையும் வணங்குகின்றார்கள் தானே? அதுவும் முழுமுதற் கடவுள்களாக! பாவம் திராவிடக் கடவுளர் இவர்கள் என்ற உண்மையை அறியவில்லை போலும்!!!! திக அங்கு போய் விழிப்புணர்வு ஏற்படுத்தட்டும்!!!!

ஆக; தமிழருக்காக எரிந்த முத்துக்குமார் வரிசையில் இன்று பிள்ளையாரும் இடம்பெற்று பிள்ளையார் தமிழ்த் தியாகியாகிவிட்டார்!!!! இனி கருணாநிதிக்கு சாமரை வீசும் திகவினருக்கு பிள்ளையாரைப் பற்றி பேசுகின்ற உரிமையில்லை என்க!

இப்போது சொல்லுங்கள் தமிழ்த் தியாகி விநாயகர் என்பது சரிதானே? அதுவும் திகவைவிட தமிழருக்கு விசுவாசமாக இருந்துள்ளார் என்பதற்கு அவர்மேல் இனவாதக் காடையர் போட்டுக்கொழுத்திய டயரே தக்க சான்று!

Sunday, March 6, 2011

தமிழருவி மணியன் ஊதிய சங்கும் கருணாநிதியின் செவிட்டுக் காதும்!

விகடனில் தமிழருவி மணியன் ஐயா கருணாநிதிக்கு எழுதிய மடல் வெளிவந்துள்ளது. இதோ இதுதான் அந்த மடல்.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.

காமராஜர் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்து, ஏழையாக வளர்ந்து, இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறப்பவர். காமராஜர் நாட்டுப் பணியில் தாயின் உறவு உட்பட சகலத்தையும் துறந்தார். நீங்கள் எதையும் துறக்காமல் பொதுவாழ்வின் மூலம் சகல நலன்களையும் வீட்டுடைமையாக்கிக்கொண்ட வித்தகராய் விளங்குகிறீர்கள்!

ஈ.வெ.கி.சம்பத் தி.மு.கழகத்திலிருந்து அவசரப்பட்டு விலகிய பின்பு, அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்திலேயே இருக்கவிட்டு, முதலிடத்தைப் பிடித்து நீங்கள் முதல்வரானது உங்கள் சாகசச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக்கூடியது!

ஓர் உறையில் இரு வாட்கள் இருக்கலாகாது என்று சிந்தித்த நீங்கள் செயற்குழுவின் ஆதரவைத் திரட்டி, செல்வாக்குமிக்க எம்.ஜி.ஆரையே விரட்டி, தனிக்காட்டு ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்ட மகத்துவத்தை யார் மறக்கமுடியும்? அரசியல் விளக்கங்களை எழுதவிடாமல் அன்றைய இந்திரா தர்பார் , செய்தித் தணிக்கையைக் கொண்டு வந்தபோது, கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் என்ற முல்லைக் கவி பாடல் மூலம் இலக்கியப் போர்வையில் அரசியல் வகுப்பு நடத்திய உங்கள் ஆற்றல் யாருக்கு வரும்? மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற மறக்கமுடியாத வசனத்தைப் பூம்புகார் திரைப்படத்தில் தீட்டிய உங்கள் மனசாட்சி முற்றாக உறங்கிப் போனதுதான் தமிழருக்கு வாய்த்த சாபம்.

தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில், தமிழ் வீரம் போதித்த அறிஞர் அண்ணா கல்லூரியில் பயின்ற எனக்கு அந்த உணர்வும் மழுங்கி விடுமேயானால், நடைப் பிணம் நிகர்த்தவனாகி விடுவேன் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்றீர்களே, எந்தெந்த வகையில் நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும் இன்று பின்பற்றுகிறீர்கள் என்று எங்களுக்குக் கொஞ்சம் விளக்க முடியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? ஐந்து கொள்கைகள்தான். கடவுள் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டும். காங்கிரஸ் ஒழிய வேண்டும். காந்தி ஒழிய வேண்டும். பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான் (இறுதிப் பேருரை- 19-12-73) என்றார் பெரியார். இந்த 5 கொள்கைகளில், தன்மானத் தந்தை பெரியார் பள்ளியில் பயின்ற நீங்கள் இன்று எதைப் பின்பற்றுகிறீர்கள்? மஞ்சள் துண்டு எந்தப் பகுத்தறிவின் அடையாளம்? சாய்​பாபாவை வீட்டில் வரவேற்றுப் பேசியதும், உங்கள் வீட்டார் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றதும் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறை தந்த பாடமா? தன்னை வாழ்த்தினால் நண்பர் என்று புகழ்வதும், விமர்சனம் செய்தால் பூணூல் என்று எள்ளி நகையாடுவதும் எந்த வகையில் பார்ப்பன எதிர்ப்பு? கஸ்தூரிபாயைத் தன் வழியில் திருப்பியவர் காந்தி. நாகம்மையையும், மணியம்மையையும் தன் மனதின் போக்குக்கேற்ப மாற்றியவர் பெரியார். வீட்டில் கொண்டுவர முடியாத மாற்றத்தை நாட்டில் கொண்டுவருவேன் என்பது நகைப்​புக்குரியது அல்லவா! பக்திப் பரவ​சத்தில் கோயில் கோயிலாகச் சுற்று​வது ஜெயலலிதா மட்டுமன்று, உங்கள் வீட்டு உறவுகளுந்தானே!

அண்ணா இறுதி நாள் வரை காங்​கிரஸை ஆதரிக்கவில்லை. மதுவிலக்கை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இரண்டு நிலைகளிலும் அண்ணா வழியில் நிற்க​வில்லையே; என்னைப் பொறுத்த வரையில் பதவி முடிவு மட்டுமல்ல, வாழ்வின் முடிவே ஏற்படப் போகிறது என்று தெரிந்தாலும், அப்​போதும் என் நினைவு உள்ளவரையில் பெரியாரையும் அண்ணாவையும் அவர்கள் தந்த லட்சியங்களையும் கொள்கைகளையுந்தான் கூறிக்​கொண்டிருப்பேன். மரணப் படுக்​கையில் என் நாக்கு அசையும் சக்தியை இழந்துவிடுமானால், என் நெஞ்சத் துடிப்புகள் கழகத்தின் பெருமைக்குரிய கொள்கைகளையே ஒலித்துக் கொண்​டிருக்​கும். அம்மா, அப்பா என்று சொல்லி உயிர் பிரியப் போவதில்லை. அண்ணா! அண்ணா! என்று சொல்லித்தான் இந்த உயிர்த் துடிப்புகள் இறுதியாக அடங்​கும் (கலைஞர் கடிதம் தொகுதி 5) என்று சொன்ன நீங்கள் அண்ணா எதிர்த்த காங்கிர​ஸின் உறவுக்காக ஏங்கி நின்றதும், நிற்பதும் நியாயந்தானா கலைஞரே?

சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை என்று சொன்ன கலைஞரே உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள் ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்?

முந்திரா ஊழல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிந்த விவகாரம். அமீர்சந்த் பியாரிலால் விவகாரம், அதிலே சிக்கிக் கொண்டு தவித்த தவிப்பு, இதெல்லாம் ஈரேழு பதினாலு உலகமும் சிரிப்பாய்ச் சிரித்ததை யாரும் மறந்து விடவில்லை என்றும் காங்கிரஸ் மாளிகை பாழடைந்த மண்டபமாகி விட்டது. அதிலே வெளவால்​கள் குடியேறத்தான் செய்யும் என்றும் (கலைஞர் கடிதம், தொகுதி 1) 1968-69-களில் உடன்பிறப்புகளிடம் கடிதங்கள் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பைக் கடுமையாக விதைத்து​விட்டு, 1971 தேர்தலில் அதே காங்கிரஸைக் கட்டித் தழுவியபடி களத்தில் நின்றீர்களே அந்த நட்புக்குச் செலுத்திய நன்றிதான் கழகத்தின் மீது காங்கிரஸ் பொழிந்த புகழு​ரைகள்(!).

நீங்கள் பதவிப் பல்லக்கில் பவனி வருவதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் தோள் கொடுத்தால் காங்கிரஸ் சமதர்மம் இனிக்கும். சுமப்பதை விட்டுவிட்டு, அவர்களும் உங்களோடு சேர்ந்து பல்லக்கில் சவாரி செய்ய நினைத்தால் காங்கிரஸின் ஆதிக்கம் கசக்கும். சமத்துவம் இன்மையே உனக்குப் பெயர்தான் இந்து மதமா? என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். சுயநலமே உனக்குப் பெயர்தான் தி.மு.கழ​கமா? என்று கேட்கத் தோன்றுகிறது கலை​ஞரே! பதவிகளுக்காக, பவிசுகளுக்காக, அந்தஸ்துகளுக்காக, அதிகாரங்களுக்காக இந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கிற இழி செயலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற ஒரு சாதாரணத் தொண்டன்கூடத் தயாராக இல்லை (முரசொலி 7-7-1981) என்று வீர முழக்கமிட்டவர் நீங்கள். ஆனால், ஈழம் எரிந்தபோது, நம் இனம் கரிந்தபோது களத்துக்கு வராமல் பாசறையிலேயே பதுங்கிவிட்டது ஏன் கலைஞரே? தியாகத் திருவிளக்கு சோனியா காந்தி என்று பரவசம் பொங்கப் புகழ்மாலை சூட்டிய நீங்கள், வீரத்தின் விளைநிலம் பிரபாகரனை ஈன்ற பார்வதி அன்னையை மனிதநேயமின்றி விமான நிலையத்தில் பாதம் பதிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்​பிய இந்திய அரசின் வன்கொடுமைக்கு எதிர்ப்புக்​குரல் எழுப்பாதது ஏன் கலைஞரே? பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ள சோனியா காந்தி என்னும் சொக்கத் தங்கத்தின் கருணைப் பார்வைக்கு இவ்வளவு தூரம் முதுகு வளைந்திருக்க வேண்டுமா முத்தமிழறிஞரே!

கலைஞரே கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் இரண்டு முறை மட்டும் புதுடெல்லிக்குப் புறப்பட்டீர்கள். பிரபாகரன் சடலம் என்று ஒரு சடலத்தை ஊடகங்கள் ஓயாமல் காட்டிக் கொண்டிருந்தபோது, உலகத் தமிழர்கள் செய்வதறியாது சோகம் கனக்க விழிநீர் வெள்ளமாய்ப் பெருக்கியபோது, தள்ளு வண்டி​யில் அமர்ந்தபடி சோனியாவிடம் உங்கள் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவி கேட்டு அலைக்கழிந்தீர்கள். அதற்குப் பின்பு ஆயிரம் பிரச்னைகள் தமிழகத்தில் அரங்​கேறின. ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரை அன்றாடம் மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டனர். இன்று வரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் கைநோக மன்​மோகன்சிங் அரசுக்குக் கடிதம் எழுதிக் கடமை​யாற்றினீர்கள். இப்போது இரண்டாவது முறை​யாக முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் போர்வையில் புதுடெல்லி சென்று ஆ.ராசாவைக் காக்கவும், காங்கிரஸ் கூட்டணி நிலைக்கவும் அரும்பாடு பட்டீர்கள். உங்கள் கொள்கைப் பிடிப்பு, நினைக்கும்போதே நெஞ்சமெல்லாம் சிலிர்க்கச் செய்கிறது கலைஞரே!

எந்தப் பதவியானாலும், எந்த மட்டத்திலா​னாலும் அதனைத் தேடிப்போய் நெருக்கடி கொடுத்துப் பெற முனையும்போதோ, அல்லது பெற்றுவிட்ட பிறகோ, உன்னைப் பற்றி உனக்கே ஒரு வெறுப்பு தோன்றும், உனக்குத் தோன்றுகிறதோ இல்லையோ, நாட்டுக்குத் தோன்றும் (கலைஞர் கடிதம் தொகுதி 1) என்று உடன்பிறப்புக்கு எவ்வளவு தெளிவாக 9-11-68-ல் நீங்கள் கடிதம் தீட்டியிருக்கிறீர்கள்! அவ்வளவும் சத்திய வார்த்தைகள். இன்று உங்களைப் பற்றி நாட்டுக்கு அப்படித்தான் தோன்றி​விட்டது. வாண்டையார், வடபாதி மங்​கலத்தார், நெடும்பலத்தார், குன்னியூரார், மூப்பனார், மன்றாடியார், பேட்டையார், பெரும்பண்ணையார், செட்டி நாட்டார், சிவகங்கை சீமையார் என்று அண்ணா அன்று மேடைதோறும் காங்கிரஸில் இருந்த பணக்காரர்களைப் பட்டியலிட்டார்; சென்னையில் 1951 டிசம்பரில் நடை​பெற்ற தி.மு.க. முதல் மாநில மாநாட்​டில், தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம்தான் என்று பிரகடனம் செய்தார். நீங்களும் பல்வேறு தருணங்களில் நானும் ஒரு கம்யூ​னிஸ்ட் என்று நகைச்சுவை ததும்பப் பேசியிருக்கிறீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குபேர​புரியின் வாரிசுகளாக விண்ணிலும் மண்ணிலும் வலம் வருகின்றனர். இந்த ரசவாத மாற்றம் எப்படி நிகழ்ந்தது கலைஞரே! நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபாதை மனிதர்களாக இருந்த உங்கள் அமைச்சர்களும், தானைத் தளகர்த்தர்களும் தமிழகத்து அம்பானி​களாய் உருமாறிய ரகசியத்தை உருக்​குலைந்து நிற்கும் எந்தமிழர் அனைவருக்கும் நீங்கள் சொல்லிக் கொடுத்து விட்டால் இலவசங்​களுக்கே இடமிருக்காது கலைஞரே!

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா சிக்கிச் சிறைப்பட்டதும், சி.பி.ஐ. கரங்கள் கலைஞர் தொலைக்காட்சி வரை விரிந்ததும் உங்கள் அம்பறாத் தூணியில் தூங்கிக் கொண்டிருந்த ஆரிய திராவிட அம்பெடுத்து வீசி விட்டீர்கள். காமராஜரின் வேட்பாளராக சஞ்சீவரெட்டியும், இந்திராவின் வேட்​பாளராக வி.வி.கிரியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றபோது நீங்கள் வி.வி.கிரியைத்தானே வெற்றி பெறச் செய்தீர்கள். இந்திராவும், கிரியும் உங்கள் வார்த்தையில் ஆரியர்; காமராஜரும், சஞ்சீவரெட்டியும் திராவிடர். அப்போது எங்கே போனது உங்கள் இனமான உணர்வு? இராமன் இரு பேச்சாளன் இல்லை என்பான் வான்மீகி. இரு பேச்சு இல்லாமல் நீங்கள் இல்லை என்பதுதானே உண்மை கலைஞரே!

ஆறாவது முறை நீங்கள் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறீர்கள். நல்லது. ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன சாதித்​தீர்கள்? மாநில சுயாட்சி வாங்கிக் கொடுத்து விட்டீர்களா? தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி விட்டீர்களா? உங்களால் ஊழல் வழக்குகளுக்குள்ளான கண்ணப்பன், செல்வ​கணபதி, இந்திரகுமாரி, ரகுபதி, முத்துசாமி போன்​றவர்களைக் கழகத்தில் சேர்க்காமல் அரசியல் ஆரோக்கியம் காத்தீர்களா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு மேலவையைக் கொண்டுவர நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் பத்தில் ஒரு பங்காவது தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்க முனைந்தீர்களா? நிர்வாக மொழியாகத் தமிழை நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தி விட்டீர்களா? உணவு, உடை, குடியிருப்பிடம் எனும் மூன்று அடிப்படைத் தேவைகளைக்கூட 17 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும் நிறைவேற்றிக் கொடுத்திட இயலாத காங்கிரஸ் ஏன் ஆட்சியில் நீடிக்க வேண்டும்? என்று கேட்டார் அண்ணா அதையே உங்களிடம் நாங்கள் கேட்கிறோம். ஊழலற்ற ஆட்சிக்கும் உங்களுக்கும் என்றாவது தொடர்பிருந்ததுண்டா?

ஈழத் தமிழர் நலன் காக்கத் தவறிய நீங்கள் ஆட்சியில் நீடிப்பதால், உலகத் தமிழருக்கு என்ன நன்மை? தாயக மீனவர் மீது நடக்கும் தாக்குதலைத் தடுக்க முடியாததும் உண்மை தானே! வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழை மக்களை மயக்கி வாங்கி, இலவச நாடகம் நடத்தி அதே மக்களிடம் பிச்சைக்கார மனோபாவத்தை வளர்க்கும் உங்க​ளுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான மகளிர் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? நீங்களும், உங்கள் வாரிசுகளும், கழக உடன்பிறப்புகளும் அதிகாரத்தைத் தொடர்ந்து சுவைக்கவும், சொத்துகளை எல்லையின்றிக் குவிக்கவும், மணற் கொள்ளையிலிருந்து அரிசிக் கடத்தல் வரை அமோகமாக நடத்தவும் திருமங்கலம் ஃபார்முலா வை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். எந்தப் பணத்தை நம்புகிறீர்களோ அது தான் உங்கள் காலையும் வாரப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்!

இப்படிக்கு,

ஐந்தாவது முறையாவாது நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி ஏமாந்த,

தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் ஐயா போற்றத்தக்க தமிழர்களில் தலைசிறந்த ஒருவர். அவர் கருணாநிதிக்கு மடல் எழுதுவது அவரது பெருமைக்கு இழுக்கு என்று கருதுகிறேன். திருத்த முடியாத கழுதைகளைத் திருத்த முடியுமா என்ன? தமிழருவி மணியன் ஐயா மடல் எழுத செலவழித்த நேரத்தை வேறுவிடயங்களுக்கு செலவழித்திருக்கலாம். நேரம் பொன்னானது அல்லவா? அதுதான். செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது கருணாநிதிக்கு வரையப்பட்ட இந்த மடல்!

Saturday, March 5, 2011

தமிழரே....என்ன முடிவு எடுத்துள்ளீர்?


காவேரியில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விலகவில்லை!
ஒக்கேனக்கலில் உரிமைநிலைநாட்ட விலகவில்லை!
ஈழத்தில் இரத்த ஆறு ஓடியதற்காக விலகவில்லை!
அட; வெறும் ஆட்சிப்பங்கீட்டுப் பிரச்சினையால் விலகுகின்றார்கள் இந்த திருத்த முடியாத கழுதைகள்! தமிழா.......உன் நிலையைப் பார்த்தாயா? காவேரி,ஒக்கேனக்கல் என்று உன் உரிமைகளை நிலைநாட்ட இவர்கள் விலகவில்லை! அட சீ! முத்துக்குமார் உட்பட்ட பலர் தீயில் வெந்தபோது விலகவில்லை! மீனவர்களின் பிணங்கள் தமிழகக் கரைகளைத் தொடர்ந்து தொட்டபோதும் இவர்கள் விலகவில்லை! இலங்கையில் இரத்த ஆறு பெருகி ஓடியபோதும் இவர்கள் விலகவில்லை! அப்போதெல்லாம் வெறும் கடிதம் எழுதுவதுடன் எல்லாமே முடிந்துபோயிற்று!
தமிழா, உன் உரிமையில் இவர்களுக்கு நாட்டமில்லை! உன் உயிரிலும் இவர்களுக்கு நாட்டமில்லை!

ஒக்கேனக்கல்(அனைவரும் மறந்துவிட்டார்கள் இந்தப்பிரச்சினையை!) பிரச்சினையில் சிலகாலம் பொறுத்திருப்போம் என்று கூறி தமிழரை அமைதிசெய்து காங்கிரசுக்கு மத்திய அரசுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுகாலம் பெருங்காலமாகி ஆட்சியும் முடிவுக்கு வந்தாயிற்று! தமிழரே.......மீண்டும் இவர்கையில் ஆட்சியைக் கொடுத்து; இன்னும் ஏமாறாதீர்!


திமுக= திருத்த முடியாத கழுதைகள்
திக=திருந்தாத கழுதைகள்
அதிமுக=அடிச்சும் திருத்த முடியாத கழுதைகள்
திருமாவளவன் கட்சி= விலைபோன எலிகள்
காங்கிரசு = காலன் (எம் இனத்தின் எமன்)
ராமதாஸ் கட்சி= தமிழர்களுக்கு மறக்கவைக்கும் மருந்தைக் கண்டறிந்த மருத்துவர் கூட்டம்!

இதில்; இனமே அழிந்து கொண்டிருந்தபோது அழித்தவர்களுக்கு சாமரைவீசிக்கொண்டிருந்த தி.மு.கழுதைகளுக்கு இப்போது நல்லதொரு பாடம் புகட்டுங்கள்! அது ஏனைய கட்சிகளுக்கும் பாடமாக அமைய வாய்ப்பை உருவாக்கும்!
தமிழர் தலைவர் என்று பட்டங்களில் பற்றுக் கொண்ட வீரமணியர் ஏதேனும் அறிக்கைகளை விடுவார்! கவிப்பேரரசு என்ற பட்டப்பற்றுப் பேரரசு வைரமுத்து கவிதைகள் பல எழுதி தினகரனில் வெளியிடுவார்! தமிழர்களே.......மயங்கிடாதீர்!

Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது. முகாம்களுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவையின் சமூகசேவை பகுதி குழுவினர் முகாம்களின் தேவைக்கேற்ப உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து பேரவை மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கான உடனடி தேவையை நிறைவேற்ற மூன்று குழுக்கள் பேரவையின் மூன்று தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்களுக்கு பேரவையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மூவரும் பொறுப்பாளராக உள்ளனர். கல்குடா தொகுதியை சேர்ந்த பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் அத்தொகுதிக்குப் பொறுப்பாளராகவும் மட்டக்களப்பு தொகுதியைச் சேர்ந்த பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் அத்தொகுதி பொறுப்பாளராகவும் பட்டிருப்பு தொகுதியைச் சேர்ந்த ந.புவனசுந்தரம் அத்தொகுதி பொறுப்பாளராகவும் ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் தர்மபுரம் முகாம் செட்டிபாளைய பாடசாலை முகாம் களுதாவளை மகா வித்தியாலய முகாம் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய முகாம் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய முகாம் மாங்காடு சரஸ்வதி வித்தியாலய முகாம் போன்றவற்றுக்கு சிறுவர்களுக்கான உதவிகள் வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பேரவையின் பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் தெரிவித்தார்.

நன்றி:- தமிழ்வின்

http://www.tamilwin.com/view.php?22uIBZ203VjQ64e2OGpDcb3N92gdd3i294bc3XpGce406Qjd02eBLIa2


குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!

குளிரினால் மரணமடையும் எம்முறவுகள்!!

வழமைக்கு மாறாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மற்றும் வாகரைப் பகுதிகளைச் சோ்ந்த ஐந்து போ் குளிரில் விறைத்து நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளனர்.

அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர்


கனடாவில் உள்ளவர்கள் உதவக்கூடிய வழி

செல்வச்செழிப்பும் இயற்கைவளமும் கொண்ட கிழக்கிலங்கையில் போர்ப்பறையால் உயிர் உடமைகள் என்பன சின்னாபின்னமாகி ஓய்ந்து பின்அதிலிருந்து எழும்பும் முன்னே எஞ்சியிருந்ததும் ஆழிப்பேரலையில் மீண்டும் அமிழ்ந்துபோக குறையுயிராக தலையை நிமிர்த்த மீண்டும் ஒரு வரலாறுகாணாத பெருவெள்ளம் மீதியிருந்த உடமைகளையும் காவுகொண்டுவிட்டது.
தொடர்ந்து பெய்யும் மழையினாலும் ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்த குளங்கள் கிராமம் கிராமமாக அடித்துச்செல்கின்றது. அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, மூதூர், திருமலை பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி எம் உறவுகள் மீண்டும் மீண்டும் உணவின்றி, உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது.

ஒரு வேளையாயினும் சாப்பாடும் தண்ணீரும் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்காகவும் கல்வியின்றி கவலையில் வாழும் இளம்சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாமனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவிக்கரம் நீட்டவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

இங்கு தனித்தன்மையுடன் பல நல்ல நோக்கங்களைக்கொண்டு செயல்படும் அனைத்து சமூக அமைப்புக்களும் ஒன்றாக கைகோர்த்து இந்த பாரிய அவலநிலையிலிருந்து நம் உறவுகளை மீட்டெடுத்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளை வழங்கிட முன்வர வேண்டும் என்று உருக்கமாய் வேண்டுகின்றோம்.

இந் நிதி சேகரிப்பினை கிழக்கிலங்கையைச் சேர்ந்த பின்வரும் உறுப்பினர்களைக்கொண்ட குழுவானது அங்குள்ள நேர்மையுள்ள நீதியான அமைப்புக்களுடன் இணைந்து எமது நேரடிக் கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களைச் செய்யவுள்ளோம்.

நாம் வீடுவீடாக நிதி வசூலிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள பிரதான இடங்களில் எமது குழுவினருடன் தொண்டர்கள் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். அதற்கான பற்றுச்சீட்டு உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த வரலாற்றுக் கூட்டு முயற்சிக்கு அனைத்து ஊடகங்களும் தங்கள் நல்லாதரவை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றியுடன் உங்கள் உறவுகளுக்காகன அன்பளிப்பை மனநிறைவுடன் எதிர்பார்க்கும் நம்மவர்கள்.

Disaster Emergency Assistant Relief – Canada

அஜந்தா 905 4601667,
தங்கா 647 2615723,
பாபு 416 9982284,
ஸ்ரனி 416 7550381
மகேந்திரன் 416 9901303


நன்றி- தமிழ்வின்
இங்குபதிவு செய்யப்பட்டுள்ள இருசெய்திகளும் தமிழ்வின் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.


Thursday, January 13, 2011

பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்!
இங்கு வலி பிறந்துள்ளதே!!!
கடற்கன்னிகளின் தமிழால்
நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்
கிழக்கு ஈழவளநாடு
வெள்ளத்துள் மிதக்க-பொங்குவது
அழகா?
அகதிகளாய் அங்கு
மாந்தர் அலைய -இன்னிசையில்
நாம் மெய்மறப்பின்
எங்கள் உடலில்
ஓடுவது தமிழ்க்குருதியோ?

அலைபேசி தொலைபேசி
கைபேசி என்று
உலகம் சுருங்கிவிட்ட
இக்காலத்தில் மீனவன்
செத்தால் தந்தி -ஆயினும்
மந்திரிபதவி பற்றியதென்றால்
விமானத்தில் டெல்லி!
இப்படியிருக்கும் கொலைஞருக்கு
எப்படித் தெரியும்
கிழக்கு ஈழவளநாட்டில்
வெள்ளத்துள் மூழ்கியுள்ள தமிழரின் நிலை!!!

பொங்கலோ பொங்கல்
என்று சொல்லமனமுள்ளோர்
சொல்லுங்கள்!!!

வாழ்க வளமுடன்!





குறிப்பு:அங்குள்ள தமிழ்மக்களுக்கு உதவவிரும்புகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை யை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

தமிழ்வின் இணையத்தளத்தில் பிரசுரமாகிய இதுபற்றிய தகவல்:
////வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இம்மக்களுக்கு இயன்றளவு நிதி, பொருள் உதவியை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.

இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்./////


கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு

http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjP20N922e4ILBcb3pG02

கிழக்கின் உறவுகளுக்கு, புலம்பெயர் உறவுகளின் உள்ளக் கதவுகள் திறக்கட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGa2


கிழக்கில் 90வீதமான பகுதி வெள்ளத்தில்.. வடக்கில் பொங்கல் விழாவை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார்
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3Qjb20N922e4ILBcb3pGQ2

அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI24ei29202jQMdd3QjR20N922e4ILBcb3pGQ2

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQCdd3Qj120D922e4ILBcb3pGY2

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு வைத்தியசாலைகள் மூடப்பட்டன

Saturday, December 25, 2010

மட்டுமாநகர் தந்த ஈழத்துப் பூராடனார்

கடற்கன்னிகள் தமிழ்பாடும் மட்டுமாநகர் தந்த இலக்கியமணி ஈழத்துப் பூராடனார்கனடாவில் 20ம் திகதி காலமானார்.1965ஆம் ஆண்டு யாரிந்த வேடர் என்ற தலைப்பில் எழுதிய நூலுக்காக பேரினவாதத்தால் நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய இக்கட்டான சூழலை பெற்றபோதும் தளர்வுறாது தமிழ்ப்பணியில் ஈடுபட்ட பெருமைக்குரியவர்.

குற்றம் ஆனால் குற்றமில்லை என்ற தலைப்பில் தமிழ்முரசு இணையவலைப்பூவில் தமிழறிஞர் அ.முத்துலிங்கம் இந்நிகழ்வை பதிவுசெய்துள்ளார்.
"அவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார். மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.

ஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய 'யாரிந்த வேடர்' புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். 'கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.' நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். 'குற்றம், ஆனால் குற்றமில்லை."

முதல் கணினித் தமிழுருவை உருவாக்கி அதில் அச்சடித்து கணினி அச்சுருவில் முதன்முதலில் நூலை வெளியிட்டவர் இவராவர். இலக்கியமணியுடைய இத்தகு அருமையை அ.முத்துலிங்கம் தமிழறிஞரின் எழுத்து பூரிக்கவைக்கின்றது.

"தமிழில் கணினியில் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் 'நிழல்' என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர் தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார். அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன. அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார். அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்"

க.தா.செல்வராசகோபால் என்னும் இயற்பெயருடைய ஐயாவின் பெயர் மங்காப் புகழுடன் தமிழுலகால் என்றுமே போற்றப்படும் என்பது திண்ணம்.

ஐயாவின் இழப்பு தமிழ்த்தாய்க்கு பேரிழப்பு என்பதை அவருடைய பணிகளை அறிவோர் உணர்ந்ததொன்று. ஐயாவுக்கு எளியேனின் மரியாதையை வழங்கும்பொருட்டு இப்பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.