Sunday, September 11, 2011

"கலைஞர்" என்று சொல்லும் நா நாவோ?

யூடியூப் காணொளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அருமையான காணொளி என் கண்ணுள் வந்து என்னை பல கேள்வி கேட்டது!!! என் நெஞ்சறையில் நிசப்பதம்! நிசப்பதத்தின் முடிவில் கருணையில்லா நிதியை பெற்ற தாயை திட்டித்தீர்க்கும் கோபம் பெருக்கெடுத்தது! தமிழர் செய்த பாவத்தின் சம்பளம் கருணையில்லா நிதி என்று விதி எழுதியிருக்கையில் அந்தத் தாயை கோபித்து என்ன பயன்?

அது என்ன காணொளி? ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் தமிழ்ப்பெருமகன் திரு.அப்துல்கலாம் ஆற்றிய உரை!!!!!! தமிழுக்கு அங்கு அவர் பெருமை சேர்த்த அழகை எந்தத்தமிழரும் விழா எடுத்து கொண்டாடவில்லையே என்றபோது பெருந்துன்பம் பெருக்கெடுத்தது! என் நெஞ்சறை நிசப்பதமானது!


இப்படிப்பட்ட அருமையான தமிழ்மகனை மீண்டும் இந்திய தேசத்தின் சனாதிபதியாக்க உடன்படாத கருணையில்லா நிதியை "கலைஞர்" என்று சொன்னால் தமிழ் மன்னிக்குமா? இந்திய தேசத்தின் சனாதிபதி தெரிவு மீண்டும் வந்தவேளை கருணையில்லா நிதியின் தயவில் காங்கிரசு இருந்தது.ஆனால் எங்கே திரு.அப்துல் கலாமின் புகழ் தமிழ்நாட்டில் தன்னைவிட ஓங்கிவிடுமோ என்று பயந்து மீண்டும் அப்துல்கலாமை நியமிக்க எந்தவிதமான முனைப்பையும் காட்டாது "மௌனமாய்" இருந்த கயவனை "கலைஞர்" என்று சொல்லும் நா........தமிழ் வாழும் நாவோ?

தமிழைச் செம்மொழியாக பிரகடனம் செய்த இத்தகு அருமையான தமிழ்மகனுக்கு......இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பெருமகனுக்கு
செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பிதழையே அனுப்பாது அவமதித்த கருணையில்லா கயவனை 'கலைஞர்' என்று துதிபாடும் வாய்களுக்கு மரணத்திலும் வாய்க்கரிசி இல்லாது போக தமிழ்த்தாயே நீ சபித்துவிடு!

ஐயகோ....! இந்தத் தமிழ்மகன் இப்போதும் சனாதிபதியாக தொடர்ந்து இருந்திருக்கும் கௌரவத்தை பெற்றிருந்தால்........மூன்று பேர் மரணத்தின் பிடியில் வாடுவார்களா? அப்படியொரு கொடுமை நடந்திருக்குமா?

உங்கள் நெஞ்சறை என்ன சொல்கின்றது?

பிற்குறிப்பு - அப்துல்கலாமின் காணொளி இருக்கும் இப்பதிவில் கருணையில்லா நிதியின் நிழற்படத்தை இணைப்பதே பாவம்!

1 comments:

அது மட்டும்தானா ? மூப்பனார் பிரதம மந்திரி ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டவரும் இவர்தான். தமிழ் நாட்டில்/ இந்தியாவில் இவர்/ இவர் குடும்ப சம்பந்தபடாதவர் யாரும் முதன்மை பெறக்கூடாது என்ற பெரிய எண்ணம் எப்போதும் உண்டு.
ரமணியன்