Monday, August 18, 2008

அம்மா

அம்மா............
சைவமும் தமிழும்
தமிழ் மண்
நினைவும்
தந்தை தமையன்
தம்பி மீதுள்ள
பாசமும்
குருமாரிடம் கொண்ட
பக்தியும்
கந்த புராணம்
பெரிய புராணம்
கற்றுப் பெற்றதல்ல!
அம்மா நீ-தந்த
பாலாலே என்னுள்
வந்ததம்மா!

மறு பிறவி
நீ பெற்றால்
பத்துத் திங்கள்
ஒதுக்கிவிடு எனக்காய்-உன்
கருவறையை!
சிவ லோகம்
வைகுண்டம் சொர்கலோகம்
எதுவரினும் அது
துறந்து ஓடோடி
வந்திடுவேன் பாரிற்கு!
உன் ஓராட்டு
ஒக்க தமிழ்
மறை திரு
முறை திருமந்திரம்
ஏதேனும் வந்திடுமா?

0 comments: