Thursday, August 14, 2008

தமிழ்

***********************************************************************************
அந்த சிவனின்
மகளே
என்னை யாளும்
தமிழே

தமிழகம் உன்
மாராப்பு!
ஈழம் உன்
பாவாடை!
இல்லை இருக்கு
சர்ச்சைக்கு இடமளிக்கும்
இடை-இராமன்
இட்ட பாலமோ!

***********************************************************************************

யாழ் என்று
பறைகையிலே தேன்
பாயுது நாடி
நாள மெங்கும்!

மட்டு நகர்
என்றதுமே மறம்
மெய்யில் ஊறுது!

திரு கோண
மலை சிவனருளை
என்னுள் கூட்டுது!

வன்னி என்றதுமே
தமிழ் காப்பகமாய்
மலர்ந்துள்ள நிதர்சனம்
என்னைத் தலைநிமிர
செய்யுது!

புத்தளம் என்றதுமே
தமிழ் முத்துகள்
தோன்றுது!

ஈழத்தின் வடகிழக்கு
என்றதுமே என்
அணுவெல்லாம் புல்லரிக்குது!

*************************************************************************************

0 comments: