Wednesday, May 13, 2009

தமிழினத்தை கூட்டிக்கொடுத்த கருணை இல்லா நிதி

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலம் தமிழினப் பற்றாளராக எழுந்த சூரியன் இன்று ஈழத்தமிழால் அஸ்தமனமாவது கண்கூடு! அன்று பெரியார் திடலில் பல்லாயிரம் தமிழ்த் தொண்டர்கள் எழுந்தபோது, அவர்களுடன் இணைந்து எழுந்த கருணாநிதி, அறிஞர் அண்ணாவை தனது சுயபிரபல்யத்துக்குப் பயன்படுத்தி, தனது புத்திசாதூர்யத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பற்றாளராக தன்னை வெளிக்காட்டி திமுக தலைமையாகி "தமிழர் தலைவர்" என்ற மகுடத்தை தனக்குத்தானே சூட்டிக் கொண்டார்.

எம்ஜியாரின் ஆயுட்காலம்வரை தமிழக முதல்வராக வரமுடியாது தவித்தவர். இனி எக்காலமும் வரமுடியாது செய்ய, தமிழகமே விழித்தெழுவாயாக!!!!

அரசியலில் கைவந்த நடிகரான கருணாநிதி, தமிழை தனது குடும்பத்தை வளர்க்கப் பயன்படுத்தினார் என்பது வெள்ளிடைமலை.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்பது வள்ளுவன் வாக்கு.

கருணாநிதியின் குடும்பம் சூரியகுடும்பமாக வளர்வதற்கு தமிழ்த்தாய்தான் காரணம். ஆனால், அவள் ஈழத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்க, இரத்தத்துள் வாடி வதங்க, எக்கவலையும் இல்லாது ஆரியக்கூட்டுக்கு தமிழைக் கூட்டிக்கொடுத்து, இத்தாலிச் சனியாளிடம் தமிழ்த்தாயின் சேலையை விற்றுவிட்டார்.

தமிழ்த்தாய் மன்னிக்குமா? மன்னிக்கலாமா? தமிழகமே, விடை சொல்லு? பின்னூட்டமாகவில்லை. வாக்குச்சீட்டு வாயிலாக!!!!!!!!

நன்றி மறந்த கருணை இல்லா கருணாநிதியை தமிழகமே, வீறுகொண்டு எழுந்து தமிழகத்தை விட்டே விரட்டுவாயாக!!!!!!கன்னடத்திடம் ஒக்கேனக்கல் பிரச்சினையில் தமிழரை இழிச்சவாயனாக்கிய கெட்டிக்காரன். கச்சதீவைத் தாரைவார்த்த நயவஞ்சகன். பாலாறு பிரச்சினையைத் தீர்க்காது தமிழரை ஏமாளிகளாக்கிய ஆரியத்திடம் "மாமா" வேலை செய்த இழியவன். தெலுங்கு நாட்டோடு எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்காது "தமிழரின்" எல்லைகள் பறிபோவது தெரியாது இருக்கும் கைவந்த நடிகன். கருணாநிதியின் குடும்பத்தையே தமிழகத்தைவிட்டு ஒதுக்கிவையுங்கள் என் இனிய உறவுகளே!!!!!!

0 comments: