மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசித்த இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால்மா ஓடிக்குளோன் பேபிசெற் பம்பஸ் உட்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. |
கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆரையம்பதி சுமுஆ பாடசாலை ஆரையம்பதி மகா வித்தியாலயம் தாளங்குடா விநாயகர் வித்தியாலயம் தாளங்குடா றோ.க.வித்தியாலயம் கிரான்குளம் விநாயகர் வித்தியாலயம் துறைநீலாவணை மகா வித்தியாலயம் துறைநீலாவணை பொதுக் கட்டடம் போன்றவற்றில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மதிய உணவுக்கும் நிதி வழங்கப்பட்டது. முகாம்களுக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் பேரவையின் சமூகசேவை பகுதி குழுவினர் முகாம்களின் தேவைக்கேற்ப உதவிகளை வழங்கினர். தொடர்ந்து பேரவை மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கான உடனடி தேவையை நிறைவேற்ற மூன்று குழுக்கள் பேரவையின் மூன்று தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தர்மபுரம் முகாம் செட்டிபாளைய பாடசாலை முகாம் களுதாவளை மகா வித்தியாலய முகாம் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலய முகாம் தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலய முகாம் மாங்காடு சரஸ்வதி வித்தியாலய முகாம் போன்றவற்றுக்கு சிறுவர்களுக்கான உதவிகள் வழங்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக பேரவையின் பொருளாளர் திரு.ந.புவனசுந்தரம் தெரிவித்தார். நன்றி:- தமிழ்வின் http://www.tamilwin.com/view.php?22uIBZ203VjQ64e2OGpDcb3N92gdd3i294bc3XpGce406Qjd02eBLIa2 |
Friday, January 14, 2011
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையில் உலக சைவ பேரவையின் இலங்கைக்கிளை வழங்கிய நிதி
குளிரும் வெள்ளமும் மரணப்பொறியாகி வாடிநிற்கும் எம்முறவுகளுக்கு உதவிடுக!!!!
அதிக குளிரினால் உடல் வெப்பநிலை குறைவடைந்ததால் அவர்கள் இறந்திருப்பதாக வாகரை உதவி அரசாங்க அதிபர் ஆர். இராஜகுலநாயகி தெரிவித்திருக்கின்றார். இறந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு நகர வீதியில் பிச்சை எடுப்பவராவார். நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட வெப்பநிலை சுமார் 16 பாகையளவிற்கு குறைவடைந்திருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை ஓய்ந்த நிலையில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஐந்து போ் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். நேற்று வெயில் எறித்தபோதும் வயதானவர்களால்கூட தாக்குப் பிடிக்க முடியாதளவிற்கு குளிர் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக நேற்று திருமலை வீதியில் சம்பத் வங்கிக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் முன்பாக காரைதீவைச் சோ்ந்த 53 வயதுடைய நல்லையா அமிர்தலிங்கம் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலத்தை மனைவி அடையாளம் காட்டியுள்ளார். அத்துடன் ஜெயந்திபுரத்தில் 40 வயதுடைய ரவி என்பவர் நீரில் வழ்ந்து குளிரினால் மரணமடைந்ததுடன் ஊறணியில் வயோதிபப் பெண்ணொருவர் குளிர் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதேவேளை வாகரை வம்மிவெட்டுவானிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 17 போ் உயிரிழந்துள்ளனர் |
Thursday, January 13, 2011
பொங்கல் பண்டிகையில் கொண்டாட்டம் வேண்டாம்! நீரில் மூழ்கித் தவிக்கும் தமிழருக்கு உதவுக!
இங்கு வலி பிறந்துள்ளதே!!!
கடற்கன்னிகளின் தமிழால்
நெஞ்சைக் கொள்ளைகொள்ளும்
கிழக்கு ஈழவளநாடு
வெள்ளத்துள் மிதக்க-பொங்குவது
அழகா?
அகதிகளாய் அங்கு
மாந்தர் அலைய -இன்னிசையில்
நாம் மெய்மறப்பின்
எங்கள் உடலில்
ஓடுவது தமிழ்க்குருதியோ?
அலைபேசி தொலைபேசி
கைபேசி என்று
உலகம் சுருங்கிவிட்ட
இக்காலத்தில் மீனவன்
செத்தால் தந்தி -ஆயினும்
மந்திரிபதவி பற்றியதென்றால்
விமானத்தில் டெல்லி!
இப்படியிருக்கும் கொலைஞருக்கு
எப்படித் தெரியும்
கிழக்கு ஈழவளநாட்டில்
வெள்ளத்துள் மூழ்கியுள்ள தமிழரின் நிலை!!!
பொங்கலோ பொங்கல்
என்று சொல்லமனமுள்ளோர்
சொல்லுங்கள்!!!
வாழ்க வளமுடன்!



குறிப்பு:அங்குள்ள தமிழ்மக்களுக்கு உதவவிரும்புகின்றவர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை யை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.
இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்./////
கிழக்கு மாகாண நிலைமை! 502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள்!! வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjP20N922e4ILBcb3pG02கிழக்கின் உறவுகளுக்கு, புலம்பெயர் உறவுகளின் உள்ளக் கதவுகள் திறக்கட்டும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வேண்டுகோள்
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQWdd3QjF20N922e4ILBcb3pGa2
கிழக்கில் 90வீதமான பகுதி வெள்ளத்தில்.. வடக்கில் பொங்கல் விழாவை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார்
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI34ei29202jQWdd3Qjb20N922e4ILBcb3pGQ2
அம்பாறை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின
http://www.tamilwin.com/view.php?22GpXbc2BI24ei29202jQMdd3QjR20N922e4ILBcb3pGQ2
கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை
http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI34ei29202jQCdd3Qj120D922e4ILBcb3pGY2