Friday, July 3, 2009

இந்தி தெரியாதுங்கோ

தமிழகப் பயணம்
பெலரசில் இருந்து மதியம் 2.20 மணியளவில் புறப்பட்ட எதியாட் விமானம் மூலம் அபுதாபியை சென்றடைந்து அங்கிருந்து பின்னர் இன்னோர் எதியாட் விமானம் மூலம் டெல்லியை அதிகாலை 4 மணியளவில் அடைந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர உள்ளூர் விமான நிலையத்துக்கு வாடகை மகிழூந்து (taxi car) மூலம் சென்று பின்னர் அங்கிருந்து சென்னைக்கு காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தேன் உருப்படியாக!!!!!!

புதுவித அனுபவம் டெல்லியில்
டெல்லி இந்திய நாட்டின் தலைநகரம் என்ற கோதாவை நினைவில் கொண்டிருந்ததால் சரளமாக ஆங்கிலத்தில் எல்லோரும் கதைப்பர் என தவறாகக் கணித்துவிட்டேன். குடிவரவு அதிகாரிகளுக்குக்கூட அதிகம் ஆங்கிலம் தெரியாது அல்லது மெட்ராசி என நினைத்து "இவங்களோடு என்ன ஆங்கிலம் கேட்குது.....இந்தியை எதிர்த்து குரல்கொடுத்த இவங்களுக்கு இந்தியின் அருமையை புகட்ட வேண்டும்" என நினைத்தார்களோ தெரியாது. ஆனாலும் இலங்கைக் கடவுச்சீட்டைப் பார்த்த பின்னர்கூட இவர்களில் உரையாடல்களில் மாற்றமில்லை.

அங்கு நின்ற பணியாட்கள் தொட்டு பயணிகள் வரை யாரைக் கேட்டாலும் விடை இந்தியில்தான் வரும்.பெலரசு நாட்டின் குடியகல்வு அதிகாரிகள் சரளமாக ஆங்கிலம் கதைக்க எமக்கு ஆச்சரியம். "அடடா........எங்களுக்காக ஆங்கிலம் தெரிஞ்சவங்களப் போட்டுட்டாங்கப்பா இரசியர்களுக்குள்,,,,,, இப்படி ஒரு மாற்றமா?" என்று உவகையடைந்தோம்.
ஆனால் வல்லரசு என்று கதையளக்கும் இந்தியக் குடியரசு நாட்டின் அதிகாரிகள் இவ்வளவு இந்தி விசுவாசிகளாக இருப்பர் என்பதை கனவிலும் கருதவில்லை.

உலகம் முழுக்க இருக்கும் தமிழுக்கு ஒரு அங்குலம்கூட உரிமையில்லை. இவங்களுக்கு திமிர் இருக்கும்தானே மெட்ராசி இந்தி கதைக்காட்டி! சக பயணி என்னை மெட்ராசி என்று கருதி "ஏன் இந்தி தெரியாது?" என்று கேட்டார். இலங்கையன் என்றேன். ஏன் இலங்கையில் இந்தி இல்லையா என்று கேட்டார்.சிரித்துவிட்டு இல்லை என்றேன்.

இந்தி தெரியாவிட்டால் இப்படித்தான் மரியாதை கொடுப்பார்கள் என்று உணர்ந்தபோது "தமிழே தெரியாத தமிழரை மதிக்கும் எமது அறியாமையையும் தமிழகத்தில் தமிழைக் கட்டாயபாடமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்ற தமிழக கல்வி நிறுவன நிலையங்களின் இழிநிலையையும் எண்ணியபோது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதியிடம் சொன்னவனின் அருமை புரிந்தது.
கடவுளே..............,தமிழனுக்கு தன்மானத்தைக் கொடு!

அது சரி இந்தியா எப்படியுள்ளது?

இந்தியா......................என் சொந்தங்கள் போட்ட சாபத்தில் அழகிழந்து நிற்கிறாள்

1 comments:

அழகான கட்டுரை..

பல வருடங்களுக்கு முன் ( ஜான்சியில்), ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசி விட்டேன். அதற்கு அவர் "இங்கிலாந்து மே ஆங்கிரேசி பாத் கரோ ஹிந்தூஸ்தான் மே இந்தி பாத் கரோ" என்றார்.. மறக்க முடியாத நிகழ்ச்சி.