Monday, April 6, 2009

கருணாநிதியை நம்பி ஏமாந்த எம்மை காப்பாற்றும் கடவுளே!!!!!!!!

ஐயனே சிவனே,

வாடுகின்ற பயிரால்
வாடுவர் சைவர்
எம்பெருமானே தாங்கள்
சைவர் தானே?

கருகிப்போகும் நிலையில்
நாம் வாடும்
வேளை கயிலையில்
உமக்கென்ன வேலை?

சிவபூமி உதிரத்தால்
சிவப்பாய் இருப்பது
சிவனே உமக்கு
இழுக்கல்லவா?

பிரம்மாஸ்திரத்திடம் இருந்து
அர்சுனனைக் காத்த
ஆயர்குலக் கண்ணா,
கருக்கும் நச்சு
ஆஸ்தீரத்திடம் இருந்து
காக்காது தமிழரைக்
கைவிட்டது ஏன்
தானோ?
அதர்மம் ஓங்கிறதே............
நீர் எங்கே?

சிலுவை ஏற்ற
பிரானே,
உம்மிலும் எம்முறவுகள்
துயர் ஏற்றுவிட்டனர்!
இனியும் இரங்காதது
நீதியோ தேவனே?

உமறுப் புலவன்
பாடிய தமிழால்
மகிழ்ந்த அல்லாவே
ஈழத் தமிழ்
மறைவது முறையாகுமா?

புத்தரே,
அன்புக்கு திருவுருவம்
அளித்த வள்ளலே,
உமது திருப்பெயரால்
தமிழ் அழியுதையா!!!
இப்போதும் தியானத்தில்
இருப்பது முறையோ?

நாத்தீகம் நவின்ற
கருணை இல்லாக்
கருணாநிதியை கடவுளாய்
நம்பியதுதான் குற்றமோ!
ஏமாந்துவிட்டோம் இறையே
ஏமாத்திவிடாதீர்!!!!

3 comments:

சோனியாவின் நாடகத்திற்கு வசன்மும்,பாட்டும் எழுதும் பரிதாபத்திற்கு இந்தப் பகுத்தறிவாளத் தமிழர் தள்ளப் பட்டு விட்டார்.

தள்ளியதும் தமிழ்,தமிழர் என்று பேசும் தமிழினத்தை ஏமாற்றும் தமிழ்ர்கள் தான் என்பது வெட்கமும் வேதனையும் தருகிறது.

ஏங்க இதுவரை அதிமேதகு உலக மகா வீரன் என்று போற்றி திரிந்த உங்க தலைவர் ஒரு சைபர் தான்.

கருணாநிதி குடும்பத்துக்கு, சிறை பட்டிருக்கும் இலட்சணக்கான மக்களால் ஏதாவது ஒரு ஒரு இலாபம் என்று சொல்லி விடுங்களேன், அப்புறம் பாருங்கள் கருணாநிதியின் ஆவேசத்தை!