Tuesday, March 30, 2010

தமிழகமே, அகதியை வல்லுறவு செய்தது நியாயமா?

ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தாய்வீடு வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்.......கேவலம்........தமிழக மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?

தன்வீட்டில் வாழமுடியாது தாய்வீட்டுக்கு வந்த திருமணமான ஏதிலிப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?

நெஞ்சை வாட்டி உருக்கி உருக்குலைய வைத்த செய்தியை இங்கு கீழே பதிவு செய்கிறேன்.
"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




காமத்தை நெறியாய் ஒழுக, பாரததேசத்தில் படைக்கப்பட்ட காமசூத்திராவில்கூட "அடைக்கலம் புகுந்த பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொள்ளுதல் கூடாது" என்று புத்திமதி உரைத்திருந்து என்ன பயன்?

ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் காமத்தை எங்கிருந்து பெற்றனர் காவல்த்துறை அதிகாரிகள்? தமிழகம் வந்ததிலும் பார்க்க, ஈழநாட்டிலேயே வாழ்ந்திருக்கலாம் என்றே அப்பெண்ணின் உறவுகளின் மனநிலை இன்று!!!!
கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!

இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கு?? அல்லது ஈழத்தமிழ் அகதிகளுக்குமேல் மட்டும் அவிட்டுவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் இதுவோ? தமிழகமும் பாதுகாப்பில்லை என்று ஈழத்தில் உள்ள ஏனையோருக்கு தோற்றத்தை உருவாக்கி, அகதிகளின் வருகையைக் குறைக்க செய்த சதியோ இது? அதுபோல் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை கற்புக்கு பாதுகாப்பில்லை என்று உணர்த்தி தமிழகத்தை விட்டு வெளியேற்ற மேற்கொண்ட தந்திரோபாயமோ இது?

யார் கண்டது கருணையில்லா நிதி இதுவும் செய்யும்..........இன்னமும் செய்யும்!!!!!!!

வாழ்க கருணையில்லா நிதியின் ஆட்சி!!!!! தொடரட்டும் ஆட்சி...........வீழ்ந்து நொருங்கட்டும் தமிழ் மாண்பு! தமிழ் மறம்!! தமிழ் குலம் !!!

4 comments:

அய்யா நீங்கள் சொல்லுவதை நினைத்தால் இது
கருணாவின் திட்ட மிட்ட சதியாக இருக்ககூடும்
அடுத்து கருணாவே தமிழ் தோல்போத்திய நரிதானே
தமிழன் எப்படி நாசமாக போனால் இவனுக்கென்ன
வலிக்கவா போகுது .

இவ்வளவு கொடுமை நடந்திருக்கிறது. இதைப் பற்றி பதிவுகளில்கூட கருத்தாடல்கள் எதும் காணவில்லையே. உறுதி செய்யப்படாத செய்தியோ?

நீங்களும் செய்தி கிடைத்த இடத்தை பற்றி சொல்லவில்லை. கூகிளினால் தினமலரில் கீழ்கண்ட தகவல் அல்லவா கிடைக்கிறது. நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் நிரைய வேறுபாடுகள் உள்ளனவே?

//
http://74.125.113.132/search?q=cache:UnBDY2jp0D4J:www.dinamalar.com/district_main.asp%3Fncat%3DKarur%26showfrom%3D5/25/2008+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF+(28)&cd=1&hl=en&ct=clnk&gl=us

கடந்த ஃபிப்ரவரி 25ம் தேதி தாந்தோணிமலையை சேர்ந்த பொன்னுசாமி மகன் முரளி, ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த கதிர்வேல் மகன் குமார், செல்வம் மகன் தங்கபாண்டி ஆகியோர் காந்திகிராமத்தில் குழந்தைகள் கொலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கடந்த ஏழாம் தேதி குமார் மனைவி பத்மாவதி(28)யை தனி ப்படை போலீஸார் அழைத்து கொலை தொடர்பாகவும், குமாருக்கு மற்ற நபர்களுடன் இருக்கும் பழக்க வழக்கம் குறித்து விசாரித்தனர். வீட்டுக்கு வந்த பத்மாவதி மனமுடைந்து மண்ணெ ண்ணெய் தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
//

andha police karangala ammanama nikka vachu oru varathirku torture panni sakka adikanum..

ஈழத்து ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. உங்களது பார்வைக்கு தமிழ்வின் இணைய ஊடகத்தின் குறித்த செய்திக்குரிய தொடுப்பைத் தருகின்றேன்.

http://www.tamilwin.com/view.php?2a36QVv4b43Z98g04bcuIPZde2eD1G02cd2OipD2e0dzZLuSce03g2FP3cd4Vjo6a0


தினமலர் என்றைக்கு ஈழத்தமிழருக்கு உண்மையாய் நடந்துள்ளது? தமிழகத்தில் ஊடகங்கள் இந்த விடயத்தை இருட்டடிப்பு செய்துவிட்டனர்..............

தமிழகத்தில் ஆட்சியில் தமிழுணர்வு இல்லாமல் போன கேவலமே இன்றைய தமிழரின் இழிநிலைக்கு காரணம்!!!!