Sunday, January 24, 2010

புலம்பெயர்ந்த உறவுகளே, ஒருகணம் சிந்தியுங்கள்...........இவை உங்களுக்குத் தேவைதானா சொல்லுங்கள்?

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...


மேல் உள்ள வலைப்பூ பதிவை ஒருகணம் படியுங்கள் என் இனிய உறவுகளே!

கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி இவையெல்லாம் எமக்குத் தேவைதான சொல்லுங்கள்? புலம்பெயர்ந்த உங்கள் நிதியில் பெருத்த இந்த நிறுவனங்கள் தமிழை சீர்குலைப்பதை அறியீரோ? உங்கள் பணத்தில் பெருத்து உங்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்த இந்நிறுவன தொலைக்காட்சிகளை கண்டுகளிப்பது மடமையல்லவா?
மடமையில் மூழ்கியிருப்பது எம்குலப் பெருமையாகுமா?

புலம்பெயர் தேசத்தில் உள்ள தோழர்களுடன் உரையாடியபோது சீர்குலையும் எம் இளையோரின் பண்பாட்டை எடுத்துரைத்தனர்.மனம் வெந்தது. பெற்றோரே, நீங்கள் இந்த தொலைக்காட்சிகளை அரவணைப்பது உங்கள் பிள்ளைகளின் பண்பாட்டை சீர்குலைக்க வழிசமைக்க ஏதுவாக்கும். மறவாதீர்!!!!!!!

1 comments:

Helloo pls dont play the fool here.You Sri Lankan tamils first started a campaign against
The movie VETTAKARAN and asked the sri lankan tamils to boycott the movie.But the movie is a succefssful movie.So dont play nasty politics here.You should not forget that South indian cinema or any TV channels in south india is not depending on the sri lankan tamils.