Wednesday, August 19, 2009

அருள்மழை பொழியும் நல்லூரான் தேர்

முருகன் என்றால் அழகன் ஆகும். அழகன் என்பதற்கு பொருள் நல்லூர் முருகன்.யாழை மட்டுமல்ல ஈழ வளநாட்டை அருள்மழையால் ஈர்த்து நல்லருள் பாலிக்கின்ற முருகப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று இனிதே நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ அரோகரா ஒலிகள் விண்ணை முட்ட தந்தைக்கே பிரணவப் பொருளை போதித்த முருகப் பெருமான் தேரேறி நல்லூர் ஆலய வீதியில் வலம்வந்த காட்சியை நேரில் காணும் பேறு கிட்டாதவர்களுக்காய் (என்னையும் சேர்த்து)
நிழற்படங்களை பதிவேற்றுகிறேன். இப்படங்கள் இணையங்களில் இருந்து பெற்றவையாகும்.










Friday, August 14, 2009

தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும்

எங்கள் இன்பத்தை சிதைத்த இந்தியத் தாயே, உனது இன்பநாள் இன்று! வாழ்க! வாழ்க!! வாழ்க!!! தமிழ் மன்னிக்கும் வாழ்த்தும் ஆனால் நீதி?

வள்ளுவன் சிலைகேட்டானா? மானம் கேட்டானா?

சுமுக நிலை
வந்ததென்ற பாவியே
வள்ளுவன் சிலைகேட்டானா?
மானம் கேட்டானா?

பண்டப் பரிமாற்றமாய்
சிலைதிறப்பு
மானங்கெட்டவனே ஒக்கேனக்கல்
எந்தப் பரிமாற்றமாகும்?
வாடும் காவேரி
வருத்தவில்லையா?

குளிரூட்டிய தனமிகு
"தான" வீட்டில்
சக்கரவண்டியில் சொகுசு
மெத்தையில் நேரத்துக்கு
சாப்பாடென வாழும்
உனக்கு
எங்கள் நாட்டில்
சுமுகநிலை எங்கனம்
வந்ததறிந்தாய்?

கோமாளி கூட்டமென்று
கூத்தாடி சொன்னபோது
மானங்கெட்டு அமைதியாய்
இருந்த இழியவன்
நீ!

சீ உன்னை
நம்பி அலையும்
தமிழ் தலைகள்
வெட்கமில்லா அடிமை
சாசனங்கள்!