Monday, July 18, 2011

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய பூசைமொழி சமஸ்கிருதம்

தமிழருடைய இசைமொழி கர்நாடகமும் தெலுங்கும் சமஸ்கிருதமும்

தமிழருடைய நாகரீகமொழி ஆங்கிலம்

தமிழருக்கு தமிழ் எதற்கு?

தமிழருடைய திருமண நிகழ்வில்கூட தமிழ் இல்லை! ஏன் நாகரீகத்தமிழரின் மாப்பிள்ளையின் ஆடையில்க்கூட தமிழ்சால்பு இல்லை!

தமிழருடைய மரண நிகழ்வு பூசையில்கூட சமஸ்கிருதம்!

உலகிலேயே தன்னுடைய மொழியைவிட இன்னொருமொழியை புனிதம்....மந்திரசக்தி என்று கதையளக்கின்ற இனம் இருக்குமென்றால் அது தமிழினம் தான்!

உலகிலேயே தன்னுடைய மொழி அல்லாத இன்னொருமொழியில் பாடி ஆடி குதுகளிக்கும் என்றால் அது தமிழினம் தான்! கேட்டால் இசைக்கு மொழியில்லை!!!!

மெத்தப்படித்த ஒரே இனத்தைச் சார்ந்த இரண்டுபேர் தமதுமொழியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடினால் அது தமிழினம் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதலை சங்கத்தமிழர் கொண்டாடினர். ஆனால் இன்று.....காதலைச் சொல்லக்கூட தமிழை பயன்படுத்த மறுக்கின்றனர் திரையிலும் நடைமுறையிலும்! ஆக; தமிழுக்கு தமிழரிடத்தில் மதிப்பே இல்லை!

இப்போது சொல்லுங்கள் தமிழனுக்கு தமிழ் எதற்கு?

அடப்போங்கோ.....தமிழன் இப்படி உணர்ச்சிபூர்வமாக ஏதேனும் இருந்தால் படித்து ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டு, ஏதேனும் சமாதனம் சொல்லி தன்வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவான்!