Friday, January 11, 2013

ரிசானா - சவூதிச் சட்டத்தை கேள்விகேட்க வந்தவள்! டெல்லி தந்த மோகத்தை தீர்க்கவந்தவள்!

டெல்லிக் கொடூரத்தின்பின் மரணதண்டனையின் அவசியம் உணரப்படலாயிற்று என்பது உண்மைதான். ஆனால் அது சவூதியின் ஷரியச்சட்டத்தின்படியான மரணதண்டனை அல்ல! இந்த யதார்த்தத்தை பலர் புரிந்திலர். ஆனால் இலங்கை மக்கள் ரிசானா என்னும் புனிதவதியூடாக நன்கு புரிந்துகொண்டுள்ளனர். ‘சிறப்பான சிகிச்சை வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். பலன் இல்லை.சிறப்பான தீர்ப்பு வேண்டும்’ என்று பாதிக்க வைத்த கொடியவர்களை சவூதிக்கு அனுப்புங்கள்; பலன் இருக்கும்’’...