இலக்கியத்தின் ஒரு முகம்தான் திரைப்படங்கள். திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் ஆழமானது. இன்றைய ஊடகங்களில் மக்களுக்கு இலகுவாக செய்தியைக் காவக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படங்கள் விளங்குகின்றன. மக்கள் திலகம் எம்ஜியாரை முதலமைச்சராக வந்து அசைக்க முடியாத ஆட்சியின் மூலம் தமிழகத்தை அழகுபடுத்த வைத்ததும் திரைப்பட ஊடகம்தான் என்பது வெள்ளிடைமலை. தமிழ்ப் பற்று இல்லாத ஜெயலலிதாவிடம் அவர் கட்சியினரும் அவரை முதலமைச்சராக்கி அழகுபார்த்த மக்களையும் சரணடையச் செய்திருப்பதும் திரைப்பட ஊடகம் செய்த மாயையே. ஏன் தமிழக முதலமைச்சராக இன்றுள்ள பலதடவைகள்...
Thursday, December 18, 2008
Sunday, November 2, 2008
இரத்மலானையில் ஓர் சைவச் சொத்து
பிள்ளையாரிடம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டுகிறார் ஔவையார் . ஆம்; நான் கல்லூரிக்குள் நுழையும்போது கல்லூரியில் வீற்றிருக்கும் கற்பக விநாயகப் பெருமானின் திருவருளை வணங்காது உள் நுழைவதில்லை. கல்லூரிக் காலத்தில் நாள்தோறும் கற்பக விநாயகனின் நல்லருளாட்சியை நுகர்ந்த அவன் அடியார்களில் நானொருவன் என்பதில் மகிழ்வோடு கூடிய பக்தி எனக்கு.
கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டங்களில் சில துர்சூழல்களால்...
Saturday, October 18, 2008
இலங்கைத் தமிழரின் துன்ப வாழ்வியலை தீட்டிய ஓவியன் என் நண்பன் பாரதி

நான் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் செட்டம்பர் விடுமுறைக்கு தமிழகத்திற்கு என் அன்னையிடம் சென்றிருந்தவேளை என்னோடு ஒன்றாக கல்லூரியில் கல்விபயின்ற ஆருயிர்த் தோழன் காந்தரூபனூடாக பழக்கமான முகம்-பாரதி.
நண்பனின் நண்பன் நண்பனாகும் மேன்மை நட்பின் அழகுகளில் ஒன்றாகும். எனக்கும் பாரதிக்கும் இப்படி காந்தன்(காந்தரூபனை இப்படித்தான் அழைப்பது என் வழமை) நட்பெனும் பாலத்தை வரைந்தான். இலங்கைக்கும் தமிழகதிற்கும் வரையப்பட்ட சேதுபாலம்(இராமபாலந்தானப்பா?) போல் எமக்கு காந்தன் இட்டபாலம்...
Wednesday, October 8, 2008
சரத்குமார் மெல்லத் திருந்துகிறாரா அன்றி நன்றாய் நடிக்கிறாரா?

அண்மையில் நடிகர் சரத்குமார் இலங்கைத் தமிழர் விடயத்தில் வாய்திறக்காது கர்நாடகத்தில் அடிவாங்கிய தமிழ் சினிமாவுக்காக போராட்டம் அறிவித்தபோது ஏற்பட்ட ஆதங்க கவலையில் அவரைப்பற்றி ஒர் கட்டுரை எழுதியிருந்தேன். மாற்றுக் கருத்து இன்றுவரையில்லை. அவரது கட்சி சார்பாக, அண்மையில் வெளியிட்ட அறிக்கை சற்று ஆறுதலாக இருந்தது. எனினும் கலைஞரிடம் எதையும் எதிர்பார்க்காது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் நடிகர் சங்கம் மூலம் ஓர் ஆர்ப்பாட்டம் ஏற்படுத்தினால் அது போற்றக்...
Thursday, October 2, 2008
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சைப் பெரிய கோவில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளவேண்டிய கலை சொத்தாகும். வலைத் தளமொன்றில் தஞ்சைப் பெரிய கோவிலின் புகழ் தீட்டப்பட்டிருப்பது கண்டு அகம் குளிர்ந்தேன். நீங்களும் அகம் குளிர அவா கொண்டு இங்கு இணைந்துள்ளேன்.பெரிய கோவில் பற்றி பிரசுரமான கட்டுரையை படிப்பதற்கு இங்கே அழுத்தவ...
Wednesday, August 20, 2008
சரத்குமாருக்கு தமிழை உச்சரிக்கும் தகுதியில்லை.
என் தமிழக உறவுகளே,
நான் தமிழன் என்னும் உரிமையோடு உங்களுக்கு சில உண்மைகளைப் பரிமாறும் நோக்கில் எழுதுகின்றேன். நடிகர் சரத்குமார் என்று ஈழத்தமிழர் அவரை ரசிப்பர். ஆனால்? நடிகர் சரத்குமார் இலங்கைக்கு உலக இந்துமாநாடு நடந்தவேளை வந்திருந்தபோது முதல்முறை நான் நேரில் கண்டேன். அவரது திருமதியுடன் வந்திருந்தார்.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சி அலைவரிசையில் மின்னல் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி வருகை தந்திருந்தார்.அப்படி ஒருமுறை வந்திருந்தபோது சக்தி தொலைக்காட்சி நிலையத்தில் நேரிலே சந்தித்தேன் இரண்டாம் தடவையாக. நான் அன்று அங்கு வேறு ஒருதேவை காரணமாக சென்றிருந்தேன்....
எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?
எங்கே செல்கிறது எங்கள் தமிழினம்?
ஈழத்தமிழர் வாழ்வியலை தலைப்பின் கருப்பொருளாய் கொண்டு கட்டுரை எழுத்தினால் அரசியல்வாடை அடிப்பதை தவிர்க்கமுடியாது.அதுதவிர்க்கமுடியாதது. தவிர்த்தால் பார்ப்பனீய ஊடகங்களைப்போல் என் எழுத்தும் தமிழால் சபிக்கப்பட்டுவிடும்.எனினும் அரசியல் வாடையைக்குறைக்க இந்த கட்டுரையில் விரும்புகின்றேன். எல்லாம் நல்லதற்கே!
நரகம் உண்டா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் இருக்கட்டும் ஒருபக்கம். நரகத்தைக் பார்க்கவிரும்பினால் வாருங்கள் இலங்கைக்கு. இங்கு தமிழர் நரகத்தில் வாழுகின்றனர் சொர்க்கத்தை உருவாக்கும் கனவில். உளியை எந்தி சிலர் சொர்க்கத்தை...
Monday, August 18, 2008
அம்மா
அம்மா............சைவமும் தமிழும்தமிழ் மண்நினைவும்தந்தை தமையன்தம்பி மீதுள்ளபாசமும்குருமாரிடம் கொண்டபக்தியும்கந்த புராணம்பெரிய புராணம்கற்றுப் பெற்றதல்ல!அம்மா நீ-தந்தபாலாலே என்னுள்வந்ததம்மா!மறு பிறவிநீ பெற்றால்பத்துத் திங்கள்ஒதுக்கிவிடு எனக்காய்-உன்கருவறையை!சிவ லோகம்வைகுண்டம் சொர்கலோகம்எதுவரினும் அதுதுறந்து ஓடோடிவந்திடுவேன் பாரிற்கு!உன் ஓராட்டுஒக்க தமிழ்மறை திருமுறை திருமந்திரம்ஏதேனும் வந்திடு...
இரசியா நங்கை
அழகான நங்கையரின்தேசமிது!அன்ன நடைமின்னல் இடைகொடி ஒக்கமேனிதசும்பொக்க தனங்கள்பிரம்மன் செதுக்கியவதனம்வாழைத் தண்டின்வளத்தைப் பெற்றதங்கக் குறங்குபெண்ணழகுக் களஞ்சியம்இந் நாடே!இரசியா அழகுமாந்தரின் அந்தப்புரம்அரை குறைஅத்தவானம்கிளுடையே கீழாடைபடத்திற்கு பஞ்சம்அம்பலமாகும் அழகுகள்அகத்திணை கண்டதெல்லாம்கனவுஇங்கு அதெல்லாம்நனவுபாரிலே அழகுவல்லியரின் வீடுஇரசியா தானாம்!ஆயினும்பூ இல்லைபொட்டில்லைகொழுநனை பூசிக்கும்புனிதமான அகமில்லைமுழுமதி அழகுதான்வாழின் தெரியும்-வாழஇயலா இடம்அது என்று!மதியில் வாழின்புரியும் பாரின்இலாவணியம்!இரசியா இளங்கொடியைஇல்லக் கிழத்தியாக்கின்தமிழ்...
Sunday, August 17, 2008
புத்தக வாசிப்பும் மென்பொருள் விளையாட்டுக்களும்(TV GAME)
"ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாரதி குழந்தைகளை கொஞ்சுகின்றான். அந்தக் குழந்தைகள் வளமாக வளர்வது பெற்றார்கள், பள்ளி ஆசிரியர்களின் கைகளிலேயே உண்டு. ஒரு குழந்தைக்கு தாய்பால் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நல்லபிள்ளையாக வளர்வதற்கு ஏற்ற சூழல் அமைவது அவசியமாகும்.அவற்றில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்துவது பிரதானமானதாகும்.வாசிப்பு பழக்கம் என்பது சுய அறிவு வளர்சிக்கு அடிப்படையானது. ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பர். அதற்கு இன்றியமையாதது வாசிப்பு பழக்கம். கணனியில் விளையாட்டு மென்பொருட்களை ஏற்றி குழந்தைகளை விளையாடத்தூண்டும்...
தமிழும் துரோகமும்
அப்படியாம் இப்படியாம்உப்படியாம் என்றுஆயிரம் சேதிகள்பழந்தமிழ் நிலம்பற்றி!பெருமை.........!பெருமை.........!பெருமை.........!வேங்கடமும் இன்றில்லை!கதிர்காமத்தில் ஓமுக்கேஇடமில்லை!புத்தளமும் இழந்தமாதிரித்தான்!சென்னை தமிங்கிலநாடாகும் புதினம்பக்கத்தில்த் தான்னுள்ளது!போகப் போகப் தமிழ்நிலம்கரைந்து போகுது!சுனாமியோ கடலரிப்போஅல்ல!கயவர்கள் விட்டவிடுகின்ற தவறுகளால்!தமிழா நீதிருந்தவே மாட்டாயா..........? ************************************************************************************** துரோகத் தமிழா........!உன் கொப்பனின்குருதி தமிழின்வம்சமா?அன்றி உன்கோத்தையின்...
Friday, August 15, 2008
என் வாழ்வியலில் பெண்
கருவறைகுருதிபோசணைதந்தவள்.................தந்தையை காட்டியவள்சுற்றத்தை தெரியவைத்தவள்தமிழோடு சைவத்தைபாலிலே ஊட்டியவள்தாய் எனும்பெண்!அவள் என்தெய்வத்திற்குசமன்!செவிலித் தாயாய்ஓவியம் தீட்டிப்பட்டஆசான்கள் பல!என்னை மகவாய்ஏற்ற ஆசான்கள்சில!அக்கையராய் என்னைஆண்ட உறவுகள்பல!தம்பியராய் என்னைஏற்ற உறவுகள்சில!நட்பெனும் முகவரியில்நான் கண்டபெண்கள் பல!தோழியெனும் உறவைஊட்டியவை சில!தங்கையாய் மிளிர்ந்தவைசில!தங்கையாய் வாழ்ந்தவைசில!வாழ்பவை சில!அண்ணராய் ஏற்றஅழகுகள் ச...
காதல்
நோக்கையில் மின்னல்பாயும்அகத்தில் மீட்டுகையில்இறக்கை பூக்கும்சின்ன சின்னபரிசங்களில் இதயசுருதி தடுமாறும்காமம் கொஞ்சம்விளையாடும்உயிர் நன்றாய்உருகும்வெய்யவுயிர்க்கும் நோய்பற்றிக் கொள்ளும்அகம் தன்நூலகளை பரிமாறிப்படித்திட துடிக்கும்கூடிக் குலாவிவாழ உள்ளம்தூண்டும்இது தான்காதலின் ஓவியம்!காதல் காமத்தின்அழகு படுத்தியமுகம்கல்யாணம் அதன்அனுமதிப் பத்திரம்நாலுபேர் நவிலக்கேட்ட துண்டு!எண்பதில் தம்பதிகள்பரிமாறும் கொஞ்சுதமிழ்.......என்னங்க இந்தமாத்திரை...........நீ போய்த்தூங்கு முதல்ல.........இதன் வடிவம்காமமாயின் காதல்காமமாகவே இருக்கட்டு...
தடை
என் பேச்சுக்கு.............என் எழுத்துக்கு..........என் செயலாக்கத்திற்கு.............தடைகள் பூக்களாம்!கனவுலகில் நான்மிதப்பதை ?படைத்த பரமனுக்கும்உரிமை யில்லை-கனவுகாணாதே என்றுஎன்னை கட்டிவைக்க!ஆதலால் கனவுகள்காணுவேன்................கனவுகள் காணுவேன்..............கனவுகள் காணுவேன்.................
Thursday, August 14, 2008
தமிழ்
***********************************************************************************அந்த சிவனின்மகளேஎன்னை யாளும்தமிழேதமிழகம் உன்மாராப்பு!ஈழம் உன்பாவாடை!இல்லை இருக்குசர்ச்சைக்கு இடமளிக்கும்இடை-இராமன்இட்ட பாலமோ!***********************************************************************************யாழ் என்றுபறைகையிலே தேன்பாயுது நாடிநாள மெங்கும்!மட்டு நகர்என்றதுமே மறம்மெய்யில் ஊறுது!திரு கோணமலை சிவனருளைஎன்னுள் கூட்டுது!வன்னி என்றதுமேதமிழ் காப்பகமாய்மலர்ந்துள்ள நிதர்சனம்என்னைத் தலைநிமிரசெய்யுது!புத்தளம் என்றதுமேதமிழ் முத்துகள்தோன்றுது!ஈழத்தின் வடகிழக்குஎன்றதுமே...
Tuesday, August 12, 2008
6:12 PM
No comments
வணக்கம்
என் நெஞ்சில் பூக்கும் பூக்களின் வாசத்தை தமிழ் பாரோடு பகிரும் உவகையில்................."பறைவேன்"நன்றியுடன் திவியரஞ்சினி...